என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும்.
    • புதுச்சேரியில் வீடு உபயோகத்திற்கு மின் கட்டணம் அண்டை மாநிலங்களை விட குறைவாகவே உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மின்சாரச் சட்டம் 2003 பிரிவு 55-ன் விதிகளின்படி, வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து வீட்டு மின் நுகர்வோருக்கும் முதல் 100 யூனிட்டுக்கு 45 பைசாவும், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு 40 பைசாவும் மானியம் வழங்கப்படும். இந்த மானியம் 16.6.2024 முதல் இந்த நிதி ஆண்டில் நடைமுறையில் இருக்கும்.

    அதே நேரத்தில் 201-300 யூனிட் வரை நிர்ணயித்த கட்டணமான யூனிட்டுக்கு ரூ. 6-ம், 300 யூனிட்டுக்கு மேல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் யூனிட்டுக்கு ரூ.7.50-ம் என்பது அப்படியே தொடரும்.

    மேலும் தற்போது நடைமுறையில் உள்ள மாதம் 100 யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தப்படும் வீட்டு நுகர்வோர்களுக்கு 50 சதவீதம் அரசு மானியம் தொடரும். அதேபோல் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும்.

    புதுச்சேரியில் 300 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் ரூ 7.50 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 300 யூனிட்டுகளுக்கு மேல் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு ரூ 9.65, 400 யூனிட்களுக்கு மேல் ரூ 10.70, 500 யூனிட்டுக்கு மேல் ரூ. 11.80 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    எனவே புதுச்சேரியில் வீடு உபயோகத்திற்கு மின் கட்டணம் அண்டை மாநிலங்களை விட குறைவாகவே உள்ளது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    மேலும் அமைச்சர் நமச்சிவாயம் தனது அறிக்கையில், புதுச்சேரி, தமிழக மின் கட்டணத்தை அட்டவணையாக வெளியிட்டு அமைச்சர் ஒப்பீடு செய்து புதுச்சேரியில் கட்டணம் குறைவு என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியா கூட்டணி கட்சியினர் மின் கட்டணத்தை ரத்து செய்ய கோரி ஊர்வலம் - ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் இதனை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அவதூறாக பேசியதாக உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • திருமாவளவன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம் அருகே 2014-ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பா.ம.க. தலைவர்களை விமர்சித்து பேசினார்.

    கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறாக பேசியதாக உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு மீதான விசாரணை புதுவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த விசாரணையின்போது விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து அவருக்கு 2-வது குற்றவியல் நடுவர் நீதிபதி ரமேஷ் பிடிவாரண்டு பிறப்பித்தார்.

    இதை தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

    • நடிகர் விஜய் சேதுபதி மிஷ்கினின் 'ட்ரைன்' படத்திலும், பாண்டிராஜின் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
    • படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி சென்ற நடிகர் விஜய் சேதுபதி, ஆளுநர் கைலாசநாதனை சந்தித்தார்.

    புதுச்சேரி:

    இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான 'மகாராஜா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    இந்த திரைப்படம் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி, மிஷ்கின் இயக்கத்தில் 'ட்ரைன்' படத்திலும், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில், புதுச்சேரியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்ற நடிகர் விஜய் சேதுபதி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.

    மரியாதை நிமித்தமாக ஆளுநர் கைலாசநாதனை சந்தித்த விஜய் சேதுபதி அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    அதேபோல், நடிகர் விஜய் சேதுபதிக்கு, ஆளுநர் கைலாசநாதன் சால்வை அணிவித்தார். இவர்கள் இருவரும் சுமார் அரை மணி நேரம் உரையாடினார்.

    • அரசு அதிகாரிகள் மீதான புகார்கள் குறித்த விவரங்களை கேட்டுள்ளார்.
    • விசாரணை இன்னும் தொடங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசுத்துறை அதிகாரிகள் மீது பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த புகார்கள் தொடர்பாக விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.

