என் மலர்
புதுச்சேரி
- போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டபோது இடுப்பில் கைத்துப்பாக்கி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- புதுவை பொதுக்கூட்டத்துக்கு வந்த பிரபுவுக்கு பாதுகாப்பு அளிக்க டேவிட் துப்பாக்கியுடன் வந்ததாக கூறினார்.
புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் த.வெ.க. பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. விஜய் பொதுக்கூட்டம் நடந்த உப்பளம் ஹெலிபேடு மைதான நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தி பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று காலை 8 மணி அளவில் வெள்ளைச்சட்டை அணிந்து டிப்-டாப்பாக நுழைவு வாயிலை கடந்தபோது எச்சரிக்கை ஒலி எழுந்தது. இதனால் அதிர்ச்சிடைந்த போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டபோது இடுப்பில் கைத்துப்பாக்கி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே அந்த நபரை ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் (வயது 45) என்பது தெரிய வந்தது. மேலும் தனது துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பதையும் போலீசாரிடம் காட்டினார்.
பின்னர் அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர் விசாரணை நடத்தினர். இதில் டேவிட், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.) பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும், த.வெ.க. சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பிரபுவுக்கு, துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக இருப்பதும் தெரியவந்தது. புதுவை பொதுக்கூட்டத்துக்கு வந்த பிரபுவுக்கு பாதுகாப்பு அளிக்க டேவிட் துப்பாக்கியுடன் வந்ததாக கூறினார்.
இந்நிலையில் த.வெ.க. மாவட்ட செயலாளர் பிரபுவின் தனி பாதுகாவலர் டேவிட்டை காவல்துறை விடுவித்தது. துப்பாக்கிக்கான லைசென்ஸ் அவர் வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார்.
துப்பாக்கி தற்போது காவல்துறை வசம் உள்ளது. விசாரணை நிறைவடைந்ததும் துப்பாக்கியை அவரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- தலைவர் விஜய் தமிழகத்துக்கு மட்டுமல்ல, புதுச்சேரிக்கும் என்ன செய்ய வேண்டும் என யோசனை செய்துள்ளார்.
- புதுச்சேரியில் மாற்றம் வருமா? வேலைவாய்ப்பு கிடைக்குமா? என ஏங்குகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நடந்த த.வெ.க. பொதுக்கூட்டத்தில் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-
இந்தியாவுக்கே புதுச்சேரி காவல்துறை முன்னுதாரணமாக இருக்கிறது. புதுச்சேரி முதலமைச்சருக்கு நன்றி. இப்படி மக்கள் பாதுகாப்பை தமிழகத்தில் எங்கும் கொடுத்தது கிடையாது.
தமிழக முதலமைச்சரே தில் இருந்தால் தேர்தலில் மோதுங்கள், எங்கள் பிரசாரத்தை முடக்காதீர்கள். காற்றை, வெள்ளத்தை நிறுத்த முடியுமா.? த.வெ.க. பிரசார பயணம் 72 நாளுக்கு பின் மீண்டும் இன்று முதல் தொடங்கிவிட்டது.
தலைவர் புதுச்சேரிக்கு ஏன் வருகிறார்? என கேட்கின்றனர். புதுச்சேரி மக்கள் நல்ல ஆட்சி, நல்ல கல்வி, நல்ல மருந்துவம், நல்ல போக்குவரத்துக்கு ஏங்குகின்றனர். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது தமிழகத்தை போல புதுச்சேரிக்கும் செய்ய வேண்டும் என யோசித்தார்.
தலைவர் விஜய் தமிழகத்துக்கு மட்டுமல்ல, புதுச்சேரிக்கும் என்ன செய்ய வேண்டும் என யோசனை செய்துள்ளார்.
விரைவில் புதுச்சேரி மாநில மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் பிரசார கூட்டத்தை நடத்துவோம்.
புதுச்சேரியில் மாற்றம் வருமா? வேலைவாய்ப்பு கிடைக்குமா? என ஏங்குகின்றனர். அந்த ஏக்கம்தான் இந்த கூட்டம். 1970-ல் உருவானது போல புதுச்சேரியிலும் நல்ல முதலமைச்சரை விஜய் உருவாக்குவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுச்சேரி காவல்துறை இந்தியாவிற்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
- கூடிய விரைவில் மதுரை மாநாடு போன்று புதுச்சேரியிலும் மிகப்பெரிய அளவில் பிரசாரத்தை த.வெ.க. நடத்தும்.
