என் மலர்
மகாராஷ்டிரா
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- குடிநீரை கவனமாக கையாள வேண்டும்.
மும்பையில் இன்று துவங்கி டிசம்பர் 5 ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் பத்து சதவீதம் குறைக்கப்படுகிறது. ஏற்கனவே மும்பை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பின் படி குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. நீர் மேலாண்மை அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
நேற்று (நவம்பர் 30) குடிநீர் விநியோக அமைப்பின் பாகங்களில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக அதனை சரி செய்ய வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. அதன்படி தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 2 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தானே மற்றும் பிவாண்டி பகுதிகளுக்கு வழக்கத்தை விட 10 சதவீதம் நீர் விநியோகம் குறைக்கப்படுகிறது.
குடிநீர் விநியோகத்தை குறைப்பதன் மூலம் தொழில்நுட்ப கோளாறை விரைந்து சரி செய்ய முடியும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் குடிநீரை கவனமாக கையாள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு காரணமாக மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருப்பு மற்றும் தொழிற்பேட்டை பகுதிகளில் நீர் விநியோகம் பாதிகப்படும். தானே மற்றும் பிவாண்டி பகுதிகளிலும் நீர் விநியோகம் குறைக்கப்படுகிறது.
- நிதி உள்ளிட்ட இலாகாவை ஷிண்டே தங்கள் அணிக்கே கோரி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
- ஏக்நாத் ஷிண்டேவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகாவின் மகாயுதி கூட்டணி 235 இடங்களை கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. கூட்டணியில் பாஜக 132 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது, ஷிண்டே சிவசேனா மற்றும் அஜித் பவார் என்சிபி முறையே 57 மற்றும் 41 இடங்களைப் பெற்றன.அடுத்த முதல்வராக யார் என்பதில் பாஜவின் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவ சேனாவின் ஏக்நாத் ஷிண்டே இடையே போட்டி நிலவியது.
ஷிண்டே ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்து பட்னாவிஸ், அஜித் பவாருடன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வந்த போதும் இழுபறியான சூழலே நிலவி வருகிறது. கடந்த நவம்பர் 26 ஆம் தேதியுடன் மகாராஷ்டிர சட்டமன்ற பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ஆட்சி அமைப்பது தாமதம் ஆகி வருகிறது.

இந்த நிலையில்தான் முதல்வர் பதவி பாஜகவுக்கு செல்லும் என கூட்டணியில் உள்ள என்சிபி தலைவர் அஜித் பவார் சஸ்பென்ஸை உடைத்துள்ளார். டெல்லியில் மகாயுதி தலைவர்கள் கூட்டத்தில் பாஜவில் இருந்து முதல்வரை முன்னிறுத்தி மகாயுதி ஆட்சி அமைப்பது என்றும், மீதமுள்ள இரண்டு கட்சிகளுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.
மேலும் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்படுவது இது முதல் முறை அல்ல. 1999ல், ஆட்சி அமைக்க ஒரு மாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது என்று அஜித் பவார் தெரிவித்துள்ளார். முதல்வர் உறுதியானாலும் அமைச்சரவை பங்கீட்டில் ஷிண்டே கறார் காட்டி வருவதாகத் தெரிகிறது. நிதி உள்ளிட்ட இலாகாவை ஷிண்டே தங்கள் அணிக்கே கோரி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

ஏக்நாத் ஷிண்டேவின் உடல்நிலை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது எனவும் மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் உள்ளார் எனவும் தவகவல்கள் வெளியாகி உள்ளது. சதாரா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் ஷிண்டேவுக்கு சிகிச்சை அளித்து வரும் குடும்ப மருத்துவர் ஆர்.எம்.பாட்ரே, கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் மற்றும் தொண்டையில் ஏற்பட்ட நோய்த்தொற்றால் அவர் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்தார். மூன்று முதல் நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது என்று பாட்ரே தெரிவித்தார்.
இதற்கிடையே புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என்று மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே தெரிவித்துள்ளார். மும்பை ஆசாத் மைதானத்தில் மாலை 5 மணிக்குப் பதவியேற்பு விழா நடைபெறும் என்று சந்திரசேகர் X இல் பதிவிட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக முன்மொழியப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உங்கள் பெயரில் சீனாவிற்கு அனுப்பப்பட்ட பார்சலில் 400 கிராம் போதைப்பொருளை கண்டுபிடித்துள்ளோம்
- வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என கூறி ரூ.1,78,000 களவாடியுள்ளனர்.
