search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pantalkal"

    • சிவபெருமான் திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார்.
    • காரைக்கால் அம்மையார் கோவில் மணிமண்டபத்தில் பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

    விழுப்புரம்:

    சிவபெருமான் திருவாயால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித் திருவிழாவை, காரைக் காலில் உள்ள மும்முதத்த வர்களும் ஒரு மாதக்காலம் சகோதர ஒற்றுமையுடன் கொண்டாடிவருகின்றனர்.

    இந்த ஆண்டு காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித்திருவிழா, வருகிற 30-ந் தேதி மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கி, ஒரு மாதக்காலம் நடைபெறவுள்ளது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் அம்மையார் கோவில் மணிமண்டபத்தில் பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

    கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவல் குழு தலைவர் வக்கில் வெற்றிசெல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கீல் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி மற்றும் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 1-ந் தேதி காலை ஸ்ரீ புனிதவதி யார் தீர்த்தகரைக்கு வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து, காரைக்கால் அம்மையா ருக்கும் பரமதத்த செட்டி யாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். ஜூலை 2-ந் தேதி காலை சிவபெருமான் பிச்சாண்ட வர் கோலத்தில் பவக்கால் சப்ரத்தில் வீதியுலா செல்லும் நிகச்சியும், அதுசமயம், பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை தீர்க்கும் வகையில், வீட்டு மாடி, வாசல்களிலிருந்து மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து மாலை காரைக்கால் அம்மையார் கோவிலை வந்தடையும் பிச்சாண்டவரை அம்மை யார் எதிர்கொண்டு வரவேற்று அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சியும், ஜூலை 3-ந் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சியளித்தல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×