என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மே 30-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது.
    • ஜூன் 1-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இத்தகைய சிறப்புவாய்ந்த சனீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை 5.30 மணி அளவில் ரிஷப வானத்தில் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதனை தொடர்ந்து கொடிமரத்து விநாயகருக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், சந்தனம் இளநீர் விபூதி, பழரசம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து புனிதநீர் கொண்டு அபிஷேகமும் நடைபெற்றது.

    தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் கொடிமரத்தில் கொடியை ஏற்றினர். அதனைத் தொடர்ந்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, மே 23-ந் தேதி அடியார்கள் நால்வர் புஷ்பப் பல்லக்கில் வீதியுலாவும், மே 30-ந் தேதி காலை தேரோட்டமும், 31-ந் தேதி சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதியுலாவும், ஜூன் 1-ந் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில், ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    விழாவை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறுக்கு வருகை தருவார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், சாலை சீரமைத்தல், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்ட வருகின்றது.

    • விறகுகளை வைப்பதில் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
    • வாசுகியின் ஸ்கூட்டரை தீயில் தள்ளி விட்டு எரித்ததாக கூறப்படு கிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நிரவி நடுஓடுதுறை பிள்ளை யார் கோவில் தெருவில் வசிப்பவர் வாசுகி (வயது30). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜசேகர் (50). இவர் ரியல் எஸ்டே தொழில் செய்து வருகிறார். இரு வர்கள் வீட்டின் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் மரபொருட்கள், விறகுகளை வைப்பதில் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில், சம்பவத் தன்று இருவரும் தங்கள் பொருட்கள் போட்டு வைத்திருந்த இடத்தில் குப்பைகளை எரித்ததாக கூறப்படுகிறது. இதில் இரு வருகும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது, ராஜசேகர், வாசுகியை மரக்கட்டையால் தாக்கி, வாசுகியின் ஸ்கூட்டரை தீயில் தள்ளி விட்டு எரித்ததாக கூறப்படு கிறது.

    • அருகில் இருந்தவர்கள் வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர்.
    • காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நேரு நகர் டோபி காலனி தெருவை சேர்ந்தவர் சரவணன் டிரைவர். நேற்று வழக்கம்போல் சரவணன் வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், இவரது கூரைவீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே வீட்டில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மலமலவென எறிய தொடங்கியது. இதனால் காரைக்கால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையில், தீயணைப்புதுறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, தீ அருகிலுள்ள வீடுகளுக்கு பரவாமல் போராடி அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் சரவணனின் தாய் வாசுகியின் இருதய அறுவை சிகிச்சைக்காக வீட்டில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம், எலக்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. இது குறித்து, காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராகுல்காந்தி பிரதமராக வாய்ப்பும் உருவாகி உள்ளது.
    • பா.ஜ.க. ஆட்சியில் கர்நாடக மக்கள் பல இன்னல்களை அனுபவித்துள்ளனர்.

    புதுச்சேரி :

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. இதனால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்து வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.

    புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சியினர் வெற்றியை கொண்டாடினார்கள். புதுவை வைசியாள் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமையில் பட்டடாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

    அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் இணைந்து ஆட்சியை அமைத்தது. 1½ ஆண்டுகளில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தங்களது அதிகார பலம், பணபலத்தை கொண்டு பா.ஜ.க. ஆட்சியை அமைத்தனர்.

    இந்த ஆட்சி அமைந்தது முதல் கர்நாடக மாநில மக்கள் பல இன்னல்களை அனுபவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பாடுபட்டு இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.

    பிரதமர் மோடி பல்வேறு கூட்டங்களில் பேசியும், ஊர்வலம் நடத்திய நிலையிலும் கர்நாடக மாநில மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தெளிவான வெற்றியை கொடுத்து அரியணையில் அமர்த்தியுள்ளனர். இந்த தேர்தல் வெற்றியானது, நடைபெற உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில தேர்தல்களுக்கு முன்னோட்டமாகும்.

