என் மலர்
புதுச்சேரி
- போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கார்கள், மீன் வண்டிகள் மற்றும் பஸ்களில் தீவிர சோதனை நடை பெற்றது.
காரைக்கால், மே.20-
தமிழக பகுதிகளில் அண்மையில் கள்ள ச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்ததையடுத்து, காரைக்கால்-தமிழக எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடு பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் தமிழக எல்லைகளில் போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. சோதனையின் போது, திரு.பட்டினம் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
சோதனையில், கனரக வாகனங்கள், கார்கள், மீன் வண்டிகள் மற்றும் பஸ்களில் தீவிர சோதனை நடை பெற்றது. குறிப்பாக, கனரக வாகனங்கள், 4 மற்றும் 2 சக்ர வாகனங்களில் மது மற்றும் சாராயம் கடத்தப்படுகிறதா என சோதனை நடைபெற்றது. தொடர்ந்து, எல்லையோர பகுதிகளில் உள்ள மதுபான கடைகள், சாராயக் கடை களிலும் சோதனை நடைபெற்றது. அப்போது, போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் கூறியதாவது:-
தனி நபருக்கு அரசு விதித்துள்ள அளவுக்கு மீறி மது பானம் விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்க ப்பட்டால் அபராதத்துடன் கூடிய கடுமையான நடவ டிக்கைகள் எடுக்கப்படும். மேலும், கடையில் பணிபுரியும் சில ஊழி யர்கள், மொத்தமாக தமிழக பகுதிக்கு மது கடத்த உடந்தையாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
- பள்ளி மற்றும் கல்லூரி தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது.
- முதலமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவையில் தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி மற்றும் கல்லூரி தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. தேர்வு என்பது வாழ்க்கையில் ஒரு பகுதிதான். வாழ்க்கை இன்னும் நிறைய இருக்கிறது. தேர்வு எழுதாதவர் பல பேர் வாழ்க்கையில் முன்னுக்கு வந்துள்ளனர். மாணவர்கள் எந்த ஒரு தவறான முடிவு எடுக்க வேண்டாம்.
தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வைக்க வேண்டும், தன்னம்பிக்கை வைக்க மாரல் கிளாசஸ் நடத்த வேண்டும், தற்காப்பு கலைக்கான வகுப்புகள் வைக்க வேண்டும். இது குறித்து முதலமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கவர்னருக்கு அதிகாரம் என்பதில் புதுவையில் கவர்னருக்கும், முதலமைச்சருக்கும் எந்த வகையிலாவது கருத்து வேறுபாடு வருமா? என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காத்துக்கொண்டிருக்கிறார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு வராது. டெல்லி நிலை வேறு, புதுவை நிலை வேறு, மற்ற யூனியன் பிரதேசங்களுக்கான நிலை வேறு.
மக்கள் சார்ந்த விஷயங்கள் புதுவையில் சிறப்பாக நடைபெறுவதுதான் நாராயணசாமிக்கு கவலையாக இருக்கிறது என தெரிவித்தார்.
அப்போது அவரிடம், மத்திய அரசின் ரூ.2 ஆயிரம் நோட்டு தடை குறித்து கேள்வி எழுப்பியபோது, இந்த தடை பற்றி எனக்கு கவலை இல்லை. நான் போட்டு இருக்கும் கோட்டும் ஒயிட், நோட்டும் ஒயிட். ரூ.2 ஆயிரம் நோட்டு தடை பற்றி இன்னும் அறியவில்லை. விபரங்களை அறிந்து பதிலளிக்கிறேன் என்றார்.
கவர்னர் தமிழிசை டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 13 ஆயிரத்து 738 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- மொத்தம் 129 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடந்தது. தேர்வு முடிவுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை புதுவை, காரைக்காலை சேர்ந்த 7 ஆயிரத்து 797 மாணவர்களும், 7 ஆயிரத்து 618 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 415 மாணவர்கள் எழுதினர். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 13 ஆயிரத்து 738 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 6 ஆயிரத்து 700 மாணவர்களும், 7 ஆயிரத்து 38 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுவை, காரைக்காலில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.12 சதவீதம். புதுவை, காரைக்காலில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 78.92 ஆகும். கடந்த ஆண்டு அரசு, தனியார் பள்ளிகளில் 92.92 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
அரசு பள்ளிகளில் மட்டும் 85.01 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 3.8 சதவீதமும், அரசு பள்ளிகளில் மட்டும் 6.09 சதவீதமும் குறைந்துள்ளது. புதுவை, காரைக்காலில் மொத்தம் 287 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.
