என் மலர்
புதுச்சேரி
- வினோத் சாலையில் ரெபிலெக்டர் பெயிண்ட் அடிக்கும் வேலைச் செய்து வருகிறார்.
- 3 பேரையும் ஆபசமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் சிவபுராணி மேலத்தெருவைச்சேர்ந்தவர் வினோத்(வயது26). இவர், காரைக்கால் மானம்பாடியைச்சேர்ந்த ராஜேஷ்கண்ணா என்பவரிடம், சாலையில், ரெபிலெக்டர் பெயிண்ட் அடிக்கும் வேலைச் செய்து வருகிறார். காரைக்காலை அடுத்த நெடுங்காடு சாலையில், நண்பர்கள் தஞ்சவூரைச்சேர்ந்த எட்வின்ராஜ்(18), சஞ்சய்(18) ஆகிய 2 பேருடன் சேர்ந்து சாலையின் நடுவே பெயிண்டு அடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, காரைக்கால் திருநள்ளாறைச்சேர்ந்த கார்த்தி((27), ராஜேஷ்(24) ஆகிய 2 பேர் மோட்டார் சைக்களில் சென்று, 3 பேரையும் ஆபசமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, வினோத், நெடுங்காடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் தேடிவருகின்றனர்.
- ஏரியிலிருந்து அரசு விதிகளுக்குட்பட்டு மண் அள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
- பேச்சுவார்த்தைக்கு வந்த எம்.எல்.ஏ- அதிகாரிகளுடன் வாக்குவாதம்
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த நல்லம்பல் ஏரியில், அரசு திட்டங்களான விழுப்புரம் நாகை நான்கு வழி சாலை, காரைக்கால்-பேரளம் அகல ெரயில்பாதை திட்டம், கேந்திரவித்யாலயா உள்ளிட்ட பணிகளுக்காக, ஏரியிலிருந்து அரசு விதி களுக் குட்பட்டு மண் அள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாக, அரசு விதிகளை மீறி, அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப் பட்டு வருவதாகவும், சில சமயம் மேற்கண்ட அரசுத் திட்டங்களை தவிர, தமிழகத்திற்கு மணல் கொண்டு செல்லப்படுவ தாகவும் குற்றசாட்டு எழுந்தது. இந்த அளவுக்கு அதிகமான மணல் கொள்ளையை, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வந்த நிலையில், அளவுக்கு அதிக மான மணல் எடுப்பது நிறுத்தப்படவில்லை.
தற்போது, குறுவை நடவு நடவுள்ள நிலையில், ஏரியில் மிக ஆழமாக மண் எடுப்பதால், நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்ப தால், சம்பா நடவு கேள்விக் குறியாகும் என, ஏராளமான விவசாயிகள், கிராம மக்கள், ஏரியிலிருந்து மணல் ஏற்றிவந்த லாரி களை நேற்று சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும், நல்லம்பல் ஏரிக்கு செல்லும் வழியை யும் இரும்புத் தடுப்புகளால் தடுத்தனர். மணல் அள்ளிக் கொண்டிருந்த ஜே.சி.பி. உள்ளிட்ட எந்திரங்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விபரம் அறிந்த மாவட்ட துணை கலெக்டர் பாஸ்கரன் (பேரிடர் மேலாண்மை), தாசில்தார் பொய்யாத மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாத தால், தொகுதி எம்.எல்.ஏ சிவா சம்பவ இடத்திற்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என மக்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த எம்.எல்.ஏ சிவா மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரி மகேஷ் (நீர்வளம்) ஆகி யோரை, கிராம மக்கள் முற்றுகையிட்டு மணல் கொள்ளையை தடுக்கா ததற்கு கண்டன கோஷம் எழுப்பியதோடு, வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, எம்.எல்.ஏ சிவா பேசியதாவது:-
நல்லம்பல் ஏரியில் வயல் மட்டத்திலிருந்து அளவெ டுத்து முறைப்படி மணல் அள்ளப்படுகிறது. இதில் முறைகேடு நடக்க வாய்ப் பில்லை. மணல் அள்ளும் இடங்களில் ஆழம், அகலம், நீளத்தை அளந்து வரு கிறோம். மண்ணை அள்ளிய பிறகு பள்ளங்களை ஏரியின் மற்ற பகுதியில் இருந்து மண்ணை எடுத்து சமன் செய்வோம். என்றார். இதில் உடன்பாடு ஏற்ப டாததால், மக்கள் சிறை பிடித்த லாரிகளை விடு விக்க முடியாது என தொடர்ந்து போராடினர். இதனால் அங்கு அசம்பா விதங்கள் நடை பெறாமல் இருக்க போலீசார் பாது காப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர்.