    2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியை பிடிக்கும். ராகுல்காந்தி பிரதமராக வாய்ப்பும் உருவாகி உள்ளது. கர்நாடக தேர்தல் மூலம் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை சைபர் கிரைம் போலீசார் சென்னை ஓரகடம் பகுதிக்கு சென்று அசாமுதீன் அன்சாரி, மகேஷ்குமார் 2 பேரையும் கைது செய்தனர்.
    • ஜார்க்கண்டில் இணையதளம் வழியாக பணம் திருட தனி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

    புதுச்சேரி:

    புதுவை துத்திப்பட்டு பகுதி கடப்பேரிகுப்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசர்மா (39). ஜிப்மர் காவலாளி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆன்லைன் செயலி மூலம் வீட்டுக்கான பொருள் வாங்க முயற்சித்தார். ஆனால் பொருள் அவருக்கு கிடைக்கவில்லை.

    இதுகுறித்து விசாரிக்க வாடிக்கையாளர் சேவை பிரிவை இணையத்தில் தேடினார். அப்போது குறிப்பிட்ட செல்போன் எண் கிடைத்துள்ளது. அதில் பேசிய மர்மநபர், கிருஷ்ணசர்மாவின் விவரங்களை குறிப்பிட்ட செயலியில் பதிவிடும்படி கூறியுள்ளார்.

    அதன்படி கிருஷ்ணசர்மா பதிவு செய்தார். அப்போது அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 ¾ லட்சம் மர்மநபர்களால் அபகரிக்கப்பட்டது.

    இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் கிருஷ்ணசர்மா புகார் அளித்தார். விசாரணையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அசாமுதீன் அன்சாரி (30), மகேஷ்குமார் (28) ஆகியோர் வங்கிக் கணக்கில் கிருஷ்ண சர்மாவின் பணம் செலுத்தப்பட்டது தெரிய வந்தது.

    தொடர் விசாரணையில் அசாமுதீன் அன்சாரி, மகேஷ்குமார் இருவரும் சென்னை ஓரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தது தெரிந்தது.

    இதையடுத்து புதுவை சைபர் கிரைம் போலீசார் சென்னை ஓரகடம் பகுதிக்கு சென்று அசாமுதீன் அன்சாரி, மகேஷ்குமார் 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 3 ஏ.டி.எம் கார்டுகள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் தங்களது வங்கி கணக்கை தங்களது சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் உள்ள ஒரு நபரிடம் அளித்துள்ளதாகவும், அதற்காக தங்களுக்கு கமிஷன் கிடைக்கும் என்றும், ஆகவே பணம் தங்களது வங்கிக்கணக்குக்கு எப்படி பரிமாற்றப்படுகிறது என தெரியாது என்றும் கூறியுள்ளனர்.

    கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. ஜார்க்கண்டில் இணையதளம் வழியாக பணம் திருட தனி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த குழுவினர் வடமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் நபர்களின் வங்கி கணக்குகளை வாங்கி கொள்கின்றனர்.

    'ஆன்லைன்' மூலம் திருடப்படும் பணத்தை தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் நபர்களின் வங்கி கணக்கில் செலுத்துகின்றனர். ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி கணக்கு வைத்திருப்பவருக்கு கமிஷனாக கொடுத்து விட்டு, மீதி தொகையை மோசடி கும்பல் பெற்றுக் கொள்கிறது.

    இதனால், மோசடி கும்பலை கைது செய்ய புதுவை சைபர் கிரைம் போலீசார் ஜார்கண்ட் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    • மத்திய அரசின் இந்த நடவடிக்கை புதுவை மக்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளதை காட்டுகிறது.
    • ஏழை மக்களின் நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ரூ.1000 கோடிக்கணக்கில் நிதி வழங்கி அனைத்து துறைகளையும் நவீனப்படுத்தி சிறப்பான சேவையாற்றி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேட்டில் மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமாக ஜிப்மர் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.

    ஜிப்மரில் புதுவை மட்டுமின்றி, தமிழகம் உட்பட தென் மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தென் மாநில பகுதிகளில் இருந்து உயர் சிகிச்சைக்காக நோயாளிகள் ஜிப்மருக்கு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த மார்ச் 16-ந்தேதி 63 வகையான உயர் சிகிச்சைகளுக்கு ஏப்ரல் 1-ந்தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என சுற்றறிக்கை வெளியானது.