இதில் புதுவையில் 84, காரைக்காலில் 7 என மொத்தம் 91 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
புதுவை, காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 107. இதில் புதுவையில் 7 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் கணிதத்தில் 61, அறிவியலில் 49, சமூக அறிவியலில் 19 பேர் என மொத்தம் 129 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏ கேஎஸ்பி.ரமேஷ், கல்வித்துறை செயலர் ஜவகர், இயக்குனர் பிரியதர்ஷினி, துணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் உடனிருந்தனர்.
- கட்டுரைப்போட்டி, கடந்த மாதம் திருநள்ளாறு மற்றும் காரைக்கால் என இரு பிரிவுகளில் நடை பெற்றது.
- கலெக்டர் குலோத்துங்கன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி:
காரைக்காலில் கடந்த மாதம் நடைபெற்ற தீயணைப்பு தடுப்பு வார கட்டுரைப்போட்டியில், வெற்றி பெற்ற மாணவர் களுக்கு, கலெக்டர் குலோத்துங்கன் பரிசளித்து பாராட்டினார். காரைக்கால் மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 முதல் 21-ந் தேதி வரை தீயணைப்பு தடுப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக் கான தீயணைப்பு தடுப்பு வார கட்டுரைப்போட்டி, கடந்த மாதம் திருநள்ளாறு மற்றும் காரைக்கால் என இரு பிரிவுகளில் நடை பெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டார்கள். போட்டி யில் வெற்றி பெற்ற 4 மாணவ, மாணவிகளுக்கு, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, கலெக்டர் குலோத்துங்கன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இதில் திருநள்ளாறு பிரிவில் முதல் பரிசு பெற்ற சேத்தூர் அரசு பள்ளியைச் சேர்ந்த கிரிஷ் என்ற மாணவனுக்கு ரூ.900, 2-ம் பரிசு பெற்ற சக்தி என்ற மாணவனுக்கு ரூ.600 வழங்கப்பட்டது. மேலும் காரைக்கால் பிரிவில் கோவில்பத்து அரசு பள்ளியைச் சேர்ந்த முகம்மது இப்ராஹிம் என்ப வருக்கு ரூ.900, ஹரிஷ் ராகவா என்ற மாணவனுக்கு ரூ.600 ரொக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில், துணை கலெக்டர் பாஸ்கரன், கலெக்டரின் செயலர் பக்கிரிசாமி மற்றும் சுரக்குடி தீயணைப்பு அதிகாரி ஹென்றிடேவிட், காரைக்கால் தீயணைப்பு அதிகாரி மாரிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- பொம்மையார்பாளையம் பகுதியில் முகம்மத்ஆஷிப் என்பவரிடம் 5 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- புதுவையில் இருந்து சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தப்படுவது குறைந்து வருகிறது.
புதுச்சேரி:
மரக்காணம் செங்கல்பட்டில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் புதுச்சேரி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புதுவை பகுதியில் இருந்து மரக்காணம், செங்கல்பட்டு காஞ்சிபுரம் பகுதிகளுக்கு மெத்தனால் மற்றும் சாராயம் கடத்தப்படுவதை தடுக்க புதுவை-தமிழக எல்லையான ஆரோவில் கோட்டக்குப்பம் வானூர், மரக்காணம், கிளியனூர் ஆகிய பகுதிகளில் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி தலைமையிலான போலீசார் ஈ.சி.ஆர். சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது புதுவையில் இருந்து 100 மில்லி சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்த மரக்காணம் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த வெள்ளிகண்ணு (வயது 35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மரக்காணம் பகுதியில் புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 லிட்டர் சாராயத்தை பழனி (64) என்பவரிடம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து பழனியை கைது செய்தனர்.
இதேபோல் கோட்டக்குப்பம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விபின் (25) என்பவரிடம் 4 பிராந்தி பாட்டில், 6 பீர் பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரையை சேர்ந்த விமல்ராஜ் என்பவரிடம் 17 பீர் பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.
பொம்மையார்பாளையம் பகுதியில் முகம்மத்ஆஷிப் என்பவரிடம் 5 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆரோவில் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த வினோத் பிரபு (40), என்பவரிடம் 4 பீர்பாட்டில் ஒரு பிராந்தி பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. வானூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது திண்டிவனப் பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரிடம் 48 பிராந்தி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தம் சாராயம் கடத்தியதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுவை எல்லையில் தமிழக மதுவிலக்கு போலீசாரும் அதிரடி சோதனை நடத்தி வருவதால் புதுவையில் இருந்து சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தப்படுவது குறைந்து வருகிறது.
