சூரசம்ஹார விழா- திருச்செந்தூர் செல்ல புதுச்சேரி அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம்

பயண கட்டணம் முன்பதிவு உள்பட ரூ.700 ஆகும். திருச்செந்தூரில் இருந்து காரைக்காலுக்கு மறுநாள் 7-ந் தேதி இரவு 9.30 மணிக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
சூரசம்ஹார விழா- திருச்செந்தூர் செல்ல புதுச்சேரி அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

புதுச்சேரி:

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் இருந்து புதுச்சேரி அரசின் பி.ஆர். டி.சி., சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவையொட்டி புதுச்சேரியில் இருந்து திருச்செந்துாருக்கு 6-ந் தேதி இரவு 7 மணிக்கு பி.ஆர்.டி.சி., சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. பயண கட்டணம் முன்பதிவு உள்பட ரூ.700 ஆகும்.

இதேபோல் மறுநாள் 7-ந் தேதி திருச்செந்தூரில் இருந்து புதுச்சேரிக்கு பி.ஆர்.டி.சி., பஸ் இரவு 9:30 மணிக்கு புறப்படுகிறது. பயண கட்டணம், முன்பதிவுடன் ரூ.700 ஆகும். இந்த பஸ் விழுப்புரம், திருச்சி மதுரை, தூத்துக்குடி வழித்தடத்தில் செல்லும். காரைக்காலில் இருந்தும் திருச்செந்தூருக்கு 6-ந் தேதி இரவு 9 மணிக்கு பி.ஆர்.டி.சி., பஸ் இயக்கப்படுகிறது.

பயண கட்டணம், முன்பதிவு ரூ.500 ஆகும். இதே போல் திருச்செந்தூரில் இருந்து காரைக்காலுக்கு மறுநாள் 7-ந் தேதி இரவு 9.30 மணிக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.

இந்த பஸ் பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி வழியாக இயக்கப்படும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பஸ் நிலையத்தில் உள்ள பி.ஆர்.டி.சி., பயண சீட்டு முன் பதிவு மையம் மற்றும் பஸ் இந்தியா செயலி வழியாக பக்தர்கள் திருச்செந்தூர் மட்டும் செல்ல முன்பதிவு செய்து கொள்ளலாம் என பி.ஆர்.டி.சி., நிர்வாகம் அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com