என் மலர்
கேரளா
- தற்போது வன மேம்பாட்டுக் கழகத்தின் ஆர்கானிக் ஏலக்காய்களைப் பயன்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது.
- யாத்திரை சீசனுக்கு மட்டும் மொத்தம் 40 லட்சம் கிலோ வெல்லம் தேவைப்படுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாதந்தோறும் நடை திறக்கப்படும் நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் முன்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலையில் முக்கிய பண்டிகை காலமான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. கடந்த ஆண்டு இந்த காலங்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பிரசாதம் தட்டுப்பாடு ஏற்பட்டது. வெல்லம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் கிடைக்காததால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தற்போதே வெல்லம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் பெறுவதற்கான பணிகள் நடைபெற்றன. பிரசாதம் தயாரிப்பதற்கு தேவையான 19 மூலப்பொருட்களுக்கான டெண்டர் கோருவதற்கான நடைமுறைகள் ஏப்ரல் மாதம் தொடங்கி, அவற்றில் 16 பொருட்களின் ஏலம் தற்போது முடிவடைந்துள்ளதாக தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
ஏலக்காய்களில் அதிகபட்ச எச்ச அளவு (எம்.ஆர்.எல்.) அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பது கடந்த காலங்களில் கண்டறியப்பட்டதையடுத்து, தேவசம் போர்டு 'அரவணா' விற்பனை செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் வாரியத்துக்கு ரூ.6.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இது போன்ற நிதி இழப்பு மற்றும் சர்ச்சைகளைத் தவிர்க்க, தற்போது வன மேம்பாட்டுக் கழகத்தின் ஆர்கானிக் ஏலக்காய்களைப் பயன்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் யாத்திரை சீசனுக்கு மட்டும் மொத்தம் 40 லட்சம் கிலோ வெல்லம் தேவைப்படுகிறது. இதனை மகாராஷ்டிராவை சேர்ந்த ஏஜென்சி ஒன்று கடந்த ஆண்டை விட குறைந்த விலையில் வழங்கும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளது.
இதன் காரணமாக இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு சீசனின் போது அரவணை தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மீட்பு குழுவினர் விரைந்து வந்து ஐபோனை மீட்க முயற்சி செய்தனர்.
- கேரள மீட்பு குழுவினர் மற்றும் உதவியவர்களுக்கு பெண் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆண்டிலியா சேலட் என்ற இளம்பெண் தனது விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காக தனது நண்பர்களுடன் கேரளாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு எதிர்பாராத விதமாக அவரது ஐபோன் பாறைகளுக்கிடையே விழுந்தது.
இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து வந்து ஐபோனை மீட்க முயற்சி செய்தனர். அவர்களது இந்த முயற்சியில் பொதுமக்களும் உதவினர்.
இதற்கிடையே அங்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனை பொருட்படுத்தாமல் அவர்கள் கடுமையாக போராடி 7 மணிநேரத்திற்கு பிறகு ஐபோனை மீட்டு இளம்பெண்ணிடம் ஒப்படைத்தனர். இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த அவர் கேரள மீட்பு குழுவினர் மற்றும் உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
இதற்கு ஆயிரக்கணக்கானோர் தங்களது விருப்பம் மற்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- பேருந்து நடத்துனரின் துரிதத்தால் பயணி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் கேரளாவில் மீண்டும் நடந்துள்ளது.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த மாதம் திருச்சூரில் இருந்து கோழிக்கோடுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று தாய், சேய் என இரண்டு உயிர்களை காப்பாற்றினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோவை பார்த்த பயனர்கள், துரிதமாக செயல்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் பாராட்டினர்.
இந்நிலையில், பேருந்து நடத்துனரின் துரிதத்தால் பயணி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் கேரளாவில் மீண்டும் நடந்துள்ளது. அரசு பேருந்தில் பயணித்த வாலிபரின் உயிரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய நடத்துனரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19 வினாடிகள் ஓடும் வீடியோவில், மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகளுக்கு பயணச்சீட்டை வழங்கும் பணியில் நடத்துனர் ஈடுபட்டுள்ளார். பேருந்து என்னவோ காலியாக உள்ளது. ஆனால் பேருந்தில் ஏறிய வாலிபரோ உள்ளே செல்லாமல் படிக்கட்டுக்கு நேராக பிடிமானம் இல்லாமல் நின்று கொண்டு பயணச்சீட்டை வாங்கிக்கொள்கிறார். அப்போது வேகத்தில் செல்லும் பேருந்தில் இருந்து தவறி விழும் வாலிபரை ஒரு கைகொடுத்து காப்பாற்றுகிறார் நடத்துனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நடத்துனர், வாலிபர் விழுவதை பார்க்காமல் ஒரு கையால் காப்பாற்றுகிறார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Kerala bus conductor with 25th Sense saves a guy from Falling Down from Bus
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 7, 2024
pic.twitter.com/HNdijketbQ
- கனமழையால் நகர பகுதிகளில் திடீர் வெள்ளம், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு, தாழ்வான பகுதிகளில் மண் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.