டிஜிட்டல் கைது மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மோசடி செய்பவர்கள் அரசு அதிகாரிகள் அல்லது மத்திய புலனாய்வு அதிகாரிகள் போல் நடித்து ஆடியோ/வீடியோ அழைப்புகள் மூலம் மக்களை குறிவைக்கின்றனர். அவர்களின் வலையில் விழுந்த பலர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். சமீபத்தில் இந்த மோசடி கும்பலிடம் குஜராத்தை சேர்ந்த 90 வயது முதியவர் 1 கோடி ரூபாயை பறிகொடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த அந்த முதியவரின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம், தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்து பேசியபோது, மறுமுனையில் பேசிய நபர் தன்னை ஒரு சி.பி.ஐ. அதிகாரி என்று என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

முதியவரின் பெயரில் மும்பையில் இருந்து சீனாவிற்கு அனுப்பப்பட்ட பார்சலில் 400 கிராம் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதியவரின் வங்கி கணக்கு மூலம் பணமோசடி உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மிரட்டியுள்ளார்.
மேலும் முதியவரை 'டிஜிட்டல் கைது' செய்திருப்பதாக கூறி, 15 நாட்களுக்கு அவர் யாரையும் தொடர்பு கொள்ள விடாமல் செய்துள்ளனர். முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடியே 15 லட்சம் ரூபாயை அவர்கள் எடுத்துள்ளனர். முதியவரின் குடும்பத்தினர் விஷயம் அறிந்து போலீசில் புகார் அழித்ததை அடுத்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
46 டெபிட் கார்டுகள், 23 வங்கி கணக்கு புத்தகங்கள், ரப்பர் ஸ்டாம்புகள், 28 சிம் கார்டுகள் ஆகியவை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. சீனாவில் செயல்பட்டு வரும் ஒரு கும்பலுடன் சேர்ந்து இத்தகைய மோசடிகளை அரங்கேற்றி வந்துள்ளது. இதுபோல பல்வேறு டிஜிட்டல் கைது மோசடி கும்பல்கள் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன.

மும்பையைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவரிடம் டிஜிட்டல் கைது செய்துள்ளதாகக் கூறி வீடியோ காலில் ஆடைகளை கழற்ற கட்டப்படுத்திய சம்பவமும் அரங்கேறி உள்ளது. மும்பையில் போரிவலி கிழக்கு பகுதியில் வசிக்கும் அந்த பெண்ணை கடந்த நவம்பர் 19 ஆம் தேதி வீடியோ காலில் தொடர்புகொண்ட மோசடி நபர்கள் தங்களை டெல்லி காவல்துறையினரைப் போல் காட்டிக்கொண்டு அந்த பெண் மீது பண மோசடி வழக்கு போடப்போவதாக மிரட்டியுள்ளனர்.

வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என கூறி ரூ.1,78,000 களவாடியுள்ளனர். மேலும் உடலை சோதனை செய்யவேண்டும் என்று கூறி வீடியோ காலிலேயே ஆடைகளை கழற்ற வற்புறுத்தியுள்ளனர். மோசடியை உணர்ந்த பெண் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஐடி சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
- மொத்தம் ள்ள 288 இடங்களில் பாஜக கூட்டணி 235 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது.
- மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது வாக்குச் சீட்டு முறையை வலியுறுத்தினார்
இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் பங்களா வெளியே நிற்கும் நாய் என மகாராஷ்டிர காங்கிரஸ் மேலவை உறுப்பினர் [எம்எல்சி] பாய் ஜக்தாப் பேசியுள்ளார். மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கு கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மொத்தம் ள்ள 288 இடங்களில் பாஜக கூட்டணி 235 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது. காங்கிரசின் மகாயுதி கூட்டணி 46 இடங்களில் மட்டுமே வென்றது. முன்னதாக 6 மாதங்களுக்கு முன் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை விட காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பிடித்த நிலையில் 6 மாதங்களுக்குள் எப்படி மக்கள் மாற்றி வாக்களிக்கக்கூடும் என்றும் இது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய பாய் ஜக்தாப், "தேர்தல் ஆணையம் ஒரு நாயைப் போல் செயல்படுகிறது, நரேந்திர மோடி ஜியின் பங்களாவுக்கு வெளியே அமர்ந்திருக்கும் நாய் அது. நமது ஜனநாயகத்தை வலுப்படுத்த உருவாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களும் இப்போது நரேந்திர மோடியின் செல்வாக்கின் கீழ் செயல்படும் பொம்மைகளாக மாறியுள்ளன என்று தெரிவித்தார்.
மேலும் இவிஎம் மின்னணு வாக்கு எந்திரங்கள் குறித்து கேள்வி எழுப்பிய அவர், " நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது வாக்குச் சீட்டு முறையை வலியுறுத்தினார். ஆனால் இப்போது ஏறுக்குமாறாக பேசுவதாக குறிப்பிட்டார்.
காங்கிரஸ் எம்எல்சி. ஜக்தாப் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
- இந்த விபத்தில் பலியானவர்களில் 7 பெண்களும் அடங்குவர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து கோண்டியா நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 40க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர்.
கோண்டியா-அர்ஜுனி சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்த போலீசார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
பஸ் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே இரங்கல் தெரிவித்துள்ளார். நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார்.
- அமித் ஷா உடனான சந்திப்பு பாசிட்டிவ் ஆக அமைந்ததாக ஷிண்டே தெரிவித்தார்.
- பட்னாவிஸ், ஷிண்டே, பவார் என மூன்று பேராக மும்பை திரும்பினர்.
மகாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், ஆளும் மாகயுதி [பாஜக 132, ஷிண்டே சேனா 57, அஜித் பவார் என்சிபி 41, இதர கூட்டணி கட்சிகள் 5] 235 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.
முதல்வர் பதவி மீண்டும் ஷிண்டேவுக்கா அல்லது பட்னாவிஸ்கா என்பதில் குழப்பம் இருந்தது. இந்நிலையில் முதல்வர் பத்வியை தான் விரும்பவில்லை என்றும் மோடியின் முடிவே இறுதியானது என்றும் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று தலைநகர் டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் ஒன்றாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தேவேந்திர ஃபட்னாவிஸ் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷிண்டே துணை முதல்வர் பதவியை ஏற்க மாட்டார் என்று அவரது கட்சியினர் தொடர்ந்த உறுதியாக கூறி வருகின்றனர். அமித் ஷா உடனான சந்திப்பு பாசிட்டிவ் ஆக அமைந்ததாக ஷிண்டே தெரிவித்தார்.
அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து மாநில தலைநகர் மும்பையில் நடைபெறும் மகாயுதி கூட்டணியின் மற்றொரு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையிலதான் ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்று நடக்க இருந்த இந்த முக்கிய மீட்டிங் ஏக்நாத் ஷிண்டே ஆப்சென்ட் ஆனதால் கூட்டமே ரத்தாகியுள்ளது.

டெல்லி பயணத்துக்கு பின்னர் பட்னாவிஸ், ஷிண்டே, பவார் என மூன்று பேராக மும்பை திரும்பினர். ஆனால் ஏக்நாத் ஷிண்டே சாத்தாரா [Satara] மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்துக்கு திடீரென சென்றுள்ளார். இதனால் இன்று நடக்க இருந்த மீட்டிங்கே ரத்தாகி ஆட்சி மற்றும் அமைச்சரவை பங்கீட்டை தீர்மானிப்பதில் மேலும் இழுபறி ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் பதவியை ஷிண்டே விட்டுக்கொடுப்பதாகக் கூறியிருந்தாலும் அமைச்சரவை பங்கீட்டில் திருப்தியின்மை இருப்பதாக மகாயுதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே ஏக்நாத் ஷிண்டே அதிருப்தியில் கூட்டத்தை புறக்கணித்து சொந்த ஊருக்கு சென்றுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
- மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் இன்று காலை 80.239.08 புள்ளிகளுடன் தொடங்கியது.
