என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஆஸ்பத்திரி வளாகத்தில் 5 மாடி கட்டிடம் பல்வேறு சிகிச்சை பிரிவுகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
    • தீவிபத்தில் ஆஸ்பத்திரியில் இருந்த பல்வேறு உபகரணங்கள், மின்சாதனங்கள் சேதம் அடைந்துள்ளன.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிநோயாளிகளாக தினமும் சுமார் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள். இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் 5 மாடி கட்டிடம் பல்வேறு சிகிச்சை பிரிவுகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டிடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2-வது மாடியில் பேட்டரி, இன்வெர்ட்டர் வைக்கப்பட்டு இருந்த அறையில் திடீரென தீப்பிடித்தது. ஒயர்களில் தீப்பற்றி மளமளவென தீ பரவிக்கொண்டே சென்றது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது.

    உடனே 2-வது தளத்தில் இருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடனடியாக அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். புகை மூட்டத்தில் சிக்கிய சில நோயாளிகள், மருத்துவ பணியாளர்கள், நர்சுகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    புகைமூட்டம் 3-வது மற்றும் 4-வது தளங்களுக்கும் பரவியது. இதனால் அங்கிருந்தவர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். முண்டியடித்துக் கொண்டு ஓடியதால் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆஸ்பத்திரி முழுவதும் இருள் சூழ்ந்தது. தீயணைப்பு வீரர்கள், ஆஸ்பத்திரி பணியாளர்களுடன் இணைந்து செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்தனர். மறுபுறம் தீயை அணைக்கும் பணியும் தீவிரமாக நடந்தது.

    சம்பவம் குறித்து அறிந்த ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன், போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அதிரடிப்படை போலீசாரும் வரவழைக்கப்பட்டு, துரிதமாக செயல்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தவர்களை வெளியே கொண்டு வந்தனர்.

    சற்று நேரத்தில் தீ மற்றும் புகை பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்தனர். அதன்பின்னரே அனைவருக்கும் நிம்மதி ஏற்பட்டது.

    பேட்டரி வைக்கப்பட்டு இருந்த பகுதியில் புகைமூட்டம் வெளியேற நேரமானதால் அந்த பகுதிகளில் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து புகையை வெளியேற்றினர்.

    இதுகுறித்து கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் ஆகியோர் கூறுகையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தானியங்கி தீயணைப்பான் உடனடியாக இயங்கியதால் பெரும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மீட்பு படையினரும் தீயை வேகமாக கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்துவிட்டனர். நோயாளிகள் மாற்று இடத்திற்கு உடனடியாக கொண்டு சேர்க்கப்பட்டனர் என்றனர்.

    இந்த தீவிபத்தில் ஆஸ்பத்திரியில் இருந்த பல்வேறு உபகரணங்கள், மின்சாதனங்கள் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக இன்வெர்ட்டர் அறையில் இருந்த 25-க்கும் மேற்பட்ட பேட்டரிகள் கருகிவிட்டன. சேத விவரம் குறித்து விசாரணை நடத்து வருகிறது.

    • வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும், பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறுகிறது.
    • தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.45,855 கோடி வருவாய் கிடைக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளுடன் இணைந்த நிலையில் 2,919 மது அருந்தும் பார்களும் இருக்கின்றன. டாஸ்மாக் மதுக்கடைகளில் தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கும், வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும், பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறுகிறது.

    அந்த வகையில், இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ந்தேதிகளில் 2 நாட்கள் ரூ.400 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதையும் தாண்டி மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.

    38 மாவட்டங்களில் உள்ள மாவட்ட மேலாளர்கள் அந்தந்த பகுதிகளில் மது விற்பனை நிலவரத்தை தெரிவித்த நிலையில், சென்னை, திருச்சி, சேலம், மதுரை, கோவை ஆகிய 5 மண்டல மேலாளர்கள் விற்பனை விவரத்தை வெளியிடவில்லை. இதேபோல், சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இருந்தும் புத்தாண்டு மது விற்பனை தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

    இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, துறையின் அமைச்சர் (செந்தில் பாலாஜி) புத்தாண்டு மது விற்பனை தொடர்பாக எந்தவித தகவலையும் வெளியிட்டுவிடக்கூடாது என்று உத்தரவு போட்டிருப்பதாக தெரிவித்தார்.