    இதற்கு புதுவை அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சேவை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தின. ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்த கவர்னர் கண்டனம் தெரிவித்திருந்தார். ஏழைகளுக்கு இலவச சிகிச்சை ஜிப்மரில் தொடரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த சூழ்நிலையில் ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அந்த அறிவிப்பில், கடந்த 16.3.2023-ந்தேதி வெளியிடப்பட்ட சேவை கட்டண சுற்றறிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ. அசோக்பாபு இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த ஆஸ்பத்திரியில் புதுவை, தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மக்கள் பல நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏழை மக்களின் நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ரூ.1000 கோடிக்கணக்கில் நிதி வழங்கி அனைத்து துறைகளையும் நவீனப்படுத்தி சிறப்பான சேவையாற்றி வருகிறது.

    கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் மத்திய அரசுக்கு தெரிவிக்காமல், ஜிப்மர் இயக்குனர் சேவை கட்டணங்களை அமல்படுத்தினார். இதனால் ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நானும், பா.ஜனதா மாநில செயலாளர் ரத்தினவேல், விவசாய அணி தலைவர் புகழேந்தி ஆகியோர், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், மாநில தலைவர் சாமிநாதன் ஒப்புதலோடு டெல்லிக்கு சென்றோம்.

    டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து மேற்படி ஜிப்மரின் சேவை கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று மத்திய மந்திரி சேவை கட்டணங்களை ரத்து செய்ய துறையின் செயலரை அழைத்து உத்தரவு பிறப்பித்தார். இதன்படி ஜிப்மரில் அமல்படுத்தப்பட்ட சேவை கட்டணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    எங்கள் கோரிக்கையை ஏற்று சேவை கட்டணங்களை ரத்து செய்ய ஆணை பிறப்பித்த மத்திய மந்திரி மன்சுக்மாண்டவியாவிற்கு புதுவை மாநில பா.ஜனதா சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கை புதுவை மக்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளதை காட்டுகிறது. ஜிப்மருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மத்திய அரசு அளிக்கும். ஜிப்மரில் நிலவும் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி பா.ஜனதா சார்பில் உரிய நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாயிகள், தங்களது விளை நிலங்களில் பன்றிகள் அதிக அளவு புகுந்து விளை நிலங்களை பாழ்படுத்தி வருவதால், அவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
    • மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த மாதம் வேளாண்குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் பேசிய பல்வேறு  என கூறினர்.அதன்பேரில், காரைக் கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், காரைக் கால் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உத்தர விட்டார். அதன் பேரில், காரைக்கால் நகராட்சி சார்பில், பன்றி பிடிப்ப வர்கள் வரவழைக்கப்பட்டு, காரைக்கால் கீழகாசாகுடி, தலத்தெரு, அம்மன் கோ வில்பத்து, கருளாச்சேரி, அக்கரை வட்டம், ஓடுதுறை, நேருநகர், தருமபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கடந்த 2 நாட்களாக 130 பன்றிகள் பிடிகப்பட்டு அப்புறப்ப டுத்தப்பட்டது. இது குறித்து, கலெக்டர் குலோத்துங்கன் கூறுகை யில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடை யூறாக உள்ள பன்றிகள் தற்போது நகராட்சி சார்பில் கபிடிக்கபட்டு வருகிறது. இப்பணி இனி ஒவ்வொரு மாதமும் இருமுறை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

    • காரைக்கால் மாவட்த்திலுள்ள பல்வேறு பகுதிகளில், நேற்று மாலை4.30 மணி முதல் திடீரென பனிமூட்டம் போல் புகைமூட்டம் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த புகை மூட்டத்தால் நோய்வாய்ப்பட்டவர்களும், முதியவர்களும் சுவாசக் கோளாறினால் அவதி அடைந்தனர்.
    • இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர், காரைக்கால் மாவட்ட கலெக்டர் ஆகியோர் புகை குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்த உத்தரவிட்டனர்,