- தொடர்மழை பேரிடர்களுக்கு வழிவகுக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து அங்கு பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. ஒருசில மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழை பெய்ய உள்ள மாவட்டங்கள் பற்றிய விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் தினமும் அறிவித்து வருகிறது.
இந்தநிலையில் வருகிற 9-ந்தேதி வரை கேரளாவில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது. மேலும் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதன்படி வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு நேற்று ஆரஞ்சு எச்சரிக்கையும், ஆலப்புழா, எர்ணாகுளம் இடுக்கி திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இன்று (7-ந்தேதி) திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கும், நாளை(8-ந்தேதி) திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும், நாளை மறுநாள்(9-ந்தேதி) மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த கனமழையால் நகர பகுதிகளில் திடீர் வெள்ளம், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு, தாழ்வான பகுதிகளில் மண் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்றும், தொடர்மழை பேரிடர்களுக்கு வழிவகுக்கலாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
- மத்திய அமைச்சரவையில் நான் சேருவது குறித்து கட்சி முடிவு செய்யும்.
- நான் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் நடந்த மக்களவை தேர்தலில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியது.
மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளிலுமே பா.ஜ.க. தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பா ளர்கள் களமிறக்கப்பட்டனர். இந்த தேர்தல் மூலமாக கேரளாவில் கால்பதிக்க வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய பாரதிய ஜனதா, அதற்கு தகுந்தாற் போல் வேட்பாளர்களை போட்டியிட செய்தது.
மத்திய மந்திரிகள் ராஜீவ் சந்திரசேகர், முரளீதரன், நடிகர் சுரேஷ் கோபி, கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் உள்ளிட்ட வர்களை களமிறக்கியது. அவர்களது வெற்றிக்காக பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி கூட்டணி கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.
இந்நிலையில் கேரள மாநில மக்களவை தொகுதி களில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி மட்டுமே வெற்றி பெற்றார். இதன்மூலம் கேரளாவில் பாரதிய ஜனதா கால் பதித்தது. அந்த நிலையை தனது வெற்றியின் மூலம் பாரதிய ஜனதா கட்சிக்கு நடிகர் சுரேஷ் கோபி பெற்றுத் தந்திருக்கிறார்.
தேர்தல் பிரசாரத்தின் போதே நடிகர் சுரேஷ்கோபி வெற்றிபெற்றால், அவருக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்.
மேலும் கேரள மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட வர்களில் அவர் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார். இதனால் அவருக்கு நிச்சயமாக மத்திய மந்திரி பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் கேபினட் மந்திரி அந்தஸ்தில் அவருக்கு பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியை நடிகர் சுரேஷ்கோபி இன்று நேரில் சந்திக்க உள்ளார். மத்திய மந்திரி பதவி பற்றி நடிகர் சுரேஷ்கோபியிடம் கேட்ட போது, "மத்திய அமைச்சரவையில் நான் சேருவது குறித்து கட்சி முடிவு செய்யும். நான் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்" என்றார்.
- தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
- வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.
தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 60க்கும், காங்கிரஸ் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இவர் 6,47,445 வாக்குகள் பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆன்னி ராஜா 2,83,023 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 3,64,422 ஆகும்.
- அஸ்வதி துரிதமாக செயல்பட்டு அந்த நபரின் சட்டையையும், கழுத்தையும் உறுதியாக பிடித்துக்கொண்டார்.
- இந்த சம்பவத்தில் நகையை பறித்த நபருக்கும், அஸ்வதிக்கும் காயம் ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாயிக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜேஷ். இவருடைய மனைவி அஸ்வதி (வயது30), ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் மாலையில் சேங்கோட்டு கோணம் பகுதியில் உள்ள ஒரு மருந்துக்கடையில் மருந்து வாங்கிவிட்டு கணவருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் அஸ்வதியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பறித்த வேகத்தில் தங்க சங்கிலி பல துண்டுகளாக அறுந்தது.
