என் மலர்
கேரளா
- 1563 மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்கள் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- ஒருவர் மோசடி செய்து மருத்துவராக ஆவதை யோசித்து பாருங்கள்.
மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நீட் தேர்வு கடந்த மே 5-ந்தேதி நடந்தது. இதில் நாடு முழுவதும் 24 லட்சம் பேர் தேர்வு எழுதினர். சமீபத்தில் நீட் தேர்வுக்கான முடிவு வெளியானது.
இதற்கிடையே நீட் தேர்வில் குளறுபடி நடந்ததாகவும், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆள் மாறாட்டம், குறிப்பிட்ட தனியார் மையத்தில் இருந்து அதிகம் பேர் முதலிடம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 1563 மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்கள் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடு தொடர்பாக இன்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை விடுமுறை கால அமர்வு முன்பு நடந்தது.
அப்போது நீதிபதிகள் சில கருத்துக்களை தெரிவித்தனர். அவர்கள் கூறும்போது, "நீட் தேர்வு விவகாரத்தில் 0.001 சதவீதம் யாராவது சுணக்கமாகவோ அல்லது அலட்சியமாகவே இருந்தால் கூட முழுமையாக ஆராய வேண்டும். இவ்விகாரத்தை கண்டிப்பான முறையில் அணுக வேண்டும்.
ஒருவர் மோசடி செய்து மருத்துவராக ஆவதை யோசித்து பாருங்கள். அது போன்ற நபர் சமுதாயத்திற்கும், அந்த அமைப்புக்கும் எவ்வளவு மோசமான விளைவுகளை கொடுப்பார் என்பதை யோசித்து பார்க்க வேண்டியுள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் கடினமாக படிக்கிறார்கள். ஆனால் ஒரு சில குறுக்கு வழிகள் மூலம் சிலர் வெற்றி பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு தவறு நடந்திருந்தால் அதை நாம் ஒப்பு கொண்டுதான் ஆக வேண்டும்" என்று கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நீட் தேர்வுகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும், நீட் தேர்வு முறைகேடுகள், நமது தேர்வு முறையின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கிறது. தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் விடுத்த நோட்டீஸ், இப்பிரச்சனையின் தீவிரத்தைக் காட்டுகிறது.
மாநில அளவிலான தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, ஒரே நுழைவு தேர்வாக்கிய ஒன்றிய அரசு இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
- வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்கிறார்.
- பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் முடிவு வெளியானதில் இருந்து 14 நாட்களுக்குள் இரண்டில் ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும். அதன்படி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே ராகுல் காந்தியிடம் தோல்வியடைந்த ஆனி ராஜா, காங்கிரஸ் கட்சி அவர்களுடன் மிகப்பெரிய எதிர் யார் என்பது முடிவு செய்வது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆனி ராஜா கூறியதாவது:-
பிரியங்கா காந்தியை வயநாடு தொகுதியில் நிறுத்தியது காங்கிரஸ் கட்சியின் முடிவு. அவர்களுடைய முடிவிற்கு நாங்கள் மரியாதை அளிக்கிறோம். பெண் வேட்பாளரை அறிவித்தது நல்ல விசயம். ஏராளமான பெண்கள் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். அனைத்து கட்சிகளும் இது குறித்து கருதுவது அவசியம்.
பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவதை நான் வரவேற்கிறேன். ஆனால், நான் ராகுல் காந்தியிடம் எழுப்பிய அதே கேள்வியை மரியாதை நிமித்தமாக பிரியங்காக காந்தியிடம் கேட்கிறேன். உங்களுடைய மற்றும் உங்கள் கட்சியுடைய மிகப்பெரிய எதிரி யார்?. வகுப்புவாத-பாசிசப் படைகளா? அல்லது இடது சாரிகளா? என்று கேட்கிறேன்.
இவ்வாறு ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.
- வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியிட இருக்கிறார்.