    சிலர் மீது துறை ரீதியிலான விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் பலர் மீதான விசாரணை இன்னும் தொடங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சமீபத்தில் புதிதாக பதவி ஏற்றுள்ள கவர்னர் கைலாஷ்நாதன் அரசு அதிகாரிகள் மீதான புகார்கள் குறித்த விவரங்களை கேட்டுள்ளார். இதனால் அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து புதுவை அரசின் சார்பு செயலாளர் கண்ணன் அரசுத்துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசுத்துறைகளில் பணிபுரியும் குரூப் ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான வழக்குகளில் கவர்னருக்கு விரிவாக தெரிவித்திட அவசரமாக தகவல்கள் தேவைப்படுகிறது.

    எனவே அத்தகையவர்கள் குறித்த முழு விவரங்களை வருகிற 31-ந்தேதிக்குள் vigil@py.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    அதில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் பெயர், அவர் மீதான குற்றச்சாட்டு, பணியிடை நீக்கம் என்றால் எதனால்? விசாரணை அதிகாரி யார்? அந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன? என்பன போன்ற விவரங்களை தெரிவிக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விநாயகருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து பக்தியுடன் தரிசனம் செய்தனர்.
    • மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி திதியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். அதன்டி இன்று அனைத்து விநாயகர் கோவில்களிலும் மஹா சங்கடஹர சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

    புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

    கோவிலில் வெளி பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    கூட்ட நெரிச்சலை தவிர்க்க மூலவருக்கு அர்ச்சனை செய்யாமல் உற்சவருக்கு மட்டும் வெளியே அர்ச்சனை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு இடைவிடாத அன்னதானம் வழங்கப்படட்டது.

    ஜப்பான் நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஆன்மீக குழுவினர் மணக்குள விநாயகர் கோவிலுக்கு வருவர். 25 பேர் கொண்ட ஜப்பான் நாட்டு ஆன்மீக குழுவினர் விநாயகர் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் மணக்குள விநாயகருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து பக்தியுடன் தரிசனம் செய்தனர்.

    ஜப்பான் நாட்டு குழுவினருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை மரியாதை செய்யப்பட்டது. 

    • குறட்டை விடுவதன் மூலம் ஆக்சிஜன் அளவு குறைகிறது.
    • ஆய்வகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    குறட்டை விடுவதன் மூலம் ஆக்சிஜன் அளவு குறைகிறது. அதனால், நுரையீரல், இருதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

    இதையடுத்து புதுச்சேரி சுகாதாரத்துறை மூலம் இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவின் கீழ் உறக்கத்தின்போது, குறட்டை ஏற்படும் பிரச்சனையை கண்டறிய நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த ஆய்வகம் மூலம் உறக்கத்தின்போது ஏற்படும் குறட்டை மற்றும் மற்ற குறைபாடுகளை கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை சிறப்பாக அளிக்க முடியும்.

    மேலும், உறக்கத்தின்போது, ஏற்படும், மூச்சடைப்பு, மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள், நோயின் தன்மையை பற்றி தெரிந்து கொள்ளலாம். குறட்டை பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆய்வகத்தில் இலவசமாக சோதனை செய்து, காது, மூக்கு, தொண்டை, மருத்துவரை அணுகலாம்.

    • 23-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை சர்வதேச காற்றாடி திருவிழா நடக்கிறது.
    • 40-க்கும் மேற்பட்ட காற்றாடி ஆர்வலர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள அழகிய கடற்கரையில் நீல நிறக்கொடி சான்று பெற்ற வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையும் ஒன்று.

    இந்த கடற்கரையில் வரும் 23-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை 3 நாட்கள் சர்வதேச காற்றாடி திருவிழா நடக்கிறது. இந்த 3 நாட்களும் மதியம் 2 மணி முதல் மாலை வரை காற்றாடி திருவிழா நடக்கிறது.

