என் மலர்
புதுச்சேரி
- காரைக்கால் பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் தகாத செயல்களில் ஈடுபட்டு வருவகாகவும், அவரை கண்காணித்து கைது செய்யும்படியும் சிலர் ரோந்துபோலீசாரிடம் கேட்டுக்கொண்டனர்.
- போலீசார் விசாரித்தபோது ,அந்த குறிப்பிட்ட வாலிபர் பக்கிரிசாமி(வயது40) என்பதும் கீழகாசாகுடி பகுதியைச்சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
புதுச்சேரி:
காரைக்கால் நகர போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், காரைக்கால் பஸ் நிலையத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிலர், வாலிபர் ஒருவர் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரை கண்காணித்து கைது செய்யும்படி ரோந்து போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர். அதன்படி, போலீசார், குறிப்பிட்ட வாலிபரை கண்காணித்தபோது, அவர், பஸ் ஏற மற்றும் இறங்க வரும் பெண்களை பார்த்து கண்ணடிப்பதும், தொடர்ந்து சென்று இடிப்பதுமாக இருந்தார். பலமுறை இந்த தகாத செயலை உறுதி செய்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவரது பெயர் பக்கிரிசாமி(வயது40) என்பதும் கீழகாசாகுடி பகுதியைச்சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பின்னர், அவரை போலீசார் அங்குள்ள சில சாட்சிகள் முன்னிலையில் கைது செய்தனர்.
- வெளிநாடு செல்ல விரும்பும் ஆரோவில் வாசிகளை நிர்வாகத்தினர் செல்ல விடாமல் பல்வேறு வழிகளில் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
- ஆரோவில் நிர்வாகத்தை கண்டித்தும் ஆரோவில் வாசிகளின் ஒரு தரப்பினர் விசிட்டர் சென்டர் முன்பு திரண்டனர்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரமான ஆரோவில்.
இங்கு நாடு, மதம், இனம், மொழி, அரசியல் என வேறுபாடின்றி 3 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பூமி வடிவிலான மாத்திர் மந்திரியை சுற்றி, அன்னையின் கனவு திட்டமான கிரவுன் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக இடையூறாக இருந்த மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. பசுமை நிறைந்த இயற்கை வளங்களை அழிப்பதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே ஆரோவில்லில், இரு தரப்பினராக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆரோவில் நிர்வாகத்தினர், பல்வேறு யூனிட்களில் பணியாற்றி வரும் சிலரை எந்த அறிவிப்பின்றி பணி நீக்கம் செய்வதாகவும், நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படும் நபர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதே போன்று வெளிநாடு செல்ல விரும்பும் ஆரோவில் வாசிகளை நிர்வாகத்தினர் செல்ல விடாமல் பல்வேறு வழிகளில் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதை கண்டிக்கும் வகையிலும் ஆரோவில் நிர்வாகத்தை கண்டித்தும் ஆரோவில் வாசிகளின் ஒரு தரப்பினர் விசிட்டர் சென்டர் முன்பு திரண்டனர்.
பின் அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சோலார் கிச்சன் வரை கையில் பதாகைகள் ஏந்தி ஒற்றுமை அமைதி பேரணி சென்றனர். அங்கிருந்து மீண்டும் விசிட்டர் சென்டரை வந்தடைந்தனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் மற்றும் ஆரோவில் வாசிகள் கலந்து கொண்டனர்.
- காரைக்கால் நகர் பகுதியில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்ற முதியவரை, நகர போலீசார் கைது செய்தனர்.
- அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் நகர் பகுதியில், புதுச்சேரி அரசால் தடை செய்ய ப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்ற முதியவரை, நகர போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். காரைக்கால் இடும்பன்செட்டி சாலையில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெ க்டர் புருசோத்தமன் உத்தரவின் பேரில், சப்.இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, பெட்டி க்கடையை சோதனை செய்தபோது, புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, கடை உரிமையாளர் காத்த பெருமாளை(வயது68) கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- புபேஷ் குப்தா கடந்த 17 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இயற்கை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து வனவிலங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
- ஆந்திர மாநில கடப்பா மாவட்டத்தில் புலிவேந்தலாவில் அந்த மாநில முதல்-மந்திரியின் நேரடி பார்வையில் நகர வனம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசின் கைவினை கிராமம் முருங்கப்பாக்கத்தில் இயங்கி வருகிறது. சுற்றுலாத் துறையின் கீழ் கைவினைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுஉள்ளன.
