பழைய 50 ரூபாய் நோட்டுக்கு ரூ.4 லட்சம் தருவதாக முதியவரிடம் ரூ.35 ஆயிரம் நூதன மோசடி

பேஸ்புக் பக்கத்தில் பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் அதிக விலைக்கு வாங்குவதாக விளம்பரம் வந்தது.ரூ. 4 லட்சத்திற்கான முதலில் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.
பழைய 50 ரூபாய் நோட்டுக்கு ரூ.4 லட்சம் தருவதாக முதியவரிடம் ரூ.35 ஆயிரம் நூதன மோசடி
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி வில்லியனுாரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 55). இவரது பேஸ்புக் பக்கத்தில் பழைய நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அதிக விலை கொடுத்து வாங்கி கொள்கிறோம் என விளம்பரம் வந்தது.

இதனை பார்த்த ராஜேஷ் அதில் இருந்த தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் உங்களிடம் எந்த காலத்து நாணயம் மற்றும் ரூபாய் நோட்டு உள்ளது என கேட் டுள்ளார். அதற்கு ராஜேஷ் 50 வருடத்திற்கு முந்தைய 5 ரூபாய் நோட்டு இருப்பதாக தெரிவித்தார்.

அதற்கு அந்த நபர் ரூபாய் நோட்டை போட்டோ எடுத்து அனுப்புமாறும் அது பழைய நோட்டுத்தானா என பார்த்து உறுதி செய்து கொள்வதாக தெரிவித்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த நபர் இது பழங்கால நோட்டு தான் இதை நாங்கள் ரூ.4 லட்சத்திற்கு எடுத்து கொள்கிறோம் என கூறி, பின்னர் ரூ. 4 லட்சத்திற்கான முதலில் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதை நம்பிய ராஜேஷ் ரூ. 35 ஆயிரம் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பினார். அதன்பின் எதிர் முனையில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அதன் பிறகு தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேஷ் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com