search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் திருமண விழாவில் பெண் வக்கீலிடம் அநாகரீகம்முதியவர் மீது வழக்கு
    X

    காரைக்காலில் திருமண விழாவில் பெண் வக்கீலிடம் அநாகரீகம்முதியவர் மீது வழக்கு

    • தனியார் திருமணமண்டபத்தில் உணவு சாப்பிட்டு விட்டு கைகழுவி உள்ளார்.
    • பெண் வக்கீலை பின்புறம் தட்டி அநாகரீகமாக நடந்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் அப்பாவு நகரைச்சேர்ந்த பெண் வக்கீல் ஒருவர் காரைக்கால் மேடு ஸ்ரீ ரேனுகாதேவி அம்மன் கோவிலில் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு அன்று பகல், காரைக்கால் காமராஜர் சாைலைய ஒட்டிய தனியார் திருமணமண்டபத்தில் உணவு சாப்பிட்டு விட்டு கைகழுவிய போது, பின்னால் நின்றிருந்த, காரைக்கால் நகர் பகுதியைச்சேர்ந்த மோகன்(52) பெண் வக்கீலை பின்புறம் தட்டி அநாகரீகமாக நடந்துள்ளார். இது குறித்து, பெண் வக்கீல் காரைக்கால் நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மோகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×