- காங்கிரஸ் பெண் ஒருவரை நிறுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது- ஆனி ராஜா
கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டபோது, கம்யூனிஸ்டு கட்சி தலைவர் ராஜாவின் மனைவி ஆனி ராஜா அங்கு போட்டியிட இருக்கிறார். இதனால் ராகுல் காந்தி போட்டியிடக் கூடாது என வெளிப்படையாக விமர்சனம் வைக்கப்பட்டது.
ஆனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். அதேவேளையில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து அங்கேயும் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் ஒரு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் இன்று இரவு வயநாடு தொகுதியை ராஜினாமா செய்ய இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார். அதேவேளையில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்தது.
இந்த நிலையில் ராகுல் காந்தி ரேபரேலி எம்.பி. பதவியை தக்கவைத்துக் கொள்ளும் அவரது முடிவை வரவேற்பதாக ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆனி ராஜா கூறியதாவது:-
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ராகுல் காந்தியை போன்ற முக்கியமான தலைவர்கள் இந்தி பேசும் முக்கியமான மாநிலத்தில் பணியாற்றுவது முக்கியமானது. ஆகவே அவர் எடுத்த இந்த முடிவில் தவறு இல்லை. நான் இதை வரவேற்கிறேன்.
இடைத்தேர்தலில் பெண் ஒருவரை நிறுத்துவதாக கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த முறையை விட தற்போது பெண்கள் சதவீதம் மக்களவை எம்.பி. எண்ணிக்கையில் குறைவாக உள்ளது. ஆகவே, அதிகமான பெண்கள் வருவதை விரும்புகிறேன்.
இவ்வாறு ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி பொது வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என்ற கேள்விக்கு, கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி, இடது சாரி கூட்டணி தனித்தனியாக போட்டியிடுவதாக இந்தியா கூட்டணியில் முடிவு செய்யப்பட்டது. இதில் ஏதாவது மாற்றம் என்றால் அது இந்தியா கூட்டணியை உருவாக்கிய, அதில் உள்ள கட்சிகளால் மட்டுமே முடியும்.
- ஜி-7 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி போப் ஆண்டவரை சந்தித்தார்.
- மோடி தன்னை கடவுள் அனுப்பியவர் எனத் தெரிவித்திருந்ததை கேலி செய்யும் வகையில் காங்கிரஸ் பதிவு.
ஜி-7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். அதையேற்று இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநாட்டில் வாடிகன் தலைவரான போப் பிரான்சிசை சந்தித்த பிரதமர் மோடி, அவரை கட்டி அணைத்து உரையாடினார்.
இந்நிலையில், மோடியை போப் பிரான்சிஸ் சந்தித்தது தொடர்பாக கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டது. அதில், "கடைசியாக கடவுளை சந்திக்கும் வாய்ப்பு போப் பிரான்சிஸ்க்கு கிடைத்துள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தது.
இதற்கு பாஜக தலைவர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தனர். "தீவிர இஸ்லாமிக் மற்றும் நகர்ப்புற நக்சலைட்டுகளால் கையாளப்படுவதாக அறியப்படும் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் எக்ஸ், தொடர்ந்து தேசிய தலைவர்களை இழிவுப்படுத்தும் பதிவுகளை பதிவிட்டு வருகிறது. தற்போது மரியாதைக்குரிய போப் ஆண்டவர் மற்றும் கிறிஸ்டியன் சமூகத்தினரை கிண்டல் செய்துள்ளது" என கேரள மாநில பாஜக தலைவர் கே. சுரேந்திரன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, வயநாடு எம்.பி. ராகுல் காந்தி, பொது செயலாளர் கேசி வேணுகோபால் இதை ஆதரிக்கிறார்களா? என கேள்வி எழுப்பினார்.
கேரள மாநில பாஜக பொது செயலாளர் ஜார்ஜ் குரியன் "பதிவு மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருந்தது. குறிப்பாக கேரளாவில் கிறிஸ்தவம் மூன்றாவது பெரிய மதமாக உள்ளது. அவற்றை புண்படுத்தும் வகையில் இருந்து" என்றார்.