- 12.05 மணியளவில் 780 புள்ளிகள் சரிந்து 79, 450 புள்ளிகளில் வர்த்தகமானது.
மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் இன்று காலை 9.15 மணிக்கு சென்செக்ஸ் 80.239.08 புள்ளிகளுடன் தொடங்கியது. நேற்று 80281.64 புள்ளிகளுடன் நிறைவடைந்த வர்த்தகம் இன்று காலை சென்செக்ஸ் 72.56 புள்ளிகள் உயர்ந்து தொடங்கியது.
அதன்பின் சற்று ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. காலை 10.30 மணியளவில் சட்டென சென்செக்ஸ் புள்ளிகள் சரிய ஆரம்பித்தது. 15 நிமிடத்திற்குள் சுமார் சென்செக்ஸ் புள்ளிகள் 700 சரிந்து வர்த்தகம் ஆனது.
தற்போது 12.05 மணியளவில் 780 புள்ளிகள் சரிந்து 79450 புள்ளிகளில் வர்த்தகமானது.
அதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி இன்று 210 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. நேற்று 24274.90 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. இன்று காலை 24274.15 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது, தற்போது. 24070 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
- நான் என்னை ஒரு முதலமைச்சராக எப்போதும் கருதியதில்லை, சாமானிய மனிதனாகவே கருதுகிறேன்
- என்னை ஒரு தடையாக கருத வேண்டாம் என பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிடம் நான் கூறினேன்
288 சட்டமன்றங்கள் கொண்ட மகாராஷ்டிராவுக்குக் கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் சூழலில் ஆளும் மாகயுதி [பாஜக 132- ஷிண்டே சேனா 57 - அஜித் பவார் என்சிபி 41, இதர கூட்டணி கட்சிகள் 5] 235 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்தது.
நேற்றுடன் மகாரஷ்டிர சட்டமன்றத்தின் பதவிக்காலம் காலாவதி ஆன நிலையில் நேற்றைய தினம் ஏக்நாத் ஷிண்டே ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது முதல்வர் பதவிக்கான ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அடுத்த அரசு அமையும் வரை அவர் பொறுப்பாளராக இருப்பார் என்று கூறப்பட்டது.
அடுத்து யார் முதல்வர் என்பதில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இன்று மதியம் தானேவில் செய்தியர்களை சந்தித்த அவர், நான் என்னை ஒரு முதலமைச்சராக எப்போதும் கருதியதில்லை, சாமானிய மனிதனாகவே கருதுகிறேன். எனக்கு என்ன கிடைக்கிறது என்பது முக்கியமில்லை, மக்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதுதான் முக்கியம்,புகழுக்காக நான் வரவில்லை. ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து மக்களுக்காக இதுவரை நான் செய்த பணிகள் திருப்தி அளிக்கின்றன. மீண்டும் முதல்வர் பதவியை நான் விரும்பவில்லை.
என்டிஏ கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடியே இதில் முடிவெடுக்க வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன். அவர் எந்த முடிவு எடுத்தாலும் அதை இறுதி முடிவாக நாங்கள் ஏற்போம். என்னை ஒரு தடையாக கருத வேண்டாம் என பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிடம் நான் கூறினேன். அவர்கள் எடுப்பதே இறுகி முடிவு என்று தெரிவித்துள்ளார்.
- மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்தனர்
- ஷிண்டே சிவசேனாவிடம் 57 எம்எல்ஏக்கள் உள்ளனர்
288 சட்டமன்றங்கள் கொண்ட மகாராஷ்டிராவுக்குக் கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் சூழலில் ஆளும் மாகயுதி [பாஜக 132- ஷிண்டே சேனா 57 - அஜித் பவார் என்சிபி 41, இதர கூட்டணி கட்சிகள் 5] 235 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்தது.
அடுத்து முதல்வர் யார் என்பதில் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் பாஜகவை சேர்ந்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் - கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இன்றுடன் மகாரஷ்டிர சட்டமன்றத்தின் பதவிக்காலம் காலாவதி ஆகிறது.