- கார்த்திகேயன் காரைக்கால் ெரயில் நிலையத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்.
- காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 2 பேரையும் கைது செய்தனர்.
புதுச்சேரி:
தஞ்சாவூர் திருவையாறு பங்களாத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது42). இவர் திருச்சி டிவிசனுக்கு உட்பட்ட காரைக்கால் ெரயில் நிலையத்தில், ெரயில் பாதுகாப்பு வீரராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் நள்ளிரவு, காரைக்கால் ெரயில் நிலையத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ெரயில் நிலையத்தின் தங்கும் அறை அருகே, 2 ேபர் புகை பிடித்து கொண்டிருந்தனர். அதை பார்த்த கார்த்திகேயன், இங்கே புகை பிடிக்க கூடாது என கண்டித்துள்ளார். அதற்கு, நாங்கள் யார் என தெரியாமல் பேசுகிறீர்கள் என கூறி தகாதவார்த்தைகளால் திட்டி கார்த்திகேயனை 2 பேரும் தாக்கியுள்ளனர். கார்த்திகேயனின் சத்தம் கேட்டு மற்ற ஊழியர்கள் அங்கு ஓடிவந்தனர். இதைப்பார்த்த 2 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். தப்பி ஓடியவர்கள் பற்றி விசாரித்தபோது அவர்கள், காரைக்கால் இந்திராநகரைச்சேர்ந்த பைசல் (34), ரிஸ்வான் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த கார்த்திகேயன், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அங்கு அவர் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 2 பேரையும் கைது செய்தனர்.
- காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
- புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்கால் பஸ் நிலையம் அருகே, தனியார் மதுபான கடையை ஒட்டி, தள்ளு வண்டி பெட்டிக்கடை ஒன்றில்புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
அதன்பேரில் உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார், கடையை சோதனை செய்த போது அங்கு புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட 2 ஆயிரம் மதிப்புள்ள 40 புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் காரைக்கால் பெசன்ட் நகரைச் சேர்ந்த காதர் பாட்ஷாவை கைது செய்தனர்.
- மர்ம நபர்கள் எடுத்த துணி களுக்கு பில் வழங்கப்பட்டு பணம் செலுத்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
- பணம் செலுத்தாமல் கடை ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி தப்பியுள்ளனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத் தில் பிரதான சாலையான பாரதியார் வீதியில் அன்சாரி என்பவர் துணிக் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று இரவு காரில் வந்த 5 பேர், அந்த கடையில் விலை உயர்ந்த துணிகள் எடுத்த னர். தொடர்ந்து மர்ம நபர்கள் எடுத்த துணி களுக்கு பில் வழங்கப்பட்டு பணம் செலுத்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள், பணம் செலுத்தாமல் கடை ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி, அவர்களை தாக்கி விட்டு துணிகளை எடுத்துக்கொண்டு காரில் தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து கடை ஊழி யர்கள் நகர போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீஸ் சூப்பிரண்ட் சுப்ரமணியம் தலைமையிலான போலீசார் அந்த கடையில் பணிபுரிந்த ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். மேலும் கடை யில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி, போலீசார் வழக்கு பதிவு செய்து 5 மர்ம நபர்களை தேடி வரு கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிவபெருமான் திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார்.
- காரைக்கால் அம்மையார் கோவில் மணிமண்டபத்தில் பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம்:
சிவபெருமான் திருவாயால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித் திருவிழாவை, காரைக் காலில் உள்ள மும்முதத்த வர்களும் ஒரு மாதக்காலம் சகோதர ஒற்றுமையுடன் கொண்டாடிவருகின்றனர்.
