என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுபாரில்  லாரி டிரைவருக்கு அடி உதை: 2 பேர்  கைது
    X

    மதுபாரில் லாரி டிரைவருக்கு அடி உதை: 2 பேர் கைது

    • நாகப்பட்டினம் மாவட்டம் கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
    • காயம் அடைந்த தர்மராஜை, அவரது நண்பர்கள் காரைக்கால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    புதுச்சோ

    காரைக்கால் அருகே விழிதியூர் மதுபாரில், மது போதையில் லாரி டிரைவரை அடித்து உதைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ்(வயது43). இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வேலைகளை முடித்துவிட்டு, நண்பர்களுடன் காரைக்கால் அருகே உள்ள விழிதியூரில் உள்ள மதுபான கடையில் மது அருந்திவிட்டு வெளியே சென்றபோது, அதே ஊர் தெற்குத்தெருவைச்சேர்ந்த சந்தோஷ்(24), முருகானந்தம்(23) ஆகிய 2 பேர் மோட்டார் சைக்கிளில் தர்மராஜ் மீது மோதுவது போல் வந்துள்ளனர். இதை தட்டிகேட்ட தர்மராஜை, 2 பேரும் ஆபசமாக திட்டி, அடித்து, உதைத்துள்ளனர். இதில் காயம் அடைந்த தர்மராஜை, அவரது நண்பர்கள் காரைக்கால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் கொடுத்த புகாரின் பேரில், நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×