    ஆனாலும், டிசம்பர் 31, ஜனவரி 1-ந்தேதிகளில் சுமார் ரூ.430 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது புத்தாண்டு மது விற்பனையில் தமிழ்நாடே முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, தெலுங்கானாவில் ரூ.402 கோடிக்கும், ஆந்திராவில் ரூ.328 கோடிக்கும், கர்நாடகாவில் ரூ.308 கோடிக்கும், கேரளாவில் ரூ.108 கோடிக்கும் (டிசம்பர் 31-ந்தேதி மட்டும்), புதுச்சேரியில் ரூ.50 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது.

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.45,855 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆயத்தீர்வை மற்றும் கலால் வரிகள் மூலம் இந்த அளவுக்கு பணம் கிடைக்கிறது என்றாலும், தமிழக அரசு வாங்கியுள்ள கடனுக்கு ஆண்டு வட்டித் தொகைக்கு கூட இந்தப் பணம் போதுமானது அல்ல.

    அதாவது, தமிழக அரசு வாங்கியுள்ள கடனுக்கு வட்டியாக ரூ.63,722 கோடியை ஆண்டுதோறும் கட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

    • அடுத்த இடத்தில் கேரளா, கர்நாடகம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.
    • தமிழகத்தில் வாகனங்கள் பதிவில் சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முதலிடத்தில் உள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் 1,373 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இங்கு கடந்த ஆண்டு (2024) மட்டும் 2 கோடியே 61 லட்சத்து 83 ஆயிரத்து 620 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2023-ம் ஆண்டு 2.40 கோடியாகவும், 2022-ம் ஆண்டு 2.15 கோடியாகவும், 2021-ம் ஆண்டு 1.89 கோடியாகவும் உள்ளன.

    அதேபோல் வாகன பதிவு உள்ளிட்ட பரிமாற்றங்கள் மூலம் அரசுக்கு ரூ.98 ஆயிரத்து 494 கோடியே 99 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டான 2023-ம் ஆண்டு ரூ.87 ஆயிரத்து 670 கோடி வருமானம் வந்திருந்தது.

    தேசிய அளவில் வாகன பதிவில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதன்பின் மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடக, குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

    ஆனால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகனப்பதிவு, வாகனப்பதிவை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளில் அதிக பரிமாற்றங்கள் என்ற அடிப்படையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு 98 லட்சத்து 47 ஆயிரத்து 334 பரிமாற்றங்கள் நடந்துள்ளன. அடுத்த இடத்தில் கேரளா, கர்நாடகம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.

    வாகனங்கள் பதிவு உள்ளிட்டவை மூலம் வருமானம் ஈட்டியதில் வாகனங்கள் முதல் இடத்திலும், 2-வது இடத்தில் கர்நாடகமும், 3-வது இடத்தில் தமிழகமும், 4-வது இடத்தில் உத்தரபிரதேசமும், 5-வது இடத்தில் கேரளாவும் உள்ளன. இந்த பட்டியலின்படி, நாட்டிலேயே தென்மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.

    தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 148 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. அதில் கடந்தாண்டு (2024) 19 லட்சத்து 53 ஆயிரத்து 513 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2023-ம் ஆண்டு 18.26 லட்சமும், 2022-ம் ஆண்டு 17 லட்சமும், 2021-ம் ஆண்டு 15.15 லட்சமும் பதிவாகி இருக்கின்றன. அதேபோல் தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ.10 ஆயிரத்து 76 கோடியே 64 லட்சம் வருவாய் இருந்தது. இது முந்தைய ஆண்டினை (2023) விட 33.29 சதவீதம் ஆகும். கடந்த 2023-ம் ஆண்டு ரூ.7 ஆயிரத்து 560 கோடியும், 2022-ம் ஆண்டு ரூ.6 ஆயிரத்து 449 கோடியும், 2021-ம் ஆண்டு ரூ.5 ஆயிரத்து 10 கோடியும் வருவாய் இருந்தது.

    தமிழகத்தில் வாகனங்கள் பதிவில் சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் பூந்தமல்லி, 3-ம் இடத்தில் கோவை வடக்கு, 4-வது இடத்தில் தாம்பரம், 5-வது இடத்தில் கோவை தெற்கு உள்ளது. ஆனால் அதேநேரத்தில் வருவாய் ஈட்டி தருவதில் சென்னை மேற்கு முதலிடத்திலும், 2-வது இடத்தில் சென்னை தெற்கு, 3-வது இடத்தில் சென்னை மத்தியம், 4-வது இடத்தில் தாம்பரம், 5-வது இடத்தில் பூந்தமல்லி ஆகிவையும் இருக்கின்றன.

    • இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது.
    • மதுவும் போதையும்தான் பாலியல் வன்கொடுமை நடக்க காரணம் என்றார் சவுமியா அன்புமணி.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பா.ம.க. சார்பில் சவுமியா அன்புமணி தலைமையில் 300க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்களை கைதுசெய்த போலீசார் திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்தனர். மாலை 6 மணிக்கு சவுமியா மற்றும் அவரோடு கைது செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் விடுவித்தனர்.

    இந்நிலையில், சவுமியா அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    எங்களை கைது செய்ய முதல் ஆளாக வருகிறார்கள். எங்களை கைது செய்ய வந்த காவல்துறை பெண் குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கலாமே.

    பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. கடந்த இரு ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை இரு மடங்கு அதிகரித்துள்ளது.

    வட இந்தியாவைப் போல தமிழ்நாட்டிலும் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. எங்கள் குழந்தைகளை எப்படி வெளியே அனுப்புவது? உங்களுக்கும் பெண் குழந்தை உள்ளது.

    இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது.

    எங்கள் போராட்டத்தால் தான் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். மறுபடி மறுபடியும் குற்றம் செய்யக்கூடிய மனநோயாளி ஞானசேகரன். இதுவரை ஏன் குண்டர் சட்டத்தில் அவரை அடைக்க வில்லை.

    மதுவும் போதையும்தான் பாலியல் வன்கொடுமை நடக்க காரணம் என தெரிவித்தார்.

    • பள்ளிகளை சீரமைப்போம் என தி.மு.க. வாக்குறுதி அளித்திருந்தது.
    • குற்றவாளிகளை காவல்துறை கண்டித்து அனுப்பிவிடுகிறது.

    தமிழகத்தில் பெண்ணிடம் பாலியல் துன்புறத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறை கண்டித்து அனுப்பிவிடுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகள் மீது வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குற்றங்கள் அதிகமாக நடப்பது தெரியக்கூடாது என்பதற்காக காவல் துறை குற்றங்களை பதிவு செய்ய அனுமதி மறுக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். அயனாவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் துன்புறத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறை கண்டித்து அனுப்பிவிடுகிறது."

    "பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்றும் வரும் வன்முறைகளுக்கு மதுரையில் நாளை திட்டமிட்டப்பட்ட பா.ஜ.க. மகளிரணி பேரணியை தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பத்தாயிரம் சிதிலமடைந்த பள்ளிகளை சீரமைப்போம் என தி.மு.க. வாக்குறுதி அளித்திருந்தது. எத்தனை பள்ளிகளை சீரமைத்துள்ளனர் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்."

    "கடந்த ஆண்டு ரூ.90,000 கோடி கடன்; இந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கப் போறீர்கள். வாங்குகிற கடனை என்னதான் செய்கிறீர்கள்? இவ்வளவு கடன் வாங்கியும் பொங்கலுக்கு ரூ.1,000 கொடுக்க முடியவில்லை என்றால், என்ன அரசு நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்?"

    "எனது சாட்டை அடி போராட்டம் புரிய வேண்டியவர்களுக்கு புரியும். எனக்கும் பெண் குழந்தை உள்ளது. தமிழகத்தில் சிஸ்டம் தோல்வி அடைந்துள்ளது. அது சரியாகும் வரை சாட்டை அடி போராட்டத்தை விடப்போவதில்லை. செருப்பு இல்லாமல் நடக்கும் போதுதான் தெரிகிறது தமிழகத்தில் சாலைகள் சுத்தமாக இல்லை. தி.மு.க. ஆட்சி நிச்சயம் அகற்றப்படும்," என்று கூறினார்.

    • எங்கள் விமர்சனங்களுக்கு கூட கலைஞர் நாசுக்காக பதில் கொடுப்பார்.
    • சிறையின் உள்ளே அனுப்பவில்லை என்றால் இங்கேயே நாற்காளியை போட்டு அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து விடுவேன் என்றேன்.

    விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர், தம்பி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுங்கன்னு கலைஞரிடம் நான் தான் சொன்னே்" என்று கூறினார்.

    இதுகுறித்து மேலும் கூறிய அவர், " திமுகவும், பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணியில் இருந்தபோது, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேள்வி கேட்டனர். "நீங்கள் பாமகவுடன் கூட்டணியில் இருக்கிறீர்கள். ஆனால் ராமதாஸ் தினமும் உங்களை விமர்சிக்கிறாரே என்று கேட்டனர். அதற்கு அவர் தைலாபுரத்தில் இருந்து தைலம் வருகிறது என்றார்.