உடனே அஸ்வதி துரிதமாக செயல்பட்டு அந்த நபரின் சட்டையையும், கழுத்தையும் உறுதியாக பிடித்துக்கொண்டார். அந்த நபர் அஸ்வதியை இழுத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றார். ஆனால் அஸ்வதி தனது பிடியை விடாமல் அந்த நபரை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இழுத்து போட்டார்.
இதைப்பார்த்து அக்கம்பக்கத்தில் நின்ற பொதுமக்கள் விரைந்து வந்து அந்த நபரை பிடித்தனர். இதற்கிடையே அந்த நபர் கையில் கிடைத்த தங்க சங்கிலி துண்டை வாயில் போட்டு விழுங்க முயன்றார். ஆனால் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து அவரது வாயில் இருந்து நகையை வெளியே எடுத்தனர். இந்த சம்பவத்தில் நகையை பறித்த நபருக்கும், அஸ்வதிக்கும் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து கழக்கூட்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்ததும் அந்த நபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரித்தனர்.
விசாரணையில் அவர் திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாயிக்கோணம் பகுதியை சேர்ந்த அனில்குமார் (40) என்பதும், அவர் வந்த மோட்டார் சைக்கிள் திருவனந்தபுரம் வஞ்சியூரில் இருந்து திருடி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நகை பறித்த நபரை பெண் என்ஜினீயர் மோட்டார் சைக்கிளில் இருந்து பிடித்து கீழே தள்ளிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- மாணவியின் இ-மெயிலை தொடர்ந்து அமைச்சர் சிவன்குட்டி மாணவி அவந்திகாவை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
- அமைச்சர் எனது புகாருக்கு பதில் அளிப்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பாலரிவட்டம் பகுதியை சேர்ந்த அவந்திகா பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவரது சைக்கிள் கடந்த மாதம் 21-ந்தேதி அன்று திருட்டு போனது. திருடன் சைக்கிளை திருடியதை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்த அவந்திகா, கல்வி அமைச்சர் சிவன்குட்டிக்கும் தனது சைக்கிள் திருட்டுபோன தகவலை இ-மெயில் செய்துள்ளார்.
மாணவியின் இ-மெயிலை தொடர்ந்து கல்வி அமைச்சர் சிவன்குட்டி மாணவி அவந்திகாவை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
இதுதொடர்பாக மாணவி அவந்திகா கூறுகையில்,
கல்வி அமைச்சர் சிவன்குட்டி எனது புகாருக்கு பதில் அளிப்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் இரண்டு நாட்களுக்கு பின்னர் என்னை தொடர்புகொண்டு திருட்டு போன சைக்கிள் குறித்து விசாரித்தார். போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் எனக்கு புதிய சைக்கிள் ஒன்றை பரிசளித்தார். அமைச்சரிடம் இருந்து புதிய சைக்கிள் கிடைத்ததில் மகிழ்ச்சி என்று தெரித்தார்.
- தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
- வயநாடு, இடுக்கி, ஆலப்புழா, பத்தனம்திட்ட ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று, 5 மற்றும் 6-ம் தேதி ஆகிய 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதேபோல், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், வயநாடு, இடுக்கி, ஆலப்புழா, பத்தனம்திட்ட ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சுள் எச்சரிக்கையும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- கர்நாடகா அரசு, முதல்வர் சித்தராமையா மற்றும் தனக்கு எதிராக மிருக பலி கொடுத்து யாகம் என சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
- தேவசம் வாரியத்தின் கீழ் உள்ள எந்த ஒரு கோவிலிலும் மிருக பலி சம்பந்தப்பட்ட வழிபாடுகள் கிடையாது என கேரள அரசு விளக்கம்.
கேரளாவில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவில் அருகே தனக்கும், முதல்-மந்தரி சித்தராமையா மற்றும் எங்கள் அரசுக்கு எதிராக சத்ரு பைரவி யாகம், மிருகபலி நடைபெறுவதாகவும், யாகத்தில் 21 ஆடுகள், 5 பன்றிகள், 21 செம்மறி ஆடுகள் பலியிடப்பட்டுள்ளதாகவும் வேண்டுமானால் கேரளாவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி கோவிலை பாருங்கள் தெரியும் என கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் பகீர் தகவல் கூறினார்.
இதுகுறித்து கேரள அரசு விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. மேலும் கண்ணூர் கண்டிபரம்பா ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உளவுத்துறை மற்றும் போலீசார் மூலம் கேரள அரசு சிறப்பு விசாரணை நடத்தியது.