கைவினை கலைஞர்கள் மட்டுமல்லாது ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் இங்கு பல்வேறு சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பிடத்தக்க வகையில் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த புதுவை பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் அழிவின் விளிம்பில் உள்ள பறவைகள், மிருகங்கள், பூச்சி வகைகள் போன்றவற்றை சிற்பங்களாக வடிவமைக்கபடுகின்றன.
புதுவை அரசும் சர்வதேச சுற்றுச்சூழல் அறக்கட்டளையும் இணைந்து இந்த விழிப்புணர்வு சிற்பங்கள் உருவாக்கி வருகின்றன. சர்வதேச சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் நிறுவனரான முனைவர் புபேஷ் குப்தா கடந்த 17 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இயற்கை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து வனவிலங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது முயற்சியால் புதுவையை அலங்கரித்து வரும் இது போன்ற சிற்பங்கள் தற்போது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என தென் மாநிலங்களுக்கும் செல்ல தொடங்கியுள்ளன. இங்கு உருவாகும் மிருகங்கள், பறவைகள் போன்றவை திருப்பதி பூங்காக்களிலும் சேலம் சரணாலயங்களும் வண்டலூர் மிருக காட்சி சாலையிலும் மக்களை ஈர்க்கும் வகையில் இயற்கை சூழலுடன் வைக்கப்பட்டு உள்ளது.
தற்போது ஆந்திர மாநில கடப்பா மாவட்டத்தில் புலிவேந்தலாவில் அந்த மாநில முதல்-மந்திரியின் நேரடி பார்வையில் நகர வனம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே புலி, சிங்கம், மான்கள், மயில், பாம்பு உட்பட 50 கற்சிற்பங்கள் புதுவையில் உருவாக்கப்பட்டு அனுப்பப் பட்டுள்ளன. தற்போது வரவேற்பில் வைக்க பிரமாண்ட யானை சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை 250 கிலோ பைபரில் 9½ அடி உயரத்தில் 90 நாட்களில் 10 கலைஞர்களை கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரமாண்ட யானைசிலை ஆந்திராவிற்கு பயணமாக உள்ளது.
- கல்வி கற்க எப்போதும் யாருக்கும் வயது தடையாக இருந்தது இல்லை.
- கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி சுஜாதா ஜடா வெற்றி பெற்றார்.
காரைக்கால் :
நம்மில் பலருக்கு டாக்டராக வேண்டும் எனற கனவு இருந்தாலும், அதற்கான தகுதி இருந்தால் மட்டுமே மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்து சேர்ந்து படிப்பதுடன் மருத்துவ சேவை செய்வதில் சாதிக்க முடியும். அதேநேரத்தில் படிப்புக்கு வயது தடை இல்லை என்பது பலரால் பல வகைகளில் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது. அந்தவகையில் 63 வயதில் பெண் ஒருவர் காரைக்காலில் எம்.பி.பி.எஸ். படித்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
50 வயதாகி விட்டாலே பலர் ஓய்வை தேடும் இந்த காலத்தில், மக்களுக்கு சேவை செய்வதற்காக 63 வயதான சுஜாதா ஜடா, என்ற பெண், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருவது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த ருசிகரம் குறித்த விவரம் வருமாறு:
மத்தியப்பிரதேச மாநிலம் அம்லா பகுதியைச் சேர்ந்தவர் வினோத் யாதவ் (66), இவர் பிரபல தொழிலதிபர். இவரது மனைவி சுஜாதா ஜடா (63). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர், மத்திய பிரதேசத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், ராணுவத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற சுஜாதா ஜடா, தேசிய வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் சுஜாதா ஜடா, ஓய்வு காலத்தை மக்களுக்கு சேவை செய்யும் வகையில் மாற்ற விரும்பினார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்தது டாக்டர் படிப்பு. அதற்கு முன்புபோல் மருத்துவக் கல்லூரியில் உடனே சேர்ந்து விட முடியாது என்பதால் நீட் தேர்வுக்கு தயாரானார்.
அதன் விளைவாக கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி செய்து, கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி சுஜாதா ஜடா வெற்றி பெற்றார். இதனை அடுத்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள விநாயகா மிஷின் மருத்துவக்கல்லூரியில் சுஜாதா ஜடாவிற்கு இடம் கிடைத்தது. தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியாக சுஜாதா ஜடா கல்லூரியில் நுழைந்தார்.
