என் மலர்
நீங்கள் தேடியது "அரசு நிதி உதவி"
- வீடு கட்டும் திட்டம் 1.0 கீழ் விண்ணப்பங்கள் அளித்து, வீட்டு மானியம் பெறாதவர்கள், அடித்தளம் வரை வீடு கட்டியவர்கள் 2.0 திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
- பொதுமக்கள், விண்ணப்ப படிவங்களை புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு 2003-ம் ஆண்டு முதல் பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தை மாநில அரசின் நிதியின் மூலம் செயல்படுத்தி வந்தது.
மத்திய அரசு 2015-ம் ஆண்டு பிரதமர் நகர்ப்புற வீடு கட்டும் திட்டம் அறிமுகப்படுத்தியபோது, புதுச்சேரி அரசின் பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தோடு ஒருங்கிணைத்து, செயல்படுத்தியது. தொடர்ந்து மத்திய அரசு, பிரதம மந்திரி நகர்புற வீடு கட்டும் திட்டம்-2.0 என்கிற புதிய திட்டத்தை செப்டம்பர் 2024-ல் அறிமுகப்படுத்தியது.
இந்த புதிய திட்டத்தையும் புதுச்சேரி அரசு காமராஜர் வீடு கட்டும் திட்டத்துடன் ஒன்றிணைத்தது. மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 22 ஆயிரத்து 500 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பொது மற்றும் பிற பின்தங்கிய பிரிவினர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியை உயர்த்தி அளிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் 2.0 மூலம் அளிக்கப்படும் நிதி உதவி ரூ.2.25 லட்சத்துடன், புதுச்சேரி மாநில அரசின் பங்களிப்பாக ரூ.2.75 லட்சமும் சேர்த்து பயனாளிகளுக்கு மொத்தமாக ரூ.5 லட்சம் வழங்கப்பட உள்ளது. வீடு கட்டும் திட்டம் 1.0 கீழ் விண்ணப்பங்கள் அளித்து, வீட்டு மானியம் பெறாதவர்கள், அடித்தளம் வரை வீடு கட்டியவர்கள் 2.0 திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
சொந்தமாக நிலம் வைத்திருக்கும் தகுதியுள்ள வீடற்ற பயனாளிகள், தங்கள் கனவு இல்லத்தை சொந்தமாக்க, இந்த ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள், விண்ணப்ப படிவங்களை புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்பு துறை இணையதளமான www.tcpd.py.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மத்திய அரசின் இணையதளமான https://pmaymis.gov.in/PMAYMIS2_2024/Auth/Login.aspx மூலமும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.
உயர்த்தப்பட்ட வீடு கட்டும் நிதியுதவிக்கான விண்ணப்ப படிவங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிமுகப்படுத்தினார்.
- கணவரால் கைவிடப்பட்டவருக்கான அரசு நிதி உதவியை பெற்று வந்துள்ளார்.
- சப்-இன்ஸ்பெ க்டர் ரமேஷ் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
ரோட்டை சேர்ந்தவர் நிலா (வயது 44). இவர் முதல் கணவரால் கைவிடப்பட்டதால் புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் கணவரால் கைவிடப்பட்டோருக்கான நிதி உதவியை கடந்த 2013-ம் ஆண்டு முதல் பெற்று வந்தார்.
இதற்கிடையே நிலா, 2-வதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதை மறைத்து கணவரால் கைவிடப்பட்டவருக்கான அரசு நிதி உதவியை அவர் பெற்று வந்துள்ளார்.
இதற்கிடையே நிலா வுக்கு 2-வதாக திருமணம் ஆகி கணவர் இருப்பது தெரிய வந்ததால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவியை அரசு நிறுத்தியது.
அதைத்தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நிலா அரசிடம் இருந்து பெற்ற ரூ.82 ஆயிரத்து 200-யை திரும்ப செலுத்தும்படி துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வந்தனர். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் நிலா மீது புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் இயக்குனர் முத்து மீனா புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெ க்டர் ரமேஷ் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