    இதற்கான முன்பதிவு பட்டத்திருவிழா இணையதளத்தில் ஆன்லைனில் வரவேற்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம், பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நாடுகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட காற்றாடி ஆர்வலர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

    குறைந்தபட்சம் 6 அடி முதல் 19 அடி வரையிலான 120 ராட்சத காற்றாடிகள் பறக்கவிடப்பட உள்ளது. புதுவையில் பிரம்மாண்டமாக சர்வதேச அளவில் ஒருங்கிணைத்து காற்றாடி திருவிழா முதல்முறையாக நடத்தப்படுகிறது.

    12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் இல்லை. 12 வயதுக்கு மேற்பட்ட காற்றாடி விரும்பிகள் ரூ.100 செலுத்தி பங்கேற்க வேண்டும்.

    • பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
    • அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.

    புதுச்சேரி :

    புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக ஜிப்மர் மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஜிப்மரின் வெளிப்புற நோயாளி பிரிவுகளில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு போராட்டங்கள் முடிவுக்கு வரும் வரை, திங்கட்கிழமை (19.08.2024) முதல் வெளிப்புற நோயாளி பிரிவுகள் காலை 08:00 முதல் 10:00 மணி வரை மட்டுமே இயங்கும்.

    இந்த நேரத்தில் அவசரமற்ற அல்லது நீண்டகால நோய் சிகிச்சை பெறுவோர் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனால் மருத்துவர்கள் அவசர சிகிச்சை தேவைப்படும் நோய்களைக் கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்த முடியும். இன்னும் சில நாட்களில் போராட்டம் முடிவுக்கு வரும் என நம்புகிறோம். அதனைத் தொடர்ந்து முழு வெளிப்புற பிரிவு சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு செய்தித்தாள் மற்றும் ஊடகங்களின் மூலம் தெரிவிக்கப்படும்.

    இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இருப்பினும், மருத்துவ பராமரிப்பு அவசியமாக தேவைப்படும் நபர்களின் கவனிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இது மேற்கொள்ளப்படுகிறது.

    அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். மேலும் உயிர்காக்கும் பராமரிப்பு தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்கிறோம்.

    நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக சுகாதார சேவைகளை தொடர்ந்து வழங்குவதில் ஜிப்மர் அர்ப்பணிப்புடன் உள்ளது.

    இந்த இக்கட்டான நேரத்தில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள், ஒத்துழைப்பையும் உதவியையும் அளிப்பதன் மூலம் அத்தியாவசிய மற்றும் அவசரமான சேவைகளை அதிகபட்சமாக முடிந்தவரை வழங்க இயலும் என்பதை ஜிப்மர் நிறுவனம் அறிவுறுத்துகிறது. பொதுமக்களின் இந்த ஒத்துழைப்பிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கூட்டுறவு பதிவாளர் தீவிர விசாரணை.
    • 6,237 சங்கங்கள் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஊழி யர்கள், உறுப்பினர்கள் நலனுக்கான கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்படு கின்றன. சங்க உறுப்பினர் களிடமிருந்து நிதி திரட்டி இந்த சங்கங்கள் வழியாக கடனுதவி, நலத்திட்டங்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்கின்றன.

    இந்த கூட்டுறவு சங்கங்கள், புதுச்சேரி கூட்டுறவு சொசைட்டி சட்டத்தின் கீழ் கூட்டுறவு துறையில் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான சங்கங்கள், முறையாக செயல்படாமல் பெயரளவுக்கு உள்ளதாக, கூட்டுறவு துறைக்கு புகார்கள் சென்றன.

    இது தொடர்பாக கூட்டுறவு பதிவாளர் தீவிர விசாரணை நடத்தினார். இதனை யடுத்து தற்போது 86 கூட்டுறவு சங்கங்கள் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை கூட்டு றவு பதிவாளர் யஸ்வந்தையா பிறப்பித்தார்.