- புதுச்சேரி சாராயத்திற்கு தனி மவுசு உண்டு என்பதால் பாண்டி ஐஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.
- சிதம்பரம், சீர்காழி பகுதியில் பாண்டி ஐஸ் பெயரிட்ட பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை களை கட்டுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்கும், கரைக்கால் பகுதியில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளுக்கு சாராயம் கடத்தி செல்லப்படுகிறது.
புதுச்சேரி மற்றும் அதன் பிராந்தியமான காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மற்றும் கடலூர், விழுப்புரம் பகுதிகளுக்கு விளைநிலங்கள், ஆற்றோரம் வழியாக மூட்டை கட்டி தலை சுமையாகவும் சாராயம் கடத்தப்படுகிறது.
புதுவையில் இருந்து கடத்தப்படும் சாராயத்தில் கூடுதலாக போதை ஏறவும், சரக்கின் அளவை அதிகரிக்கவும், மெத்தனால் மற்றும் வேதிப் பொருட்களை கலக்கின்றனர். மேலும் ஆர்.எஸ். பவுடர் வாங்கி வந்தும் சாராயம் தயாரிக்கின்றனர்.
பின்னர் அந்த சாராயத்தை பாக்கெட்டுகளில் அடைத்து அதற்கு 'பாண்டி ஐஸ்' என்று அடைமொழி வைத்து விற்பனை செய்கிறார்கள்.
புதுச்சேரி சாராயத்திற்கு தனி மவுசு உண்டு என்பதால் பாண்டி ஐஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.
கேனில் விற்கப்படும் சாராயத்திற்கு கோனிமுட்டி என்றும், மதுபாட்டிலில் விற்கப்படும் சாராயத்திற்கு ஷீல்டு என்றும் பெயர் வைத்துள்ளனர்.
சிதம்பரம், சீர்காழி பகுதியில் பாண்டி ஐஸ் பெயரிட்ட பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை களை கட்டுகிறது. ரூ.30 மற்றும் ரூ.60-க்கு சாராயம் கிடைப்பதால் குடிமகன்கள் இதனை ஆர்வமுடன் வாங்கி குடிக்கின்றனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடை 12 மணிக்கு மேல் திறக்கப்படுகிறது. அதற்கு முன்பே கள்ளச்சாராயம் விற்பனை மும்முரமாக நடக்கிறது.
மதுபானங்களை விட விலையும் குறைவாக இருப்பதால் குடிமகன்கள் கள்ளச்சாராயத்தை நாடி செல்கின்றனர். வயல் வெளிகளிலும், சுடுகாட்டு பகுதிகளிலும் வைத்து விற்பனை செய்கின்றனர்.
இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- கடலூர் கெமிக்கல் என்ஜினீயர் இளைய நம்பியும், ஏழுமலையும் நண்பர்கள்.
- சென்னையில் இருந்து புதுவைக்கு வாகனத்தில் மெத்தனால் கொண்டு வரும்போது சோதனை சாவடிகளில் காட்டுவதற்கு மொத்தனால் சோப்பு கம்பெனிக்கு வாங்கி வருவது போல ரசீது தயார் செய்து மெத்தனாலை கடத்தியுள்ளார்.
புதுச்சேரி:
மரக்காணம், செங்கல்பட்டு பகுதியில் விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான ஏழுமலை சென்னை ரசாயன தொழிற்சாலையில் மெத்தனால் வாங்கி புதுச்சேரியில் பதுக்கி வைத்து சப்ளை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம், செல்லன் தெரு, நகரான் தெரு, சம்புவெளி பகுதியை சேர்ந்தவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் விஷ சாராயம் குடித்ததில் 14 பேர் பலியாகினர்.