புதுவை உப்பளம் மைதானத்தில் நடைபெறும் த.வெ.க. பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழக காவல்துறையை கைகளில் வைத்துள்ள முதல்வர் அவர்களே புதுச்சேரி காவல்துறையை பாருங்கள்.
* புதுச்சேரி காவல்துறை இந்தியாவிற்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
* புதுச்சேரியில் கொடுத்துள்ளது போன்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை.
* காற்று, வெள்ளத்தை எப்படி நிறுத்த முடியாதோ அதைப்போலத்தான் த.வெ.க.வை நிறுத்த முடியாது.
* கூடிய விரைவில் மதுரை மாநாடு போன்று புதுச்சேரியிலும் மிகப்பெரிய அளவில் பிரசாரத்தை த.வெ.க. நடத்தும்.
* புதுச்சேரி வரலாற்றை புதிதாக எழுதப்போகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர்.
- நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்லாதீர்கள்.
புதுவை உப்பளம் துறைமுக வளாகத்தில் நடைபெறும் த.வெ.க. பொதுக்கூட்டத்துக்காக காலை முதல் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கியூ.ஆர். கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியும் கலைந்து செல்லாமல் விஜயை பார்ப்பதற்காக நின்றிருந்தனர்.
இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீசாரை நெட்டித்தள்ளி அவர்கள் கூட்ட வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து போலீசார் தடியை சுழற்றி தரையில் அடித்தும், சிலரை லேசாக அடித்தும் கலைந்து போக செய்தனர்.
இதையறிந்த பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், யாரும் காவல் துறையினருக்கு சிரமம் தர வேண்டாம். பாஸ் உள்ளவர்கள் முதலில் வாருங்கள். அதன்பின் வரிசையாக தொண்டர்கள் வந்தால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதிப்போம். காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என தொடர்ந்து மைக்கில் பேசி தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.
இதன் பின்னரும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர்.
விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்த தொண்டர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில் பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மைதானத்திற்குள் பாஸ் இல்லாதவர்கள் செல்ல அனுமதித்த பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை பெண் காவல் அதிகாரி ஈஷா சிங் கடுமையாக எச்சரித்தார்.
பாஸ் இல்லாதவர்களை உள்ளே அனுப்பிய புஸ்ஸி ஆனந்தை பார்த்து கடுப்பான பெண் காவல் அதிகாரி, நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்லாதீர்கள். உங்களால் பலர் இறந்திருக்கிறார்கள் என்று ஆவேசமாக கூறினார்.
- பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர்.
- தொண்டர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில் பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் துறைமுக வளாகத்தில் த.வெ.க. பொதுக்கூட்டத்துக்காக காலை முதல் தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
கியூ.ஆர். கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியும் கலைந்து செல்லாமல் விஜய்யை பார்ப்பதற்காக நின்றிருந்தனர்.
இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீசாரை நெட்டித்தள்ளி அவர்கள் கூட்ட வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து போலீசார் தடியை சுழற்றி தரையில் அடித்தும், சிலரை லேசாக அடித்தும் கலைந்து போக செய்தனர்.
இதையறிந்த பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், யாரும் காவல் துறையினருக்கு சிரமம் தர வேண்டாம். பாஸ் உள்ளவர்கள் முதலில் வாருங்கள். அதன்பின் வரிசையாக தொண்டர்கள் வந்தால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதிப்போம். காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என தொடர்ந்து மைக்கில் பேசி தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.
இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர்.
விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்த தொண்டர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில் பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
போலீசாருடன் மல்லுக்கட்டி கொண்டு இருந்த த.வெ.க. தொண்டர்கள் போலீசார் பேரிகார்டை நீக்கியதும் முண்டியடித்து கொண்டு உள்ளே சென்றனர்.
- கியூ.ஆர். கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
- தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் துறைமுக வளாகத்தில் த.வெ.க. பொதுக்கூட்டத்துக்காக காலை முதல் தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
கியூ.ஆர். கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியும் கலைந்து செல்லாமல் விஜய்யை பார்ப்பதற்காக நின்றிருந்தனர்.
இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீசாரை நெட்டித்தள்ளி அவர்கள் கூட்ட வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து போலீசார் தடியை சுழற்றி தரையில் அடித்தும், சிலரை லேசாக அடித்தும் கலைந்து போக செய்தனர்.
இதையறிந்த பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், யாரும் காவல் துறையினருக்கு சிரமம் தர வேண்டாம். பாஸ் உள்ளவர்கள் முதலில் வாருங்கள். அதன்பின் வரிசையாக தொண்டர்கள் வந்தால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதிப்போம். காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என தொடர்ந்து மைக்கில் பேசி தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.
- போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து, கியூ.ஆர். கோடு பாஸ் பரிசோதனை செய்து அனுமதித்தனர்.
- அவரிடம் விசாரணை நடத்த ஓதியஞ்சாலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டத்துக்கு இன்று காலை 7.30 மணி முதல் தொண்டர்கள் வர தொடங்கினர். அவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து, கியூ.ஆர். கோடு பாஸ் பரிசோதனை செய்து அனுமதித்தனர்.
ஒருவரை சோதனை செய்தபோது, அவரிடம் துப்பாக்கி இருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. அப்போது அவர் தனது துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பதை காட்டினார்.
ஆனால், போலீசார் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு புதுவையில் அனுமதியில்லை. பொதுக்கூட்டத்துக்கு ஏன் துப்பாக்கி எடுத்து வந்தீர்கள்? என கேள்வி எழுப்பினர். மேலும் அவரிடம் விசாரணை நடத்த ஓதியஞ்சாலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் என்பதும், மத்திய சி.ஆர்.பி.எப். படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. சிவகங்கை கிழக்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் டாக்டர் பிரபுவின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக அவர் பணியில் உள்ளார்.
டாக்டர் பிரபுவின் பாதுகாப்புக்கு, அரசு அனுமதியுடன் 2 பேர் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தான் டேவிட் என்பதும், பிரபு புதுச்சேரி பொதுக்கூட்டத்துக்கு வந்ததால் அவரின் பாதுகாப்புக்காக உடன் வந்ததும் தெரியவந்தது. இதன் பிறகே புதுச்சேரி போலீசார் நிம்மதியடைந்தனர்.
- 3 நாட்களாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னின்று ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
- தொண்டர்கள் அத்துமீறுவதை தடுக்க இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நாளை த.வெ.க. பொதுக்கூட்டம் நடக்கிறது. கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு 2 மாதமாக த.வெ.க. தலைவர் விஜய் நேரடியாக பொதுமக்களை சந்திக்ககவில்லை. இதனால் புதுச்சேரி பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்க த.வெ.க. தலைவர் விஜய் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு பனையூரில் உள்ள வீட்டில் இருந்து காரில் புறப்படுகிறார். அங்கிருந்து சாலை வழியாக காலை 10.30 மணிக்கு உப்பளம் துறைமுக வளாகத்துக்கு வருகிறார். அவரை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்கிறார்.
முன்னதாக விஜய் பிரச்சார வாகனம் இன்று இரவே புதுச்சேரிக்கு வந்து சேர்கிறது. அந்த வாகனத்தில் நின்றபடி த.வெ.க. தலைவர் விஜய் பேசுகிறார். கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு இருக்கை கிடையாது. அவர்களும் நின்றபடியே விஜய் உரையை கேட்கின்றனர்.
பொதுக்கூட்ட மைதானம் டிட்வா புயல் மழை காரணமாக மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக இருந்தது. பொதுக்கூட்டத்துக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு, மண் கொட்டப்பட்டு, சமன் செய்யப்பட்டுள்ளது.
உப்பளம் சாலையிலிருந்து கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றிலும் தகர ஷீட் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு வரும் தொண்டர்கள் அத்துமீறுவதை தடுக்க இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளை கடந்த 3 நாட்களாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னின்று செய்து வருகிறார்.