    எங்கள் விமர்சனங்களுக்கு கூட கலைஞர் நாசுக்காக பதில் கொடுப்பார்.

    கலைஞரை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்தபோது, நான் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தேன். அப்போது, ஜி.கே.மணியிடம் ஒரு நாற்காலியை காரில் வைக்கச் சொல்லி சிறைக்கு சென்றேன். ஆனால், அங்கு உள்ளே விடவில்லை. சிறையின் உள்ளே அனுப்பவில்லை என்றால் இங்கேயே நாற்காளியை போட்டு அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து விடுவேன் என்றேன். பிறகு, உள்ளே விட்டனர்.

    உள்ளே கலைஞரை சந்தித்தேன். அவர் இது எல்லாம் உங்களால் தான் நடந்தது என்றார். அவருடன் கூட்டணி வைத்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது என்ற அர்த்தத்தில் கூறினார்.

    கூட்டணி பொதுக்கூட்டம் ஒன்றில், ஏன் இவ்ளோ பாரம் வைத்திருக்கிறீர்கள், துணை முதலமைச்சர் பதவியை தம்பி ஸ்டாலினுக்கு கொடுங்கள் என்று அப்போது கலைஞரிடம் நான் தான் சொன்னேன்.

    பலமுறை ஸ்டாலினிடமும் சொல்லி இருக்கிறேன். நான்தான் அப்பாவிடம் பதவி வழங்க கூறினேன் என்று. அதற்கு ஸ்டாலின், "ஆமாம் ஐயா நீங்கள் தான் சொன்னீர்கள்" என்று கூறுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெறுகின்றன.
    • பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையான போராட்டங்களை தினந்தோரும் முன்னெடுத்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும், தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கோரிக்கை வலுப்பெற்று போராட்டங்கள் நடைபெறுகின்றன.

    அந்த வகையில், இந்த விவகாரம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று சென்னையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், போராட வந்த பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "அண்ணா பல்கலை. மாணவிக்கு நீதியும், தமிழக பெண்களுக்கு பாதுகாப்பும் கேட்டு போராடி கைதான அனைவருக்கும் வாழ்த்துகள்!

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வழங்க வலியுறுத்தியும், தமிழ்நாட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் இன்று போராட்டம் நடத்தி கைதான அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    போராட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மகளிர் சங்க நிர்வாகிகள், அனைத்து சார்பு மற்றும் இணை அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். குற்ற உணர்வில் தவிக்கும் அரசால் ஆயிரமாயிரம் அடக்குமுறைகள் ஏவி விடப்பட்டாலும் அவை அனைத்தையும் முறியடித்து மகளிருக்கு நீதியும், பாதுகாப்பும் பெற்றுத் தரும் வரை ஓயமாட்டோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியாவிலேயே பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
    • திராவிட மாடல் அரசு எந்த சமரசமுமின்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    திராவிட மாடல் அரசை குறை கூற காரணங்களின்றி ஒரே பொய்மை அரைத்து அரைத்து மாக்களை ஏய்க்க நினைக்கிறார் பொய்ச்சாமி பழனிசாமி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

    பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடு முழுமைக்கும் லட்சத்துக்கு 62 என்றால் தமிழ்நாட்டில் 24 என்ற அளவில் உள்ளது.

    தனது கட்டுப்பாட்டில் இருந்து அதிமுக கைநழுவிடுமோ என்ற அச்சத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஈபிஎஸ் அரசியல் செய்கிறார்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை வைத்து, இழந்த அரசியல் செல்வாக்கை ஈபிஎஸ் மீட்க துடிக்கிறார்.

    இந்தியாவிலேயே பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

    என்சிஆர்பி தேசிய குற்ற ஆவண காப்பகம் இறுதியாக வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி குற்றங்கள் தமிழ்நாட்டில் மிக மிக குறைவாகவே உள்ளது.

    பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6 என்ற அளவிலும், தமிழ்நாட்டில் 0.7 அளவிலும் உள்ளது.

    பெண்கள், குழந்தைகள் நலனிலும், பாதுகாப்பிலும் திராவிட மாடல் அரசு எந்த சமரசமுமின்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    பெண்கள், குழந்தைகளுக்கு எதிராய் வீண் வதந்தி பரப்பி அச்சுறுத்த நினைக்கும் பொய்ச்சாமிகளை மக்களே புறந்தள்ளுவர்.