மற்றவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரி, விழுப்புரம் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேர் பலியான இந்த சம்பவம் தமிழகம், புதுவையை உலுக்கியுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மரக்காணம் சாராய வியாபாரிகள் அமரன் முத்து, ஆறுமுகம், மண்ணாங்கட்டி, ரவி உள்ளிட்டவர்களையும் செங்கல்பட்டு பகுதியில் வேலு, சந்திரன், ராஜேஷ், விஜி உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரியில் இருந்து மெத்தனால் வாங்கி வந்தது தெரியவந்தது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகரில் வசித்து வரும் பர்கத்துல்லா, வில்லியனூர் தட்டாஞ்சாவடி மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வரும் ஏழுமலை ஆகிய 2 பேரையும் புதுச்சேரி போலீஸ் உதவியுடன் விழுப்புரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், கள்ளச்சாராயம் தயாரிக்க சென்னை வானரகம் அடுத்த மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் மெத்தனால் வேதிப்பொருள் வாங்கி புதுச்சேரியில் பதுக்கி வைத்தும், புதுச்சேரியில் இருந்து மரக்காணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள சாராய வியாபாரிகளுக்கு மெத்தனாலை சப்ளை செய்ததும் தெரியவந்தது.
சென்னை மதுரவாயல் பகுதியில் ரசாயன தொழிற்சாலை நடத்தி வரும் கடலூரை சேர்ந்த கெமிக்கல் என்ஜினீயர் இளையநம்பி தொழிற்சாலைக்கு வாங்கும் மெத்தனாலை ஏழுமலைக்கு விற்பனை செய்துள்ளார். இளையநம்பி கெமிக்கல் என்ஜினீயர் என்பதால் எவ்வளவு தண்ணீரில் மெத்தனால் மற்றும் மூலப்பொருள் சேர்த்து சாராயம் தயாரிக்க வேண்டும் என அவர் பயிற்சி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இளையநம்பி தொழிற்சாலையில் ஏழுமலை மற்றும் பர்கத்துல்லா கடந்த 11-ந்தேதி 3 பேரல்களில் 600 லிட்டர் மெத்தனால் வாங்கி வந்து புதுச்சேரியில் பதுக்கி வைத்துள்ளனர்.
பின்னர் அதனை மரக்காணம், செங்கல்பட்டு சாராய வியாபாரிகளுக்கு கொடுத்துள்ளனர். அதிக விஷத்தன்மை வாய்ந்த மெத்தனாலை சாராய வியாபாரிகள் கலப்படம் செய்து விற்பனை செய்ததால் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் விஷ சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தனர்.
இதனை கேள்விப்பட்ட ஏழுமலை பதுக்கி வைத்திருந்த மெத்தனாலை கீழே ஊற்றி அழித்துள்ளார்.
கடலூர் கெமிக்கல் என்ஜினீயர் இளைய நம்பியும், ஏழுமலையும் நண்பர்கள். புதுவை வில்லியனூர் தட்டாஞ்சாவடி பகுதியில் சோப்பு கம்பெனி வைத்திருப்பதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் நம்புவதற்காக ஏழுமலை கொட்டகை அமைத்துள்ளார்.
மெத்தனால் வாங்கி வந்து இங்கு தான் ஏழுமலை பதுக்கி வைத்துள்ளார். சென்னையில் இருந்து புதுவைக்கு வாகனத்தில் மெத்தனால் கொண்டு வரும்போது சோதனை சாவடிகளில் காட்டுவதற்கு மொத்தனால் சோப்பு கம்பெனிக்கு வாங்கி வருவது போல ரசீது தயார் செய்து மெத்தனாலை கடத்தியுள்ளார்.
புதுச்சேரி என்றாலே மது என்பது எல்லோருடைய மனதிலும் எழக்கூடிய உளவியல் கலந்த உணர்வாக உள்ளது. இந்நிலையில் சென்னை மதுரவாயல் ரசாயன தொழிற்சாலையில் இருந்து வாங்கி வரப்பட்ட மெத்தனாலை ஏழுமலை வரும் வழியிலேயே சாராய வியாபாரிகளுக்கு கொடுப்பதில்லை.
தன்னுடைய சோப்பு கம்பெனிக்கு மூலப்பொருள் வாங்கி வருவதாக கணக்கு காட்டிவிட்டு புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு மெத்தனாலை அனுப்பி வந்துள்ளார். புதுவையில் இருந்து மெத்தனால் கொண்டு வருவதால் 'இது பாண்டிச்சேரி சரக்கு' என சாராய வியாபாரிகளுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
புதுவையில் இருந்து பர்க்கத்துல்லா வாகனம் மூலம் கொண்டுவரும் மெத்தனால் என்பதால் சாராய வியாபாரிகளுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டு வாங்கி உள்ளனர். இதுவே விஷசாராயமாக மாறி 22 பேர் உயிரை பறித்துள்ளது.
- சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
- கலால்துறை அதிகாரி ஜான்சன் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் பகுதியில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலை யில் காரைக்கால் மாவட்ட துணை கலெக்டரும், கலால்துறை அதிகாரியுமான ஜான்சன், வட்டாட்சியர் மதன்குமார் மற்றும் பலர், மாவட்டம் முழுவதும் உள்ள 100-க்கு மேற்பட்ட மதுக்கடைகள், பார்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட சாராயக் கடைகளில், அதி ரடி சோதனை மேற்கொ ண்டனர்.
இந்த சோதனையின் போது, மதுபானக் கடை மற்றும் சாராயக்கடைகளில் காலாவதியான மது பாட்டில்கள் உள்ளதா? எனவும், மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு மது விற்பனை செய்யப்ப டுகிறதா? என்பது குறித்தும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் முறை யாக கணக்குகளை பராமரி க்காத மதுபான கடைகளுக்கு கலால்துறை அதிகாரி ஜான்சன் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார். மேலும், காரைக்கால் பகுதியில் இருந்து தமிழக த்துக்கு மது கடத்தலை எல்லையோரங்களில் கண்காணிக்கவும், அரசால் தடை செய்யப்பட்ட பிளா ஸ்டிக் கப்புகள் பயன்ப டுத்தும் மதுபான கடைக ளுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.
- குழாயின் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்த நாய்க்குட்டி கழிவறையின் உள்பகுதிக்குள் மாட்டி கொண்டது.
- கழிப்பறையை முழுமையாக இடித்து துளையிட்டுப் பார்த்தபோது சுமார் 8 அடி ஆழத்தில் நாய்க்குட்டி மாட்டிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
கடலூர் சாவடி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் வீட்டு தோட்டத்தில் உள்ள கழிப்பறை அருகே நாய் ஒன்று 3 குட்டிகளை போட்டிருந்தது.
அதில் ஒரு குட்டி வீட்டு கழிவறை குழாய் அருகே விளையாடிக்கொண்டிருந்தது. கழிவறை குழாயின் ஒரு பகுதி உடைந்திருந்தது குழாயின் மேல் பகுதி வழியாக சென்ற நாய்க்குட்டி கால் வழுக்கி ஓட்டைக்குள் விழுந்தது.
குழாயின் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்த நாய்க்குட்டி கழிவறையின் உள்பகுதிக்குள் மாட்டி கொண்டது. அங்கிருந்து வெளியே வர முடியாமல் தவித்தது.
குழாய்க்குள் இருந்து வந்த நாய்க்குட்டியின் முனகல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த முருகன் விலங்கு நல ஆர்வலரான செல்லா என்பவருக்கு தகவல் தெரிவித்து அவரது உதவியை நாடினார்.
அங்கு சென்றார் விலங்கு நல ஆர்வலர் செல்லா. குழாயில் சிக்கிய நாய்க்குட்டியை கழிப்பறை ஓட்டை வழியாக வெளியே எடுக்க முயற்சித்தார். அது பலன் அளிக்கவில்லை. கழிப்பறையை உடைத்தால் தான் குட்டியை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் முருகன் கழிப்பறையை முழுமையாக உடைக்க முடிவு செய்தார். இதையடுத்து கழிப்பறையை முழுமையாக இடித்து துளையிட்டுப் பார்த்தபோது சுமார் 8 அடி ஆழத்தில் நாய்க்குட்டி மாட்டிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.
சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நாய்க்குட்டியை உயிருடன் மீட்டனர்.
பின்னர் அந்த நாய்க்குட்டியை குளிப்பாட்டி சுத்தம் செய்தனர். 6 மணி நேரத்திற்கு மேலாக குழாயில் சிக்கிக் கொண்டிருந்த நாய்க்குட்டி வெளியே வந்ததும் தனது தாயின் அரவணைப்பை தேடி அழுதுகொண்டே வேகமாக ஓடி தனது தாயுடன் சேர்ந்து பால் குடித்தது.
இதுகுறித்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விலங்கு நல ஆர்வலர் செல்லா மற்றும் வீட்டு உரிமையாளர் முருகனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
- பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட மகாமாரியம்மன் தீமிதி திருவிழா, கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்கியது.
- சில பக்தர்கள் அலகு காவடி ஏந்தியவாறு தீக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட மகாமாரியம்மன் தீமிதி திருவிழா, கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலாவாக வந்து தீக்குழி நடைபெற்ற இடத்தின் முன்பு நிறைவு பெற்றது.