பாஜக ஐடி அணி பொறுப்பாளர் அமித் மால்வியா "மற்றவர்களின் நம்பிக்கையை இழிவுப்படுத்துவதுதான் காங்கிரஸ் வரலாறு. கத்தோலிக்க மதத்தவரான முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
கடவுளைப் பற்றி கேலி செய்வது மதங்களுக்கு எதிரானது அல்ல என்று போப் பிரான்சிஸ் கூறியதை மேற்கோள் காட்டிய காங்கிரஸ் "ஒரு பார்வையாளரின் உதடுகளிலிருந்து கூட புத்திசாலித்தனமான புன்னகையை நீங்கள் கொண்டு வந்தால், நீங்கள் கடவுளையும் சிரிக்க வைக்கிறீர்கள் என போப் ஆண்டவர் கூறினார்" என தெரிவித்தது.
இது ஒரு நகைச்சுவைாக்க பதிவிட்டதாகவும், மக்களை சந்திக்காமல் இருக்கும் பிரதமர் மோடியை செயலை வெளிக்காட்டுவதற்கும், அவர் தன்னை வழக்கமான மனிதன் அல்ல. கடவுளால் அனுப்பப்பட்டவர் என்றார். அதன்அடிப்படையில் இந்த டுவிட்டர் இதற்கான கேலி ட்வீட் ஆகும்" கேரள மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் விடி பல்ராம் நியாயப்படுத்திருந்தார்.
இருந்த போதிலும் கடுயைமான விமர்சனம் எழுந்த நிலையில், டுவிட்ட பதிவை நீக்கம் செய்துவிட்டது, இது கிறிஸ்தவர்களை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என கேரள மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
- மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மீது இன்றளவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்
- யாரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமயிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில் மோடியின் புதிய அமைச்சரவையில் இதுவரை இல்லாத அளவுக்கு 72 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கிய பிரபல கேரள நடிகர் சுரேஷ் கோபி எதிர்த்து நின்ற கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் வேட்ப்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று பாஜகவின் முதல் வெற்றியை கேரளாவில் பதிவு செய்தார். இந்த வெற்றியின் முக்கியத்துவம் கருதி எம்.பி சுரேஷ் கோபிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் பதிவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 15) கேரளாவில் செய்தியளர்களை சந்தித்த சுரேஷ் கோபி, மறைந்த காங்கிரஸ் தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி இந்தியாவின் அன்னையாக விளங்குகிறார் என்று புகழாரம் சூட்டினார்.

மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மீது இன்றளவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வைத்து சர்சையைக் கிளப்பி வரும் நிலையில் பாஜக சார்பில் அமைச்சராகியுள்ள சுரேஷ் கோபி இந்திரா காந்தியை இந்தியாவின் அன்னை என்று புகழ்ந்தது அரசியல் களத்தில் பேசுபொருளானது.
இந்நிலையில் தனது கருத்து குறித்து சுரேஷ் கோபி தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கத்தில், இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை என்று நான் கூறியது எனது இதயபூர்வமான கருத்து. எனது மனதில் உள்ளதையே நான் பேசினேன். அதில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை.
யாரும் விரும்பினாலும் விருமாபாவிட்டாலும் இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை என்பதை யாராலும் மறுக்க முடியாது. சுதந்திரத்துக்கு பின் தனது இறுதி மூச்சுவரை இந்தியாவை கட்டியெழுப்பிய தலைவர் இந்திரா காந்தி. தேசத்துக்காக உழைத்த ஒரு தலைவரை அவர் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக மறுக்கவும் மறக்கவும் முடியாது என்று தெரிவித்துள்ளார்.

- 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவுக்கு கொரோனா பரவலும் காரணம்.
- நடுத்தர வர்க்க பெற்றோர்களிடையே கூட, அவர்களின் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு ஆசை உள்ளது.
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையால் வெளியிடப்பட்ட 2022-ம் ஆண்டிற்கான சமீபத்திய தரவுகளின்படி, இஸ்லாமிய பெண்களிடையே ஆரம்பகால குழந்தை பிறப்பது கேரளாவில் 10 வருட காலத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கேரளாவில் 2022-ல் பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் உள்ளன.