இந்த ஆண்டு காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித்திருவிழா, வருகிற 30-ந் தேதி மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கி, ஒரு மாதக்காலம் நடைபெறவுள்ளது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் அம்மையார் கோவில் மணிமண்டபத்தில் பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவல் குழு தலைவர் வக்கில் வெற்றிசெல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கீல் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி மற்றும் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 1-ந் தேதி காலை ஸ்ரீ புனிதவதி யார் தீர்த்தகரைக்கு வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து, காரைக்கால் அம்மையா ருக்கும் பரமதத்த செட்டி யாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். ஜூலை 2-ந் தேதி காலை சிவபெருமான் பிச்சாண்ட வர் கோலத்தில் பவக்கால் சப்ரத்தில் வீதியுலா செல்லும் நிகச்சியும், அதுசமயம், பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை தீர்க்கும் வகையில், வீட்டு மாடி, வாசல்களிலிருந்து மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து மாலை காரைக்கால் அம்மையார் கோவிலை வந்தடையும் பிச்சாண்டவரை அம்மை யார் எதிர்கொண்டு வரவேற்று அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சியும், ஜூலை 3-ந் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சியளித்தல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.
- பாக்யா திருநள்ளாறில் உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் வேலை செய்து வருகிறார்.
- அல் ரசீது நிலைதடுமாறி முன்னே சென்று கொண்டிருந்த, பாக்கியாவின் மொபட் மீது மோதினார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பாக்யா (வயது 31). இவர் திருநள்ளாறில் உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மகள் சாய்னாவுடன் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு, மொபட்டில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது, கும்பகோணம் சுவாமி மலையை சேர்ந்த அல் ரசீது (20) என்பவர், தனது நண்பர் முகமது இஷாத் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது நிலை தடுமாறி முன்னே சென்று கொண்டிருந்த, பாக்கியாவின் மொபட் மீது மோதினார். இதில் பாக்கியா, அவரது மகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களும் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கிருந்த வர்கள் 4 பேரையும் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து பாக்யா வின் சகோதரர் பாக்கியராஜ் காரைக்கால் நகர போக்கு வரத்து போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுகுமார் சென்னையில் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
- சுடர் கடந்த 2-ந் தேதி, வீட்டு அலமாரியில் இருந்த சில பொருட்களை எடுத்துகொண்டு வெளியில் சென்றுள்ளார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த நெடுங்காடு பஞ்சாட்சபுரம் கீழபுத்தரகம் பகுதியைச்சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி சுடர் (வயது30). இவர்களுக்கு சுஷ்மிதா (3), சுபிஷா (2) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சுகுமார் சென்னையில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சுடர் கடந்த 2-ந் தேதி, வீட்டு அலமாரியில் இருந்த சில பொருட்களை எடுத்துகொண்டு வெளியில் சென்றதாக சுகுமாரின் தாய் பானு, சுகுமாருக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். முன்னதாக, உறவினர் திவாகர் என்பவர் சுடரிடம் தனியாக பேசிவிட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளர். தொடந்து, சுகுமார் காரைக்கால் திரும்பி, காரைக்கால் மாவட்டம் முழுவதும் தேடியும் சுடர் மற்றும் குழந்தைகள் இருப்பிடம் தெரியாததால், நெடுங்காடு போலீசில் சுகுமார் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சுடர் மற்றும் 2 குழந்தைகளை தேடிவருகின்றனர்.
- சம்பவத்தன்று வீட்டில் பாட்டி இல்லை. சிறுமி மட்டும் தனியாக இருந்தார்.
- சிறுமியை 2 பேரும் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவை சோலை நகர் பகுதியில் 17 வயது சிறுமி பாட்டியுடன் வசித்து வருகிறார். அவருக்கு பெற்றோர் கிடையாது.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜிப்மரில் காவலாளியாக வேலை செய்யும் ஸ்ரீதர் (வயது 37) என்பவர் அந்த சிறுமியிடம் பழகி வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது பாட்டி வீட்டில் இல்லை. சிறுமி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு சென்ற ஸ்ரீதர், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த சிறுமியின் பாட்டி அவரிடம் விசாரணை நடத்தியபோது ஸ்ரீதரும், அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சிவா (47) என்பவரும் சிறுமியை தனித்தனியாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் குழந்தைகள் நலக்குழுவில் புகார் தெரிவித்தார். அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது சிறுமியை 2 பேரும் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து குழந்தைகள் நலக்குழுவினர் முத்தியால் பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதர், சிவா ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- சாலையில் சுற்றி திரியும் மாடுகள், நாய்கள் வாகனங்கள் வரும்போது அதன் குறுக்கே அங்கும் இங்கும் செல்கின்றன.