    திராவிட மாடல் அரசை குறை கூற காரணங்களின்றி ஒரே பொய்யை அரைத்து அரைத்து மக்களை ஏய்க்க நினைக்கிறார் பொய்ச்சாமி பழனிசாமி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 4 பேருக்கு நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    விளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், மனு பாக்கர், ஹர்மன்ப்ரீத் சிங், பிரவீன்குமார் ஆகிய 4 பேருக்கு நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், விருது பெறும் தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த நம் சாதனை வீரர்களுக்கு ஒன்றிய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி!

    கேல் ரத்னா விருது பெற்றுள்ள குகேஷ் மற்றும் அர்ஜூனா விருது பெற்றுள்ள துளசி மதி, நித்தியஸ்ரீ, மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு என் வாழ்த்துகள்! வெற்றிகள் தொடரட்டும்!

    தமிழ்நாட்டில் இருந்து சாதனை படைப்போரின் எண்ணிக்கை வருங்காலங்களில் உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
    • நாளையில் இருந்து வீடு வீடாக ரேசன் கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம்.

    பொங்கல் பண்டிகையையொட்டி 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட ரேசன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன்கள் நாளை (ஜனவரி 3-ந்தேதி) முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் வினியோகம் செய்ய டோக்கன் அச்சடிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது. இப்போது அந்த பணிகள் முடிவடைந்து விட்டது.

    இதைத் தொடர்ந்து நாளையில் இருந்து வீடு வீடாக ரேசன் கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்க தொகை வழங்க கோரி பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    அந்த மனுவில், தேர்தல் நேரங்களில் மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படுகிறது.

    பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்கத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பொதுநல மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • ராகவா நகர் (எஸ்.கொளத்தூர் மெயின் ரோடு), பால்வாடி, மேடவாக்கம் மெயின் ரோடு, கடப்பாக்கல், வைத்தியலிங்கம் நகர்.

    சென்னை:

    சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ஐயப்பன்தாங்கல்: காட்டுப்பாக்கம், செந்துராபுரம், ஸ்ரீநகர், விஜயலட்சுமி நகர், ஜானகியம்மாள் நகர், ஸ்வர்ணபுரி நகர், அடிஷன் நகர், சீனிவாசபுரம், கிருஷ்ணா நகர், மாருதி நகர், நோம்பல், மவுண்ட் பூந்தமல்லி சாலை, ஆயில் மில் சாலை, ஆட்கோ நகர், ஐயப்பன்தாங்கல், சுப்பையா நகர், கிருஷ்ணவேணி அம்மாள் நகர், வசந்தம் நகர், சிவராம கிருஷ்ணா நகர், விஜயலட்சுமி அவென்யூ.

    கோவிலம்பாக்கம்: ராகவா நகர் (எஸ்.கொளத்தூர் மெயின் ரோடு), பால்வாடி, மேடவாக்கம் மெயின் ரோடு, கடப்பாக்கல், வைத்தியலிங்கம் நகர், ராஜிவி நகர் 6-வது தெரு, அப்பல்லோ விடுதி, ஸ்ரீராம் பிளாட், ஏ.ஆர்.ஆர் பிளாட், நாஞ்சில் பிளாட், தினகரன் தெரு, மணியம்மை தெரு, வெள்ளக்கல் பஸ் ஸ்டாண்ட், கண்ணதாசன் தெரு, அண்ணா தெரு, பாரதி தெரு, காந்தி தெரு, பொன்னியம்மன் காலடி 1 முதல் 5-வது தெரு, கலைஞர் நகர், வீரபாண்டி நகர் 1 முதல் 10-வது தெரு, ராணி நகர், அம்பேத்கர் சாலை, முத்தையா நகர், விவேகானந்தர் தெரு, ராஜீவ் காந்தி நகர், பெருமாள் நகர் உள்ளிட்ட சில பகுதிகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 4 பேருக்கு நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    விளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், மனு பாக்கர், ஹர்மன்ப்ரீத் சிங், பிரவீன்குமார் ஆகிய 4 பேருக்கு நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருதுகளை பெற்ற தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நமது உலக செஸ் சாம்பியன் குகேஷ், நாட்டின் உயரிய விளையாட்டு விருதான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது 2024க்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    நமது பாரா தடகள வீரர்கள் மற்றும் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீ சுமதி சிவன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு மதிப்புமிக்க அர்ஜுனா விருதுகள் கிடைத்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

    நம் அனைத்து விளையாட்டு வீரர்களும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறோம். மேலும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இன்னும் பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×