வகுப்பறைக்கு சென்ற சுஜாதா ஜடாவை, கல்லூரி மாணவர்கள் புதிய பேராசிரியை என கருதி கைத்தட்டி வரவேற்றனர். ஆனால், சுஜாதா ஜடாவோ தனது இயல்பான புன்னகையில், நானும் உங்களைபோல் ஒரு மாணவிதான் என்றதும் முதலில் மாணவர்கள் நம்ப மறுத்தனர்.
பின்னர், மாணவிக்கான அடையாள அட்டையை அவர் காட்டியதும், சக மாணவர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். பெற்றோர் வயதில் ஒரு மாணவியா? என ஆச்சரியமாக இருந்தாலும், போகபோக சக மாணவியை போல், அனைவரும் அவருடன் பழகி வருகின்றனர். இதில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சுஜாதா ஜடாவுக்கு வகுப்பு எடுக்கும் மருத்துவ பேராசிரியருக்கு வயது 48.
தனது படிப்பு குறித்து சுஜாதா ஜடா கூறுகையில், ''ராணுவத்திலும், அதன்பிறகு வங்கியிலும் வேலை பார்த்தபோதிலும் எனது கவனம் மக்கள் சேவை என்பதே என்றிருக்கும். கல்வி கற்க எப்போதும் யாருக்கும் வயது தடையாக இருந்தது இல்லை. தன்னம்பிக்கை இருந்தால் போதும். தற்போது எனக்கு வயது 63 என்றாலும் அதை நான் எப்போதும் உணர்ந்தது இல்லை. என் நோக்கமெல்லாம், மருத்துவமனையே இல்லாத எனது கிராமத்தில், சிறு மருத்துவமனை அமைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே குறிக்கோள். அதற்காகதான் முறைப்படி டாக்டருக்கு படித்து சேவை செய்ய உள்ளேன்'' என்றார்.
சுஜாதா ஜடாவின் டாக்டர் கனவு நிறைவேற பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
- புதுவை திரும்பிய ஜெர்மன் இளம்பெண் ஓடும் பஸ்சில் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றது தொடர்பாக உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
- வெளிநாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது பெங்களூருவை சேர்ந்த வாலிபர் என தெரியவந்தது.
புதுச்சேரி:
ஜெர்மன் நாட்டை சேர்ந்த 20 வயது இளம்பெண், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோணமங்கலம் கிராமத்தில் தங்கியிருந்து சமூக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவர், பெங்களூருவில் உள்ள தனது தோழியை பார்க்க அங்கு சென்றார். புதுவை புதிய பஸ்நிலையத்தில் இருந்து பெங்களூரு புறப்பட்ட படுக்கை வசதி கொண்ட தனியார் சொகுசு பஸ்சில் புறப்பட்டு சென்றார்.
நள்ளிரவில் முன் வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையில் இருந்த 23 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென ஜெர்மன் நாட்டு பெண்ணின் படுக்கைக்கு அருகில் காலியாக இருந்த படுக்கையில் வந்து படுத்துக்கொண்டார்.
அப்போது ஓடும் பஸ்சில் அவர் அந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். திடீரென அவரை கட்டியணைத்து வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் கூச்சல் போட்டார். இதனால் பஸ்சுக்குள் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்சை நிறுத்தி விசாரித்ததில் ஜெர்மன் பெண்ணை பலாத்காரத்துக்கு முயன்றது தெரியவந்தது.
உடனே பஸ்சின் டிரைவர், கண்டக்டர் அந்த வாலிபரை கடுமையாக எச்சரித்து பஸ்சில் இருந்து நடுவழியில் இறக்கி விட்டனர். தொடர்ந்து அந்த பஸ் பெங்களூரு புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில் பெங்களூருக்கு சென்று விட்டு புதுவை திரும்பிய ஜெர்மன் இளம்பெண் ஓடும் பஸ்சில் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றது தொடர்பாக உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பஸ்சில் பயணம் செய்தவர்களின் விவரங்களை சேகரித்தனர். அப்போது வெளிநாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது பெங்களூருவை சேர்ந்த வாலிபர் என தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
- கடந்த 2017-2018ல் ரூ.769.96 கோடியாக இருந்த மதுபான வருவாய் ஆண்டுதோறும் உயர்ந்தது.