விசாரணை குழுவினர் தீவிர விசாரணை நடத்தி கேரள டி.ஜி.பி.க்கு அறிக்கை அளித்தனர். அதில் சத்ருபைரவி யாகமோ, மிருக பலியோ நடைபெறவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் கேரளாவில் உள்ள கண்ணூர் ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவில் நிர்வாக வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தேவசம் வாரியத்தின் கீழ் உள்ள எந்த ஒரு கோவிலிலும் மிருக பலி சம்பந்தப்பட்ட வழிபாடுகள் கிடையாது. அதுபோல் கேரளாவில் உள்ள மலபார் தேவசம் போர்டின் கீழ் உள்ள ராஜராஜேஸ்வரி கோவில் பெயர் பரவி வரும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
ஸ்ரீ ராஜராஜேஷ்வரி கோவில் கேரளாவில் உள்ள பழமையான மற்றும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். மலபார் தேவசாம் வாரியத்தின் கீழ் உள்ள எந்த ஒரு கோவில்களிலும் மிருக பலியுடன் கூடிய வழிபாடுகள் அல்லது பிரசாதம் கிடையாது என்று மலபார் என தெரிவித்துள்ளது.
- தங்கம் கடத்தல் விவகாரத்தில் பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விமான பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது
- சுரபி காதுன், கண்ணூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்திற்கு மஸ்கட் நாட்டில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வந்ததாக விமான பணிப்பெண் கொல்கத்தாவை சேர்ந்த சுரபி காதுன் கைது செய்யப்பட்டார். அவர் ரூ.60 லட்சம் மதிப்பிலான 960 கிராம் தங்கத்தை மலக்குடலில் மறைத்து கடத்தி வந்தது வருவாய் புலனாய்வு இயக்குனரக சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தங்கம் கடத்தல் விவகாரத்தில் பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விமான பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது இது தான் முதல்முறை என கூறப்படுகிறது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவர் தங்கம் கடத்தி வருவது இது முதல்முறை அல்ல என தெரியவந்தது. கேரளாவைச் சேர்ந்த தங்கம் கடத்தல் கும்பலுக்காக அவர் கடத்தல் செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து சுரபி காதுன், கண்ணூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் மேலும் ஒரு விமான ஊழியருக்கும் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரையும் நேற்று கைது செய்தனர். அவரது பெயர் சுகைல் தனலோட் (வயது 33). கேரள மாநிலம் கண்ணூர் தில்லங்கேரியை சேர்ந்த அவர், சுமார் 10 ஆண்டுகளாக ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் மூத்த கேபின் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தான் சுரபி காதுனை, கடத்தல் கும்பலில் சேர்த்து விட்ட தாக கூறப்படுகிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தங்கம் கடத்தல் விவகாரத்தில் விமான ஊழியர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரெயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என கேரள காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
- இந்தக் கோரிக்கையை ரெயில்வே அமைச்சகம் புறக்கணிப்பதாக புகார் தெரிவித்தது.
திருவனந்தபுரம்:
இந்திய மக்கள் தொகையை கணக்கில் கொண்டு ரெயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என கேரள காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் தங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதாக அக்கட்சி புகார் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக குரல் கொடுக்க வேண்டும் என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடம் கேரள காங்கிரஸ் உதவி கேட்டிருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.
இதுதொடர்பாக, கேரள காங்கிரஸ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அதிக கட்டணம் கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் பெரும்பாலும் காலியாகவே இயங்கி வருகிறது. இந்திய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு ரெயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளது.
மேலும் அந்தப் பதிவில், கொளுத்தும் வெயிலுக்கு நடுவே கூட்ட நெரிசலில் மக்கள் ரெயிலில் பயணிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்ட கேரள காங்கிரஸ், அந்தப் பதிவில் அமிதாப் பச்சனை டேக் செய்துள்ளது.
அதில், மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பிரபலங்களின் கோரிக்கைகளுக்கு உடனே பதிலளிப்பார் என்பதால் சமூக காரணங்களுக்காக இந்த விவகாரம் குறித்து அமிதாப் பச்சன் டுவீட் செய்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளது.
Dear @SrBachchan,
— Congress Kerala (@INCKerala) May 30, 2024
We need a small help from you. Crores of ordinary people are forced to travel like this. Even the reserved compartments are packed with people. It is 52°C in North India, and this video is from Gorakhpur where the UP CM hails from.
Our population grew by 14 Cr… pic.twitter.com/B5PaS1dmEq