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டம் மேல வாஞ்சூர், கீழவாஞ்சூர், நிரவி, திரு.பட்டினம், காரைக்கால் வடக்கு, தெற்கு, கோட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், நாகப்பட்டினம் மாவட்டம் நாகை, நாகூர், வெளிப்பாளையம், புத்தூர், திட்டச்சேரி திருமருகல் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நேற்று மாலை4.30 மணி முதல் திடீரென பனிமூட்டம் போல் புகைமூட்டம் ஏற்பட்டது.   திடீரென ஏற்பட்ட இந்த புகை மூட்டத்தால் நோய்வாய்ப்பட்டவர்களும், முதியவர்களும் சுவாசக் கோளாறினால் அவதி அடைந்தனர். மேலும் புகை மூட்டம், கடற்கரைப் பகுதியை ஒட்டிய பகுதியிலிருந்து வந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர், காரைக்கால் மாவட்ட கலெக்டர் ஆகியோர் புகை குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இதனை அடுத்து நாகப்பட்டினம் தீயணைப்பு துறையினர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் உள்ள பழைய இரும்பு உருக்கும் தொழிற்சா லையிலிருந்து வெளியேறிய புகையினால், பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டிரு ப்பதாக தகவல் வந்தன. மேலும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்மண்டலம் காரணமாக காற்று சுழற்சி இல்லாத காரணத்தி னால், புகை நாகை, காரைக்கால் மாவட்டங்க ளில் பனி போல் சூழ்ந்துள்ள தும் தெரியவந்தது. இதனையடு த்து காரை க்காலில் இயங்கிய இரும்பு உருக்கும் பணியை நிறுத்த நாகப்ப ட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவி ட்டனர். அதன் பேரில், இரும்பு உருக்கும் பணி நிறுத்தப்ப ட்டாலும் அதிலிருந்து தொடர்ந்து புகை வந்து கொண்டு இருக்கிறது. புகைமூட்டம் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையி ல்லை என காரைக்கால் மற்றும் நாகை மாவட்ட கலெக்ட ர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.

    • திருப்பதி தேவஸ்தானம் ஏராளமான புதிய கோவில்களை கட்டி வருகிறது.
    • புதுவையில் உள்ள இடிந்த கோவிலை மட்டும் ஏன் புதிதாக கட்டவில்லை என்று மக்கள் ஆதங்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவில் கட்டப்பட்டிருந்தது. இங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.

    இந்த கோவில் 12 ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த திருப்பதி தேவஸ்தான கோவிலை மீண்டும்

    கட்டக்கோரி, புதுவை மக்கள் தேவஸ்தானத்திடம் பலமுறை புகார் செய்தனர். இதுவரையில் புதிதாக கோவில் கட்டப்படவில்லை.

    புதிய கோவில் கட்ட வலியுறுத்தி புதுவை ஆன்மீக சபைகள், பாகவதர்கள், பொதுமக்கள், திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி ஆகியவை சார்பில் தேவஸ்தான சேர்மன், நிர்வாக அதிகாரிகள், புதுவை முதலமைச்சர், ஆந்திர கவர்னர் மற்றும் ஆந்திர அரசிடமும் கோரிக்கை மனு வழங்கினர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    திருப்பதி தேவஸ்தானம் ஏராளமான புதிய கோவில்களை கட்டி வருகிறது. பழைய கோவில்களை புதுப்பித்து வருகிறது. ஆனால் புதுவையில் உள்ள இடிந்த கோவிலை மட்டும் ஏன் புதிதாக கட்டவில்லை என்று மக்கள் ஆதங்கப்பட்டனர்.

    இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திர அரசை கண்டித்து புதுவை ராஜா தியேட்டர் சந்திப்பில் புதுவை திருக்கோவில் பாதுகாப்பு கமிட்டியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதில் திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டியின் பொதுச்செயலாளர் தட்சிணாமூர்த்தி, செயலாளர் பாலாஜி பாகவதர்கள், ஆன்மீக மன்றங்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் எந்த குறைப்பும் செய்யவில்லை, நிதி பற்றாக்குறையும் ஏற்படவில்லை.
    • ஜிப்மர் வளாகத்தில் மக்கள் மருந்தகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேட்டில் மத்திய அரசு தன்னாட்சி நிறுவனமான ஜிப்மர் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.