- சாராயக்கடைகள் மூலம் ரூ.100 கோடியும் கள்ளுக்கடைகள் மூலம் ரூ.1 கோடியும் கிடைத்து உள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் 496 மதுக்கடைகள், 95 சாராய கடைகள், 74 கள்ளுக்கடைகள் உள்ளது.
தற்போது மக்கள் எதிர்ப்பையும் மீறி அதிக அளவில் மது கடைகளும், ரெஸ்ட்ரோ பார்களும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த மதுபான கடைகளில் 30-க்கும் மேற்பட்ட பீர்வகைகள், 100-க்கும் மேற்பட்ட விஸ்கி வகைகள், 200-க்கும் மேற்பட்ட பிராந்தி வகைகள், 30-க்கும் மேற்பட்ட ஒயின்வகைகள், 100-க்கும் மேற்பட்ட ஓட்கா என சுமார் 1500-க்கும் மேற்பட்ட மது வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா காலத்தின்போது மதுபானங்களுக்கு 20 சதவீத சிறப்பு வரி விதிக்கப்பட்டது. இதனால் மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது.
புதுவையில் உள்ள 4 பிராந்தியங்களின் அருகில் உள்ள மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா பகுதிகளை விட பல முன்னணி நிறுவனங்களின் மது வகைகள் இங்கு கிடைப்பதால் மதுபானங்கள் விற்பனை மூலம் கலால்துறைக்கு ஆண்டுதோறும் வருவாய் உயர்ந்து வருகின்றது. இந்த ஆண்டு ரூ.1,393 கோடி மது விற்பனை மூலம் வருவாயாக கிடைத்துள்ளது.
இதுபற்றி கலால்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:-
கடந்த 2017-2018ல் ரூ.769.96 கோடியாக இருந்த மதுபான வருவாய் ஆண்டுதோறும் உயர்ந்தது. கொரோனா காலத்தில் வருவாய் குறைந்தது. தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 2021-ல் ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை தொட்டது. தற்போது முதன் முறையாக கலால்துறை வருவாய் ரூ. 1,393 கோடியாக உயர்ந்துள்ளது.
இது கடந்த நிதியாண்டை விட ரூ.321 கோடி அதிகமாகும். இதில் சாராயக்கடைகள் மூலம் ரூ.100 கோடியும் கள்ளுக்கடைகள் மூலம் ரூ.1 கோடியும் கிடைத்து உள்ளது.
- ஜூவல்லரி மற்றும் வங்கிகளில் போலி தங்க நகைகளை விற்றல், அடமானம் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்கில் ஈடுபட்ட 10 பேர் கைது.
- ஜெரோம், புவனேஸ்வரி ஆகியோருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன், ஜாமின் வழங்கி இருந்தது.
புதுச்சேரி:
காரைக்காலில் உள்ள ஜூவல்லரி மற்றும் வங்கிகளில் போலி தங்க நகைகளை விற்றல், அடமானம் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்கில், காரைக்கால் நகர போலீசார், கடந்த மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட புதுச்சேரி சப்.இன்ஸ்பெக்டர் ஜெரோம், அவரது கள்ளக்காதலி புவனேஸ்வரி, சிவக்குமார், தேவதாஸ், ரிபாத் காமில் உள்ளிட்ட 10 பேரை, கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஜெரோம், புவனேஸ்வரி, சிவக்குமார், தேவதாஸ் ஆகிய 4 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு அளித்திருந்தனர்.
னேஸ்வரி ஆகியோருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன், ஜாமின் வழங்கி இருந்தது. மற்ற 2 பேருக்கு நேற்று ஜாமின் வழங்கியுள்ளது. இந்த 4 பேரும், தினசரி காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் காலை, மாலை என 2 வேளை கையெழுத்து போடவேண்டும் என அந்த நிபந்தனை ஜாமினில் குறிப்பிடபட்டுள்ளது.
- தலத்தெருவில், பழமை வாய்ந்த தங்கமாரியம்மன் கோவில் உள்ளது.
- நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி க்கடனை செலுத்தினர்.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்டம் திருதெளிச்சேரி எனும் தலத்தெருவில், பழமை வாய்ந்த தங்கமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோ விலில் ஆண்டுதோறும் சித்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா, கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொ டங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளான நேற்று மாலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்ன தாக சந்தன காப்பு அல ங்காரத்தில் அருள்பாலித்த மூலவர் தங்க மாரிய ம்மனுக்கும் உற்சவருக்கும் மகா தீபாரா தனை காட்டப்பட்டது. தீக்குளி அருகே தங்க மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி க்கடனை செலுத்தினர். தீமிதியின் போது வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதில் கோவில் அறங்காவல் குழுவினர்கள், ஊர் பொது நல சங்கம் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் பெண்கள் குழந்தைகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
- 1917-ல் ரஷ்யாவில் லெனின் தலைமையில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
- புதுவையில் பஞ்சாலை தொழிலாளர்கள்தான் பெருமளவில் இருந்தனர்.