    இந்த பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி பொறியியல் கல்லூரி, எரிசாராய ஆலை, காவலர், சுதேசி காட்டன் மில் உள்பட பல்வேறு அரசு ஊழியர்களின் கூட்டுறவு சங்கங்களும் அடங்கியுள்ளன.

    இந்த கலைப்பு பட்டியல் அரசாணையாக பொது மக்களின் பார்வைக்காக தற்போது வெளியிடப் பட்டுள்ளன.

    புதுச்சேரியில் ஏற்கனவே கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை 1256 சங்கங்களும், 1996-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை 1512 சங்கங்களும் கலைக்கப்பட்டுள்ளன.

    கடந்த 32 ஆண்டுகளில் புதுச்சேரியில் செயல்படாத 6,237 சங்கங்கள் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளன. இந்த அதிரடியை இந்திய கம்பெனியின் மாவட்ட சங்கங்களின் பதிவாளர் எடுத்து இருந்தார்.

    தற்போது அந்த வரிசையில் கூட்டுறவு பதிவாளரும் இறங்கி, கூட்டுறவு சங்கங்களை அதிரடியாக கலைத்துள்ளார். இந்த கூட்டுறவு சங்கங்கள் செயல் படுகின்றதா? என்பதை அறிய பல முறை, நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. அதற்கு முறையான பதில் வரவில்லை.

    சங்க முகவரிக்கு அனுப்பப்பட்ட கடிதங்களும் திரும்பி வந்தது. இதனையடுத்து அதிரடியாக 86 கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்பட்டுள்ளது.

    • சமீபத்தில் புதுச்சேரி கவர்னராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டார்.
    • புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், குஜராத் தில் சப்-கலெக்டராக பணியில் சேர்ந்து, கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர்.

    இவர் குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி, முதல்-மந்திரியாக இருந்த போது, முதன்மை தலைமை செயலராக பணி புரிந்து ஓய்வு பெற்றார். ஓய்விற்கு பின்னரும், கடந்த ஜூன் மாதம் வரை முதன்மை செயலாராக பணி புரிந்தார்.

    இந்நிலையில் தான் சமீபத்தில் புதுச்சேரி கவர்னராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டார். குஜராத்தை பொருத்தவரை, சோலார் மின் உற்பத்தியில், மின் மிகை மாநிலமாக உள்ளது.

    நாட்டிலேயே, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனில் குஜராத் முன்னணியில் இருக்க முக்கிய காரணமாக விளங்கியவர் கவர்னர் கைலாஷ்நாதன்.

    இந்நிலையில் அவர் தற்போது புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இங்குள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும், சூரிய சக்தி மின் உற்பத்தியை தொடங்க உத்தரவிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, இது சம்பந்தமான விரிவான திட்ட மதிப்பீடு அறிக்கையை தயாரிக்கும் பணியை, மின்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின் றனர்.

    இதையடுத்து அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களில், சூரிய சக்தி மின் உற்பத்தி விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • கவர்னர் தேநீர் விருந்தை தொடர்ந்து நாங்கள் புறக்கணிக்கவில்லை.
    • என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வைத்துக்கொண்டு அவரால் மாநில அந்தஸ்து கண்டிப்பாக பெற முடியாது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர் தேநீர் விருந்தை தொடர்ந்து நாங்கள் புறக்கணிக்கவில்லை. முன்பு இருந்த கவர்னர்கள் கிரண்பேடி, தமிழிசை ஆகியோர் அரசியல் செய்தனர். அதற்குத்தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதிகாரியாக இருந்த கைலாஷ்நாதன், பா.ஜனதா முதலமைச்சர்களிடம் வேலை செய்திருந்தாலும், தற்போது அவர் கவர்னர்.

    அவர் நடுநிலையோடு செயல்படுவார் என நம்புகிறோம். அப்படி செயல்பட்டால் அவருடன் சேர்ந்து செயல்படுவோம். காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் அரசியல் செய்து அந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கின்றனர்.