எனவே மகாரஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அம்மாநிலத்தின் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். இந்த சந்திப்பின்போது துணை முதல்வர்களான தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் புதிய அமைச்சரவை அமையும் வரை ஏக்நாத் ஷிண்டே ஆட்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அடுத்த முதல்வர் யார் என்பதில் இன்னும் சஸ்பன்ஸ் நீடித்து வரும் நிலையில் ஷிண்டேவின் பதவி விலகல் பட்னாவிஸ் - கான பச்சைக் கோடியாக பார்க்கப் படுகிறது.
முன்னதாக பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 132 இடங்களில் வென்றுள்ளதால் பட்னாவிஸ் முதல்வர் ஆக அதிக வாய்ப்புள்ளது. ஆனால் பீகாரில் குறைந்த எம்எல்ஏக்களை கொண்ட நிதிஷ் குமார் என்டிஏ கூட்டணி முதல்வர் ஆக்கப்பட்டது போல் ஏக்நாத் ஷிண்டேவும் மீண்டும் மகா. முதல்வர் ஆக்கப்பட வேண்டும் என்று அவர் தரப்பு சிவசேனா வலியுறுத்தியது.
ஆனால் ஷிண்டேவை பாஜக சமாதானப்படுத்தி துணை முதல்வர் பதவிக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடாகவே, தனது ஆதரவாளர்கள் மும்பையில் கூட வேண்டாம் என்று ஏக்நாத் ஷிண்டே அழைப்பு விடுத்துள்ளார் என்று தெரிகிறது.

தற்போது ஏக்நாத் ஷிண்டேவுடன் ஆளுநரை பட்னாவிஸ் சந்தித்துள்ள நிலையில் விரைவில் அவர் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தைனிக் பாஸ்கர் ஊடகத்துக்கு ஆர்எஸ்எஸ் வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின்படி பட்னாவிஸை முதல்வராக்கும் ஒப்பந்தம் பாஜக - ஷிண்டே சிவசேனா இடையே உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஷிண்டே சிவசேனாவிடம் 57 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் கூட்டணியில் உள்ள அஜித் பவரின் என்சிபி யிடம் 41 எம்எல்ஏக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சென்செக்ஸ் 305.62 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.
- நிஃப்டி 31.65 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.
பங்குச் சந்தை இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி ஆகியவை உயர்வுடன் வர்த்தகமானது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 80,109.85 புள்ளிகளுடன் நேற்று வர்த்தகம் முடிவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 305.62 புள்ளிகள் உயர்ந்து 80,415.47 புள்ளிகள் வர்த்தகம் தொடங்கியது.
காலை 10.20 வரையில் வர்த்தமாக அதிகபட்சமாக சென்செக்ஸ் 80,482.36 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக சென்செக்ஸ் 79,912.57 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.
அதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 31.65 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது. நேற்று நிஃப்டி 24,221.90 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 24,253.55 புள்ளிகள் வர்த்தகம் தொடங்கியது.
இன்று காலை 10.20 வரையில் அதிகபட்சமாக நிஃப்டி 24,361.55 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக நிஃப்டி 21,160.24 புள்ளிகளும் வர்த்தகமானது.
- வெடிகுண்டுகளுடன் புகுந்தது கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளினர்.
- தாக்குதலின் 16-வது ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2008-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 26-ந்தேதியை மும்பை மக்களால் எப்போதும் மறக்க முடியாது. யாருமே எதிர்பாராத நிலையில் திடீரென பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் நவீன துப்பாக்கிகளுடன் தென் மும்பையின் முக்கிய இடங்களில் புகுந்து சரமாரியாகச் சுட்டனர்.
லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அந்த பயங்கரவாதிகள் மும்பைக்கு அருகில் உள்ள கராச்சி துறைமுகத்திலிருந்து சாட்டிலைட் போன்களுடன் மும்பைக்கு படகுகளில் வந்து சேர்ந்தனர். தெற்கு மும்பையிலுள்ள தாஜ் ஹோட்டல், டிரிடெண்ட் ஹோட்டல், சி.எஸ்.டி ரெயில் நிலையம், காமா மருத்துவமனை, யூதர்களின் வழிபாட்டுத்தலம் போன்ற இடங்களில் தானியங்கித் துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் புகுந்தது கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளினர்.
