search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP petition"

    • காரைக்கால் மாவட்ட கலெக்டரிடம் பா.ஜ.க கோரிக்கை மனு வழங்கி வலியுறுத்தியுள்ளது.
    • வீட்டு வரி, கடை வரி வசூலிக்கும் போது, குப்பை வரி கட்டினால்தான் மேற்கண்ட வரிகளை பெற்றுக் கொள்வோம் என கூறுகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகராட்சியின் கட்டாய குப்பை வரி வசூலை, புதுச்சேரி முதல் அமைச்சரின் வாய்மொழி உத்தரவை ஏற்று, உடனே ரத்து செய்யவேண்டும். என, காரைக்கால் மாவட்ட கலெக்டரிடம் பா.ஜ.க கோரிக்கை மனு வழங்கி வலியுறுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்ட பா.ஜ.க தலைவர் துரைசேனாதிபதி, பா.ஜ.க நிர்வாகிகளுடன், காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை நேரில் சந்தித்து ஓர் கோரிக்கை மனு வழங்கினர். பின்னர், மனு குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-காரைக்கால் மாவட்ட நகராட்சி நிர்வாகம் வீட்டு வரி, கடை வரி வசூலிக்கும் போது, குப்பை வரி கட்டினால்தான் மேற்கண்ட வரிகளை பெற்றுக் கொள்வோம் என நகராட்சி ஊழியர்கள் அடம்பிடிப்பது கண்டனத்திற்குரியது. குப்பை வரி வசூல் குறித்து, புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி, வாய்மொழியாக கூறிய குப்பை வரி ரத்து என்ற ஆணையை, காரைக்கால் நகராட்சி தொடர்ந்து ஏற்க மருத்து வருகிறது. மேலும், எங்களுக்கு அரசிடமிருந்து எழுத்துப்பூர்வமாக எவ்வித அறிவிப்பும் வரவில்லை. என்று, பொதுமக்களிடம் நகராட்சி ஊழியர்கள் தினந்தோறும் விவாதம் செய்துவரும் அவலநிலை நீடித்து வருகிறது. எனவே, மேற்கண்ட பிரச்சனையில் கலெக்டர் உடனே தலையிட்டு, மாநில அரசிடமிருந்து முறையான ஆணை வரும் வரை, குப்பை வரியை தவிர்த்து, எனைய வரிகளை மட்டும் நகராட்சி நிர்வாகம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இது குறித்து, கலெக்டருக்கும், புதுச்சேரி அரசுக்கும் முறைப்படி மனு அனுப்பியுள்ளோம். என்றார்

    • மதுரை வலைவீசி தெப்பக்குளத்தை சுற்றி கட்டிடம் கட்ட அனுமதிக்க கூடாது என கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் மனு அளித்துள்ளனர்.
    • இந்த பகுதியில் நீர்வளம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் முத்துகுமார், ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் ஆன்மீக மையமாக கருதப்படும் மதுரை கோவில்கள் அதிகம் உடைய மாநகரமாகும். இங்குள்ள மீனாட்சி அம்மன் கோவில் புராதன பெருமைகள் உடையது. இங்கு நடக்கும் திருவிழாக்கள், திருவிளையாடல் லீலைகள் பிரசித்தி பெற்றது.

    ஆண்டு தோறும் நடக்கும் சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பு வாய்ந்தது. தெப்பத் திருவிழா, புட்டு திருவிழா, நரியை பரியாக்கிய லீலை, மண்டூக முனிவருக்கு சாப விமோசன லீலை சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலின் வலைவீசி மீன் பிடி திருவிழாவும் பிரசித்தி பெற்றது.

    இதற்காக மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே தனியார் ஆஸ்பத்திரி எதிரே சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் வலைவீசி தெப்பக்குளம் உள்ளது. இந்து சமய அறநிலைய துறைக்கு பாத்தியப்பட்ட இந்த தெப்பக்குளத்தை சுற்றிலும் அரசியல்வாதிகள் தற்போது காங்கிரீட் கட்டிடம், ெசட் அமைக்கும் பணியை செய்து வருகிறார்கள்.

    இந்த தெப்பக்குளம் அந்த பகுதிக்கு முக்கிய நீர்வள ஆதாரமாக உள்ளது. இங்கு கட்டிடம் கட்டுவதால் மீன் பிடி திருவிழாவை பக்தர்கள் காண முடியாத நிலை ஏற்படும். இந்த பகுதியில் நீர்வளம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதுவும் தவிர தெப்பக்குளத்தை சுற்றி கட்டிடம் கட்டுவது, நீர்வள ஆதார அமைப்பு சட்டத்தை மீறும் செயலாகும்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்த கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது இந்த வலைவீசி தெப்பக்குளம் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை இந்து சமய அறநிலைய துறையும் கண்டு கொள்ளவில்லை.

    ஆறு,ஏரி,குளங்களை ஆக்கிரமிக்கவோ, கட்டிடங்கள் கட்டவோ கூடாது. அப்படி கட்ட அனுமதித்தால், அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. மதுரை வலைவீசி தெப்பக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி கட்டிடம் கட்ட நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

    ×