புதுச்சேரி:
18-ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் நில பிரபுக்கள், ஜமீன்தார்கள், தொழிலதிபர்கள் தங்களிடம் வேலைபார்க்கும் தொழிலாளர்களை நசுக்கி பிழிந்து வந்தனர்.
1986-ம் ஆண்டு மே 4-ந்தேதி அமெரிக்காவில் சிகாகோ நகரில் ரொட்டி தயாரிப்பு நிறுவன தொழிலாளர்கள் அதிக பணி நேர வேலை, குறைந்த கூலி ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 8 தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அன்று தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காரணத்தால் இந்த தகவல் 6 மாதத்திற்கு பிறகு ஜெர்மனில் இருந்த காரல்மார்க்சை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே 1-ந் தேதியை தொழிலாளர் தினமாக கடைபிடிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.
இதையடுத்து பல நாடுகள் மே 1-ந்தேதியை தொழிலாளர் தினமாக கடைபிடிக்க தொடங்கியது. 1917-ல் ரஷ்யாவில் லெனின் தலைமையில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த ஆட்சி மாற்றம் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியது.
இதனால் தொழிலாளர்கள் பல நாடுகளில் தங்கள் உரிமைக்காக குரல் எழுப்பி போராட தொடங்கினர். 1923-ம் ஆண்டு மே 1-ந் தேதி பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னையில் மெரினா கடற்கரையில் சிந்தனைசிற்பி சிங்காரவேலர் முதல்முறையாக தொழிலாளர் தினத்தை கொண்டாடினார்.
இதன் தாக்கம் புதுவையிலும் எதிரொலித்தது. அப்போது புதுவையில் பஞ்சாலை தொழிலாளர்கள்தான் பெருமளவில் இருந்தனர். ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்ஸ், சவானா, கெப்ளே என 3 பஞ்சாலைகள் இயங்கி வந்தது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் 12 மணி நேர வேலைக்கு நிர்பந்திக்கப்பட்டனர். 1936-ம் ஆண்டு கம்யூனிஸ்டு தொழிற்சங்க தலைவர் வ.சுப்பையா தலைமையில் 8 மணி நேர வேலை உரிமைக்காக பஞ்சாலை தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் வலுத்தது.
போராட்டத்தை அடக்க 1936-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி பிரெஞ்சு அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.
இதனால் 1937 ஏப்ரல் 6-ந்தேதி பிரெஞ்சு பாராளுமன்றத்தில் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்காக சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் நகல் புதுவைக்கு கிடைத்தது. அது பிரெஞ்சு மொழியில் இருந்ததால் மொழி பெயர்ப்பு செய்து, தமிழிலில் பாரதிதாசன் வெளியிட்டார். தொழிலாளர்கள் உயிரை இழந்து 8 மணி நேர வேலை உரிமையை பெற்றுத் தந்த போராட்டத்தின் நினைவாக மே தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இன்று 138-வது மே தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. புதுவையிலும் அனைத்து தொழிற்சங்கத்தினரும் கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு, சீருடை, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.
- என்.டி.ஆரை கொலை செய்ய யார் திட்டம் போட்டாரோ அவரையே நல்லவர் என்று ரஜினிகாந்த் பேசுவது தவறு.
- ஆந்திர அரசியலை பற்றி தெரியாத ரஜினிகாந்த் ஐடியாவே இல்லாமல் பேசி தற்போது ஜீரோவாகி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலையொட்டிய சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி விழா கடந்த 22-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் புஷ்கரணி விழாவில் 9-ம் நாள் விழா இன்று நடந்தது.
புஷ்கரணியில் நேற்று மாலை நடந்த கங்கா ஆரத்தியில் நடிகையும், ஆந்திர மந்திரியுமான ரோஜா பங்கேற்று தரிசனம் செய்தார்.