பயங்கரவாதிகளின் மூன்று நாள் தாக்குதலில் காவல்துறையில் பலர் மற்றும் அப்பாவிப் பொதுமக்கள் 166 பேர் உயிரிழந்தனர். மேலும் 238 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், இந்த தாக்குதலின் 16-வது ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மும்பை கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில், மகாராஷ்டிரா கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- அதிகபட்சமாக 132 எம்எல்ஏக்களை பாஜக வைத்துள்ளது
- பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கின்றனர்
மகா. தேர்தல்
288 சட்டமன்றங்கள் கொண்ட மகாராஷ்டிராவுக்குக் கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி இந்த தேர்தலில் 65% வாக்குகள் பதிவாகியுள்ளன. பதிவான வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் சூழலில் ஆளும் மாகயுதி [பாஜக 132- ஷிண்டே சேனா 57 - அஜித் பவார் என்சிபி 41, இதர கூட்டணி கட்சிகள் 5 ] 235 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. எதிரணியான மகா விகாஸ் அகாதி [ காங்கிரஸ் 16, சரத் பவார் என்சிபி 10, உத்தவ் சிவ சேனா 20] என மொத்தம் 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
எதிர்கட்சித் தலைவராக 28 எம்எல்ஏக்கள் வைத்திருக்க வேண்டும் என்ற சூழலில் கூட்டணியின் அதிகப்பட்ச எம்எல்ஏ எண்ணிக்கையே சிவசேனாவின் 20 தான் என்ற நிலையில் மகாராஷ்டிராவில் எதிர்கட்சித் தலைவரே இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இது கடந்த 57 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மோசமான தோல்வி ஆகும்.
முதல்வர் நாற்காலி
நிலைமை இப்படியிருக்க வெற்றி பெற்ற பாஜகவின் மகாயுதி கூட்டணியில் முதல்வர் நாற்காலிக்கான குடுமிப்பிடி சண்டை தொடங்கியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஆளும் சிவசேனாவை உடைத்து ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே பாஜக பக்கம் தாவியதால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஷிண்டேவை முதலமைச்சராக்கி பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது.
சரத் பவாரின் தேசியவாத காங்கிரசை உடைத்து அங்கிருந்து பாஜகவுக்கு ஜம்ப் அடித்த அவரது அண்ணன் மகன் அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2014 முதல் 2019 காலத்தில் மகா. முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸும் துணை முதல்வராக இருந்தார்.

இந்நிலையில் தற்போதைய தேர்தல் வெற்றிக்கு பின்னர் அஜித் பவார் முதல்வர் ஆக வேண்டும் என அவரது கட்சியினரும், தேவேந்திர பட்நாவிஸ் தான் முதல்வர் என பாஜகவினரும் மீண்டும் நாற்காலியை பிடிக்க ஏக்நாத் ஷிண்டேவும் போட்டி போட்டு வருகின்றனர்.
ஆர்எஸ்எஸ் கை
இந்த தேர்தலில் வென்று அதிகபட்சமாக 132 எம்எல்ஏக்களை பாஜக வைத்துள்ளதால் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் ஆக அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. நாளையுடன் சட்டசபை பதவிக்காலம் காலாவதியாக உள்ள நிலையில் இன்றே முதல்வர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கின்றனர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முதல்வர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகா. பார்முலா
மகா. வெற்றிக்கு உழைத்த ஆர்எஸ்எஸ் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்க பாஜக தலைமைக்குப் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஷிண்டே விட்டுக்கொடுத்தால் அவரும், அஜித் பவாரும் துணை முதல்வர் பதவியை ஏற்பார்கள். இந்த டீலிங்கை சுமூகமாக முடிக்க அஜித் பவாரை வைத்து ஏக்நாத் ஷிண்டேவிடம் பாஜக காய் நகர்த்துவதாக மகா. வட்டாரங்கள் கூறுகின்றன.

எனவே மகா. அரசில் முதல்வர், இரு துணை முதல்வர்கள் என்ற பார்முலா தொடரும். மேலும் 6-7 எம்எல்ஏகளுக்கு ஒரு அமைச்சர் வீதம் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதன்படி பாஜகவிலிருந்து 22-24, சிவசேனா 10-12, தேசியவாத காங்கிரஸ் 8-10 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள்.