15-19 வயதுப் பிரிவினருக்கான புள்ளிவிவரங்களின்படி, 2022ல் இஸ்லாமியரிடையே டீன் ஏஜ் பிரசவங்கள் 7,412 ஆக இருந்தது. இது 2012 க்குப் பிறகு (14066) மிகக் குறைந்த எண்ணிக்கையாகும், இது 47 சதவீத சரிவைக் குறிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் கேரளாவில் இஸ்லாமிய பெண்களின் சராசரி டீன் ஏஜ் பிரசவங்கள் 15,000க்கு மேல் இருந்ததை கருத்தில் கொண்டு இந்த சரிவு முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு தசாப்தத்தில் இஸ்லாமியரிடையே அதிக எண்ணிக்கையிலான பதின்ம வயதுப் பிரசவங்கள் 2013-ல் 22,924 ஆகும். 2022-ம் ஆண்டின் எண்ணிக்கையானது தசாப்தத்தின் மிக உயர்ந்த எண்ணிக்கையில் இருந்து 67 சதவிகிதம் குறைந்துள்ளது.
2019-ம் ஆண்டிலிருந்து இஸ்லாமியரிடையே டீன் ஏஜ் பிரசவங்களின் விகிதம் குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இருப்பினும், 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு கொரோனா பரவலுக்குக் காரணம்.
இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில், ஒரு தசாப்தத்தில் 15-19 வயதுக்குட்பட்ட பிரசவங்களின் எண்ணிக்கையில் மிக அதிகமான சரிவு இஸ்லாமியர்களிடையே பதிவு செய்யப்பட்டுள்ளது- 6,654. இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை முறையே 1749 மற்றும் 2888 ஆக இருந்தது. பதின்ம வயதினரின் குழந்தைப் பிரசவங்களின் சதவீதம் 87 சதவீதம் குறைந்துள்ளது.
NISA (ஒரு முற்போக்கு முஸ்லீம் பெண்கள் மன்றம்) செயலாளர் வி.பி.சுஹாரா கூறுகையில், டீன் ஏஜ் கர்ப்பத்தின் எண்ணிக்கையில் சரிவு வரவேற்கத்தக்கது. "பருவப் பிரசவங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான முக்கிய காரணியாக இருக்கும் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக அதிக விழிப்புணர்வு உள்ளது. மேலும் கடந்த காலத்தைப் போலல்லாமல், பெற்றோர் மற்றும் பெண் இருவரும் நல்ல கல்வியைப் பெறுவதில் ஆர்வமாக உள்ளனர்.
நடுத்தர வர்க்க பெற்றோர்களிடையே கூட, ஒரு ஆசை உள்ளது. அவர்களின் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு இதுவும் பெண்களின் திருமண வயதை அதிகரிக்கக் கோருவதற்கு ஒரு காரணம்" என்றார்.
- வெற்றியின் முக்கியத்துவம் கருதி எம்.பி சுரேஷ் கோபிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் பதிவி வழங்கப்பட்டுள்ளது.
- கேரள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் குறித்தும் தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் நடந்து முடித்த பாராளுன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமயிலான என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்று 3 வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார். அவருடன் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 72 அமைச்சர்களும் பதவியேற்றனர். கூட்டணியை தவிர்த்து இந்த தேர்தலில் மொத்தம் 240 இடங்களில் பாஜக வென்றுள்ளது.
தென் மாநிலங்களில் பாஜகவுக்கு அதிக வரவேற்பு இல்லாத நிலையில் கம்ம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக விளங்கும் கேரளாவில் முதல்முறையாக பாஜக 1 இடத்தில் வெற்றிபெற்றுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கிய பிரபல கேரள நடிகர் சுரேஷ் கோபி எதிர்த்து நின்ற கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் வேட்ப்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று பாஜகவின் முதல் வெற்றியை கேரளாவில் பதிவு செய்தார்.