- மாடுகளின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி ஆணையர் தெரிவித்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட த்தில், கடற்கரைச் சாலை மற்றும் அதனை சுற்றியு ள்ள போக்குவரத்து மிக்க முக்கிய சாலைகள் அனைத்தும் கால்நடைகள் உலா வும் சாலைகளாக மாறி வருகின்றன. மேலும் சாலையில் சுற்றி திரியும் மாடுகள், நாய்கள் வாகனங்கள் வரும்போது அதன் குறுக்கே அங்கும் இங்கும் செல்கின்றன. இத னால் காரைக்காலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், மற்றும் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதற்கு காரைக்கால் நகராட்சி நிர்வாகம் நடவடி க்கை எடுத்து சாலையில் சுற்றி திரியும் மாடுகள், நாய்களை வேறு இடத்திற்கு அப்புறபடுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் காரைக்காலில் மாடுகளை சாலையில் திரியவிடக்கூடாது மீறினால், மாடுகள் பறிமுதல் செய்ய ப்பட்டு மாடுகளின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி ஆணையர் தெரிவித்தனர். ஆனாலும் மாடுக ளை சாலைகளில் விடுவது இன்னும் அரங்கேறி வருகி றது. இதனால் அவைகளை சாலையில் சுற்றிதிரிய விடும் உரிமையாளர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடு க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்ற னர்.
- மல்யுத்த வீராங்கணைகளுக்கு நீதி வேண்டி காரைக்கால் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- மல்யுத்த வீராங்கணைகள் மீதான வன்முறையை உடனே நிறுத்தவேண்டும்.
புதுச்சேரி:
மல்யுத்த வீராங்கனை களுக்கு நீதி வேண்டி, காரைக்கால் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், காரைக்கால் மதகடி பகுதியில் கண்டன ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. காரைக்கால் கடற்கரை சலையில் உள்ள மதகடி பகுதியில் நடைபெற்ற, இந்த கண்டன ஆர்ப்பா ட்டத்தில், மல்யுத்த விராங்கணைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் யாராக இருப்பினும், அரசு அவர்களை உடனே பாரபட்சம் இன்றி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும்.
மேலும் இந்த போராட்டத்தில் நியாயம் கேட்டு போராடும் மல்யுத்த வீராங்கணைகள் மீதான வன்முறையை உடனே நிறுத்தவேண்டும். அவர்களுக்கு உரிய நியாயத்தை அரசு பெற்றுத்தரவேண்டும். நாட்டுக்காக பதக்கம் பெற்றுத்தந்த வீராங்கணைகளை மதித்து நடக்கவேண்டும். இந்த வழக்கின் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்தி, மல்யுத்த வீராங்கணைகளுக்கு நீதி மற்றும் நியாயம் பெற்றுததரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- காரைக்கால் நெடுங்காட்டில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- சரவ ணக்குமார் இரவு சிமெண்டு கிராதி கடையில் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே நெடுங்காடு குரும்பகரம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது33) இவர் மனைவி மணிபாரதி. இவர்களுக்கு ஸ்ரீலக்சனா(5), ஸ்ரீ தனிஷ்(3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சரவணக்குமார், நெடுங்காட்டில் உள்ள சிமெண்ட் கிராதி கடையில் கூலிவேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சரவணகு மாருக்கு குடிபழக்கம் அதிகமானதால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
மணிபாரதி, குழந்தை களை பள்ளியில் சேர்க்க வேண்டும் என பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் என்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் கணவன் மடைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், சரவ ணக்குமார் இரவு சிமெண்டு கிராதி கடையில் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். மறுநாள் காலை கடை க்கு சென்று பார்த்தபோது அங்கு சரணவகுமார் தனது கைலியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொ ண்டார். இது குறித்து மணி பாரதி, நெடுங்காடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரி ன்பேரில் நெடுங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