    புதுவை கவர்னர் அரசியல் செய்தால் அதையும் எதிர்ப்போம்.

    புதுவைக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. மத்திய அரசிடம் வாங்குவது ரூ.2 ஆயிரத்து 300 கோடிதான். புதுவைக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை கிடைக்க வேண்டும்.

    எனவே மாநில அந்தஸ்து பெற வேண்டியது அவசியம். புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் டெல்லிக்கும் கொடுக்க வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால் இதை கேட்பார் என்பதால் மத்திய அரசு புதுவையை புறக்கணித்து வருகிறது.

    முதலமைச்சராக ரங்கசாமி இருக்கும் வரை அவரால் மாநில அந்தஸ்து வாங்க முடியாது. அவர் புதுவை எல்லையை தாண்டி டெல்லி செல்லாதவர். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதவர். முதலமைச்சர் மாநாட்டில் பங்கேற்காதவர். அவர் பா.ஜனதாவில் சேர்ந்தால் மட்டுமே புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வைத்துக்கொண்டு அவரால் மாநில அந்தஸ்து கண்டிப்பாக பெற முடியாது. பா.ஜனதா தனியாக ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் அப்போது வழங்குவார்கள். மத்திய மோடி அரசு புதுவையில் அரசியல் விளையாட்டு செய்கிறது. ரங்கசாமியை ஏமாற்றுகின்றனர். மாநில அந்தஸ்து பெற பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்த ரங்கசாமி, ஏன் எந்த கூட்டணியை விட்டு வெளியேறவில்லை?

    அவருக்கு முதலமைச்சர் நாற்காலி வேண்டும். அதற்காக அவர் கட்சியை, எம்.எல்.ஏ.க்களை தியாகம் செய்வார். மாநில அந்தஸ்து பெற ராகுல்காந்தி, எதிர்கட்சி எம்.பிக்கள், பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காலை 6 மணிக்கு ஆசிரமம் வாசிகளின் கூட்டு தியானம் நடைபெறுகிறது.
    • அரவிந்தர் அறை மற்றும் சமாதியை தரிசனம் செய்யலாம்.

    புதுச்சேரி:

    தேசிய மற்றும் ஆன்மிக வாதியான மகான் அரவிந் தர் 1872-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி மேற்கு வங்க மாநி லம் கொல்கத்தா வில் பிறந்தார். புதுச்சேரியில் ஆன்மிகப் பணியில் ஈடு பட்ட அரவிந்தர் 1950-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மறைந்தார்.

    அரவிந்தரின் 152-வது பிறந்த நாள் வருகிற 15-ந் தேதி (சுதந்திர தினத் தன்று) கொண்டாடப் படுகிறது. இதனையொட்டி சர்வதேச நகரமான புதுவையையொட்டி தமிழக பகுதியில் அமைந்துள்ள ஆரோவில்லில் ஆம்பி தியேட்டரில் அதிகாலை 4. 45 முதல் 6.30 மணி வரை 'போன்பயர்' நிகழ்ச்சி (மூட்டப் பட்ட தீயை சுற்றி அமர்ந்து அமைதியாக தியானம் செய்தல்) மற்றும் கூட்டு தியானம் ஆகியவை நடைபெறுகிறது. இதில் ஆரோவில் பகுதியில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்கிறார்கள்.

    அதே நாளில் புதுச்சேரி மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் காலை 6 மணிக்கு ஆசிரமம் வாசிகளின் கூட்டு தியானம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து ஆசிரமத்தில் உள்ள அரவிந்தர் மற்றும் அவரது சீடரான அன்னை மீரா பயன்படுத்திய அறை பொது தரிசனத்திற்கு காலை 6 முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

    அரவிந்தர் பொது தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆசிரமம் பின்பக்க வழியாக வரிசையில் வந்து அமைதியான முறையில் அரவிந்தர் அறை மற்றும் சமாதியை தரிசனம் செய்யலாம்.

    ×