    இங்கு புதுவை மட்டுமின்றி, தமிழகம், கேரளா உட்பட தென்மாநிலங்களை சேர்ந்த நோயாளிகள் ஆயிரக்கணக்கில் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஜிப்மரில் 63 வகையான உயர் சிகிச்சைக்கு கட்டணம் வசூலிக்க நிர்வாகம் சுற்றறிக்கை பிறப்பித்தது.

    இதற்கு புதுவை அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    அதோடு ஜிப்மரில் நோயாளிகளுக்கு மருந்துகள் தருவதில்லை, மத்திய அரசு ஜிப்மரை புறக்கணிக்கிறது, டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது என அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் புதுவை ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஜிப்மரில் மருந்துகள், டாக்டர்கள் பற்றாக்குறை என வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. கடந்த 5 ஆண்டில் ஜிப்மருக்கான ஆண்டு நிதி ஒதுக்கீடு உயர்ந்துள்ளது.

    2023-24ம் நிதியாண்டுக்கு ஜிப்மருக்கு ரூ.1,490 கோடியே 43 லட்சம் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    எய்ம்ஸ், சண்டிகர் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் நிதியை விட இது கூடுதல் நிதியாகும். மூலதன வசதிகளை உருவாக்க ரூ.300 கோடி, பொது செலவுகளுக்கு ரூ.355 கோடி, சம்பளத்துக்கு ரூ.835.43 கோடி ஒதுக்கப்பட்டுள்து. மூலதன வசதி மானியம் 2½ மடங்கு அதிகரித்துள்ளது.

    மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் எந்த குறைப்பும் செய்யவில்லை, நிதி பற்றாக்குறையும் ஏற்படவில்லை. கொரோனா தாக்கம் இருந்த நிலையிலும் ஜிப்மரில் நோயாளிகளின் வசதிக்காக டிஜிட்டல் ஆஞ்சியோகிராபி, புதிய லீனியர், கிருமிநீக்க துறை நவீனமயம், அல்ட்ரா சவுண்ட், ஹிமாட்டலஜி அனலைசர், உட்பட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    ஜிப்மர் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்த பல துறைகளிலும் புதிய உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளது.

    பிரதமர், மத்திய அரசின் கொள்கைக்கு ஏற்ப காகித மருந்து சீட்டுகள் தவிர்க்கப்பட்டு மின் சீட்டுகள் வழங்கப்படுகிறது. ஜிப்மரில் 786 பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அனுமதித்துள்ளது.

    இதில் 252 டாக்டர்கள், 431 செவிலியர்கள், 50-க்கும் மேற்பட்ட தொழில் நுட்ப நல்லுர்கள் அடங்குவர். 10 ஆண்டுக்கு பிறகு ஜிப்மரில் புதிய பணியிடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி 70 முதுநிலை டாக்டர்கள், 550 செவிலியர்கள் தேர்வு செய்யும் நடைமுறைகள் நிறைவு பெற்றுள்ளன.

    இவர்கள் இன்னும் 2 மாதத்தில் ஜிப்மரில் பணியில் சேர உள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்ட விதிகளின்படி முழு வசதிகள் வழங்கப்படுகிறது. வெளிப்புற நோயாளிகளுக்கும் தொடர்ந்து இலவச மருந்துகள் வழங்கப்படுகிறது.

    தற்போதுள்ள சேவைகளுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை.

    வழக்கமான இலவச மருந்தகம் தவிர, அம்ரித் மருந்துகம், 24மணி நேர தனியார் மருந்தகமும் அமைக்கப்பட்டுள்ளது. இவை மலிவு விலையில் நோயாளிகளுக்கு மருந்துகள், அறுவை சிகிச்சைக்கு தேவையான கருவிகளை வழங்குகின்றன. ஜிப்மர் வளாகத்தில் மக்கள் மருந்தகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    எப்போதும் போல புதுவை, சுற்றியுள்ள மக்களுக்கும், நோயாளிகளுக்கும் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்குவதில் ஜிப்மர் உறுதியாக உள்ளது. இன்னும் பல உயரங்களை எட்ட முழு சக்தியுடன் ஜிப்மர் செயல்பட்டு வருகிறது.