போலீசாரின் அறிவுறுத்தலின்படி தொண்டர்கள் வந்து செல்ல வசதியாக துறைமுக வளாக சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு, கூடுதலாக 2 நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்பவர்கள் குடிநீர் வசதிக்காக பிளாஸ்டிக் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்துக்கு புதுச்சேரி போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அவர்கள் புதுச்சேரியை சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் கூட்டத்தில் பங்கேற்போருக்கு கியூ.ஆர். கோடுடன் கூடிய பாஸ் இன்று மாலை முதல் த.வெ.க. நிர்வாகிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு நிர்வாகிக்கு 5 பாஸ்கள் வழங்க திட்டமிட்டுள்ளனர். இந்த பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே கூட்டத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
அதோடு கூட்டத்துக்கு கர்ப்பிணி பெண்கள், சிறுவர், சிறுமிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என புதுச்சேரி போலீசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கூட்டத்தை 12.30 மணிக்கு மேல் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். புதுச்சேரியில் நேற்று முதல் போலீசார் கூட்டம் நடைபெறும் மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருவோர், வாகனங்களை சாலையோரம் நிறுத்தக்கூடாது. பழைய துறைமுக வளாகம், உப்பளம் மைதானம், பாண்டி மெரீனா கடற்கரை பின் பகுதியில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உப்பளம் சாலையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதே போல் பொதுகூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் வாகனங்களை குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தி விட்டு மைதானத்திற்கு நடந்தே வர வேண்டும்.
பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளது. கூட்டம் காலையில் நடப்பதால் இந்த பள்ளிகளுக்கு மாணவர்கள் வந்து செல்ல சிரமம் ஏற்படும். இதை கருத்தில் கொண்டு, பொதுக்கூட்டத்துக்கு வரும் பாதையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படும் என தெரிகிறது. அதோடு அந்த பகுதியை சுற்றியுள்ள மதுக்கடைகளை மூட கலால்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
- புதுச்சேரியில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
- பா.ஜ.கவோடு கூட்டணியில் இருந்தால் தான் புதுச்சேரிக்கு வேண்டிய நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் என்.ஆர். காங்கிரசோடு இணைந்து புதுச்சேரியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். இது தொடர்பாக அக்கட்சியின் தலைவரும் புதுச்சேரி முதலமைச்சருமான ராங்கசாமியோடு பேச்சுவார்த்தை நடத்த த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் முயற்சித்து வருகிறார்.
இந்தநிலையில் புதுவையில் செயல்படுத்த வேண்டிய பல திட்டங்கள் கிடப்பில் உள்ளதால் பா.ஜ.கவோடு கூட்டணியில் இருந்தால் தான் புதுச்சேரிக்கு வேண்டிய நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.
அதற்கு பா.ஜ.க கூட்டணியில் நீடித்தால் தான் சரியாக இருக்கும் என முதலமைச்சர் ரங்கசாமி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் புதுச்சேரியில் தனித்து போட்டியிட த.வெ.க. தயாராகி வருகிறது.
இங்கு ஏற்கனவே என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.கவின் என்.டி.ஏ. கூட்டணி, காங்கிரஸ்- தி.மு.க.வின் இந்தியா கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை ஏற்கனவே களத்தில் உள்ள நிலையில் சார்லஸ் மார்டினும் புதிய கட்சி தொடங்கி போட்டியிட உள்ளார்.
இதனால், புதுச்சேரியில் 5 முனை போட்டி உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.
- டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
- அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரையில் நிலவி வந்த டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டிட்வா புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து பிரசார பயணத்தை வஜய் ஒத்திவைத்திருந்தார்.
- ஒரு மாத காலத்திற்கு பிறகு, விஜய் காஞ்சிபுரம் மக்களை உள்ளரங்கத்தில் அழைத்து வந்து சந்தித்தார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பிரசாரம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது.
ஆனால், கரூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து அரசியல் பிரசாரம் மேற்கொள்ள விஜய் தொடர்ந்து பல சவால்களை சந்தித்து வருகிறார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து பிரசார பயணத்தை வஜய் ஒத்திவைத்திருந்தார். பின்னர், ஒரு மாத காலத்திற்கு பிறகு, விஜய் காஞ்சிபுரம் மக்களை உள்ளரங்கத்தில் அழைத்து வந்து சந்தித்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் வரும் டிச.5ம் தேதி விஜயின் ரோடு ஷோ நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து மக்கள் அதிகளவில் திரண்டால் கரூர் போன்ற அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி, தவெகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
- கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
- சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றம்.
இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. நவ.30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாகை, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகத்தில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிட்வா புயல் எதிரொலியால் புதுச்சேரி துறைமுகத்தில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.