பெரிய நடிகர்களில் பேசி பேசியே ஜீரோ ஆனவர் நடிகர் ரஜினிகாந்த். இதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும். என்.டி. ராமாராவ் மேலிருந்து ஆசிர்வாதம் செய்கிறார் என்று ரஜினிகாந்த் சொன்னது தவறு. ரஜினிகாந்த் ஏதோ தெரியாமல் தவறாக பேசுகிறார் என்று எண்ணினேன். ஆனால் அவர் தெரிந்தேதான் பேசி உள்ளார்.
ரஜினிகாந்த் பேசியதை பார்த்து ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள என்.டி.ஆர். அபிமானிகள், மக்கள் அனைவரும் கோபத்தில் உள்ளனர். என்.டி.ஆரை கொலை செய்ய யார் திட்டம் போட்டாரோ அவரையே நல்லவர் என்று ரஜினிகாந்த் பேசுவது தவறு. அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பம் இல்லாத ரஜினிகாந்த் அழைத்தார் என்பதற்காக சந்திரபாபு நாயுடு வீட்டில் சாப்பிட்டு அவர் கொடுத்த ஸ்கிரிப்ட்டை படித்துள்ளார்.
ஆந்திர அரசியலை பற்றி தெரியாத ரஜினிகாந்த் ஐடியாவே இல்லாமல் பேசி தற்போது ஜீரோவாகி உள்ளார். மற்ற மாநிலங்களுக்கு நடிகர்கள் போகும்போது அந்த மாநிலங்களை பற்றி தெரிந்து பேச வேண்டும். இல்லையென்றால் அமைதியாக இருக்க வேண்டும். ரஜினிகாந்த் தான் பேசியது குறித்து தெளிவாக ஒரு அறிக்கை வெளியிட வேண்டும்.
ஜெகன்மோகன் ரெட்டி மாதிரி ஒரு முதல்-மந்திரியை எங்குமே பார்க்க முடியாது. ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகளை செய்துள்ளார். மாணவர்கள் இடைநிற்றல் கூடாது என்பதற்காக கல்வி உதவி தொகைகளை அதிக அளவில் வழங்கி உள்ளார். இலவச கல்வியை ஆந்திர அரசே கொடுக்கிறது.
சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பவன்கல்யாண், ரஜினிகாந்த் ஆகியோர் தனித்தனியாக வந்தாலும் ஒன்றாக சேர்ந்து வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியை அசைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை ரோஜா ஆந்திராவில் நடிகர் ரஜினியை தாக்கி பேசி இருந்தார். இந்த நிலையில் புதுவையில் மீண்டும் அவரை தாக்கி பேசியுள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்வது அழகிய கடற்கரை சாலைதான்.
- கடற்கரை சாலையை ஹேப்பி ஸ்ட்ரீட்டாக மாற்ற அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்வது அழகிய கடற்கரை சாலைதான். பழைய சாராய ஆலையிலிருந்து டூப்ளே சிலை வரையிலான 1 1/2 கி.மீ. அழகிய கடற்கரை சாலை புரமனேடு பீச் என அழைக்கப்படுகிறது.
கடற்கரை சாலையில் தலைமை செயலகம், பிரெஞ்சு போர்வீரர்கள் நினைவிடம், கார்கில் நினைவிடம், அம்பேத்கர் மணிமண்டபம், காந்தி சிலை, நேரு திடல், சுங்கத்துறை அலுவலகம் என அழகிய கட்டிடங்கள், நினைவிடங்கள் உள்ளது.
இந்த கடற்கரை சாலையை ஹேப்பி ஸ்ட்ரீட்டாக மாற்ற அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. வாகன போக்குவரத்து இல்லாத கடற்கரை சாலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தமது திறமைகளை வெளிப்படுத்த களம் அமைத்து தருவதுதான் ஹேப்பி ஸ்ட்ரீட்டின் நோக்கமாகும்.
ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள திறமைகளை வெளிப்படுத்த விரும்புவோர் இந்த சாலையை பயன்படுத்தலாம். நடனம், நாட்டியம், ஓவியம், வேடிக்கை, விளையாட்டு என எதில் தனி திறமை இருந்தாலும், குழு திறமை இருந்தாலும் மக்கள் முன்பு வெளிப்படுத்தலாம்.
பொதுமக்கள் பாதிக்காத வகையில் ஒரு சிறிய இடம் ஒதுக்கி தரப்படும். அதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம். வெளி நாடுகளில் உள்ளதுபோல புதுவை கடற்கரை சாலையை ஹேப்பி ஸ்ட்ரீட்டாக மாற்ற சுற்றுலாத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.