    ஜிப்மர் பற்றி வெளியாகும் அனைத்து வதந்திகள், தவறான தக வல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜிப்மர் நிர்வாகம் விரும்புகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எதிர்முனையில் பேசியவர் சொன்னதை நம்பி அவர் கொடுத்த கூகுள் பே அக்கவுண்டில் ரூ.1 லட்சம் பணத்தை அட்வான்ஸ் தொகையாக அனுப்பினார்.
    • பெண் புதுவை இணையவழி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை சித்தன்குடியைச் சேர்ந்த ஒரு பெண் வாடகை வீடு கிடைக்குமா என்று ஆன்லைனில் தேடிக் கொண்டிருந்தார்.

    அப்போது புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் 3-வது குறுக்கு தெருவில் ஒரு அப்பார்ட்மெண்டின் பெயர், விலாசம், புகைப்படங்களுடன் 2-வது மாடியில் வாடகைக்கு வீடு தயாராக உள்ளது என ஆன்லைனில் விளம்பரம் இருந்தது.

    அதன் கீழே இருந்த செல் நம்பரை தொடர்பு கொண்டு அந்தப் பெண் வாடகை மற்றும் அனைத்து விவரங்களை கேட்டு தெரிந்துள்ளார்.

    எதிர்முனையில் பேசியவர் சொன்னதை நம்பி அவர் கொடுத்த கூகுள் பே அக்கவுண்டில் ரூ.1 லட்சம் பணத்தை அட்வான்ஸ் தொகையாக அனுப்பினார். பணத்தை அனுப்பிய பிறகு அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்ட போது எடுக்காததால் சந்தேகமடைந்து ஆன்லைனில் கொடுத்த விலாசத்தில் சென்று பார்த்தார்.

    அங்கு அடுக்குமாடி குடியிருப்பு இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அந்த பெண் புதுவை இணையவழி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இது தொடர்பாக இணைய வழி போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி விசாரித்து வருகிறார்.

    மேலும் அவர் பணம் செலுத்திய வங்கிக் கணக்கை சரிபார்த்த போது அது ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. பொதுமக்கள் இது போன்ற ஆன்லைனில் வருகிற தகவலை வைத்து பணத்தை யாருக்கும் செலுத்த வேண்டாம்.

    இத்தகைய விளம்பரங்கள் இணைய வழி மோசடிக்காரர்களால் உருவாக் கப்பட்டு ஏமாற்ற பயன்படுவதால் பொது மக்கள் இணைய வழி விளம்பரங்களை நம்பி யாருக்கும் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என புதுவை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழகத்துடன் நல்ல நட்புறவு உள்ளது. தமிழகத்துடன் ஒத்து இருப்போம்.
    • புதுவை மாநிலம் தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலத்தில் இருப்பதால், பழைய நட்புறவு தொடரும்.

    புதுச்சேரி:

    கடந்த மார்ச் மாதம் புதுவை சட்டசபையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.

    பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை, பிரதி மாதம் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம், புதுவையில் சித்த மருத்துவக்கல்லூரி ஆகியவற்றுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டிருந்தார். இவற்றை தொடங்கி வைக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த மாதம் 6-ந் தேதி புதுவைக்கு வர உள்ளார்.

    2 நாட்கள் புதுவையில் தங்கியிருக்கும் அவர், இந்த திட்டங்களை எல்லாம் தொடங்கி வைக்கிறார்.

    இந்த தகவலை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    புதிய சட்டசபை கட்டுவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

    பணிகள் முழுமையாக முடிந்தபிறகு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்றார்.

    தமிழக எம்.பி.க்களுக்கு புதுவையில் வேலை இல்லை என்று கவர்னர் தமிழிசை விமர்சனம் செய்துள்ளாரே.? என்ற கேள்விக்கு தமிழகத்துடன் நல்ல நட்புறவு உள்ளது. தமிழகத்துடன் ஒத்து இருப்போம். இது தொடரும்.

    புதுவை மாநிலம் தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலத்தில் இருப்பதால், பழைய நட்புறவு தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×