தொடர்ந்து, திரளான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தீக்குழியில் இறங்கி மாரியம்மனை வழிபட்டனர். சில பக்தர்கள் அலகு காவடி ஏந்தியவாறு தீக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர். விழாவில் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசித்தனர்.
- பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் காரைக்காலில் நடைபெற்றது.
- பொதுமக்களுக்கான குடிநீர் கூட அரசுத்துறை அலுவலகங்களில் இல்லை.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி நடத்த வேண்டும். அன்றைய தினம் பொது விடுமுறையாக இருந்தால், அடுத்த வேலை நாளில் பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைக்க வேண்டும் என, கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டார்.
அதன்படி, கடந்த சில மாதங்களாக காரைக்காலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளில் மாதந்தோறும் பொதுமக்கள் குறை கேட்பு நாள் நடந்து வந்தது. அதேபோல், மாவட்ட கலெக்டர் குலோத் துங்கன் அனைத்து அரசுத் துறை அலுவலகங்களில் திடீர் ஆய்வு செய்து, காரைக் கால் மாவட்டங்களில் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங் களில் பணிபுரியும் ஊழி யர்கள் அரசு உத்தரவுப்படி காலை 8:45 மணிக்கு பணியில் இருக்க வேண்டும் என்றும், குறித்த நேரத்திற்கு பணிக்கு வராதவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அந்தவகையில், மாதம் ஒரு முறை நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் காரைக்காலில் நடைபெற்றது ஆனால் பல்வேறு அரசுத் துறைகளில் துறை அதிகாரி கள், ஊழியர்கள் காலை 10 மணிவரை வரவில்லை. அதேபோல், கோடை வெயி லில் பொதுமக்களுக்கான குடிநீர் கூட அரசுத்துறை அலுவலகங்களில் இல்லை. பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்து தங்கள் புகார் களை வழங்கி சென்றனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- பெண்ணுக்கு ஆன்லைன் மூலம் பல கட்டங்களாக கடந்த 4-ந் தேதி வரை ரூ.5 லட்சம் பாலமுருகன் அனுப்பி இருக்கிறார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
சேலம் மாவட்டம், பி.என்.பாளையம், சின்ன மண்கொடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (27). வேலை காரணமாக புதுவை வந்துள்ள இவர் தேங்காய்திட்டு வடக்கு தெருவில் தனது நண்பர் மணிகண்டன் என்பவருடன் வசித்து வருகிறார்.
திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் திருமண இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். பதிவு செய்த 2 நாட்களுக்கு பிறகு ஊர், பெயர் தெரியாத பெண் ஒருவர், பாலமுருகனை அவரது வாட்ஸ்அப் எண் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, அவரது பெயர் இந்தியஸ்ரீ ராதாகிருஷ்ணன் என்றும், கடலூரில் வசிப்பதாகவும், இணையதளத்தில் புகைப்படம், குடும்ப விவரங்களை பார்த்ததாகவும், அவரை திருமணம்செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
பிறகு அந்த பெண்ணின் புகைப்படம் மற்றும் குடும்ப விவரங்களை பார்த்துவிட்டு, அவருடன் பாலமுருகன் பேச ஆரம்பித்த போது, தன்னுடைய வருமானம் ரூ.15 ஆயிரம் என கூறியுள்ளார்.
அதற்கு அந்த பெண், தான் கடலூரில் உதவி கலெக்டராக இருப்பதாகவும், ரூ.30 ஆயிரம் சம்பளம் வாங்குவதாகவும் பாலமுருகனுக்கு நல்ல வேலை இருந்தால் நன்றாக இருக்கும் என கூறியிருக்கிறார்.
மேலும் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு வேலை இருக்கிறது. அந்த வேலையை வாங்குவதற்கு ரூ.5 லட்சம் கேட்கிறார்கள். பணத்தை கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
இதை நம்பி அந்த பெண்ணுக்கு ஆன்லைன் மூலம் பல கட்டங்களாக கடந்த 4-ந் தேதி வரை ரூ.5 லட்சம் பாலமுருகன் அனுப்பி இருக்கிறார்.
அதன்பிறகு அந்த பெண் பாலமுருகனிடம் பேசுவதை நிறுத்திவிட்டு அவரது செல்போன் எண்ணையும் பிளாக் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே சம்பந்தப் பட்ட இணையதளத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அது தவறான முகவரி என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