இந்த வெற்றியின் முக்கியத்துவம் கருதி எம்.பி சுரேஷ் கோபிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் பதிவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கேரளாவில் செய்தியளர்களை சந்தித்த சுரேஷ் கோபி, மறைந்த காங்கிரஸ் தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி குறித்தும், கேரள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் குறித்தும் தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவின் அன்னையாக விளங்குகிறார் என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் கேரளாவின் முன்னாள் முதல்வருமான கருணாகரன் மிகவும் தைரியமான ஒரு தலைவரும் நிர்வாகியுமாவார். மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் E.K. நாயனாரும் கருணாகரனும் தனது அரசியல் குருக்கள் என்று சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். ஆலப்புழாவில் கருணாகாரனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு சுரேஷ் கோபி செய்தியாளர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில் மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மீது இன்றளவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வைத்து சர்சையைக் கிளப்பி வரும் நிலையில் பாஜக சார்பில் அமைச்சராகியுள்ள சுரேஷ் கோபி இந்திரா காந்தியை இந்தியாவின் அன்னை என்று புகழ்ந்துள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

- கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடந்துள்ளது.
- அடுத்தகட்ட விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும்.
மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்கள் முதலீட்டுக்காக 7 கோடி பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக அரூரை சேர்ந்த ஹமீது புகார் மனு தாக்கல் செய்தார்.
ஹமீது மனுவை விசாரித்த கொச்சி நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை தயாரித்த பரவா பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டு மோசடி செய்துள்ளதாக கேரள உயர்நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பரவா ஃபிலிம்ஸ் ஒரு ரூபாய் கூட ஹமீதுக்கு வழங்கவில்லை என்றும் பொய்யான தகவல்களை கூறி அவருடன் ஒப்பந்தம் செய்து பணம் பெற்றுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்திற்காக முதலீடாக ₹7 கோடி பெற்று முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் படத்தின் தயாரிப்பாளர் - நடிகர் ஷோபின் ஷாஹிர் இடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடந்துள்ளது. அடுத்தகட்ட விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் ஷோபினிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நீட் தேர்வு என்பது ஆங்கில வழி, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மட்டுமே பெரிதும் சாதகமாக இருக்கிறது.
- ஏழை மாணவர்களின் மருத்துவ உரிமையை முற்றிலும் இந்த முறை மறுக்கிறது.
அண்மையில் நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. நீட் தேர்வுத்தாள் லீக் ஆனது என்ற குற்றச்சாட்டிலிருந்து மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது வரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த ஜூன் 4-ந்தேதி நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றார்கள். இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 67 மாணவர்கள் எப்படி முதல் மதிப்பெண் எடுக்க முடியும் என கேள்வி எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து கூட்டி கழித்து பார்த்தாலும் எடுக்க முடியாத 718 மற்றும் 719 போன்ற மதிப்பெண்களை ஏராளமானோர் பெற்றிருந்தனர். இது தொடர்பாக மாணவர்கள் கேள்வி எழுப்பியபோதுதான், கடந்த முறை சில மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுத சுமார் 30 நிமிடங்கள் வரை காலதாமதம் ஆனது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது என தேசிய தேர்தல் முகமை (NTA) தெரிவித்தது. இதனால் மாணவர்கள் கொதித்தெழுந்தனர்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான திமுக நிலைப்பாட்டை இந்த முடிவு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. நுழைவுத் தேர்வு சமூக நீதி மற்றும் கூட்டாட்சிக்கு எதிரானது என்று மீண்டும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு சொல்வது தான் சரி என்று கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில்,
"நீட் தேர்வு என்பது ஆங்கில வழி, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மட்டுமே பெரிதும் சாதகமாக இருக்கும் ஒரு முறை என தமிழ்நாடு அரசு மேற்கொண்ட ஆய்வின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. உள்ளூர் நடுத்தர பள்ளிகளில் படித்து வரும் ஏழை மாணவர்களின் மருத்துவ உரிமையை முற்றிலும் இந்த முறை மறுக்கிறது. 2017-ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு எழுப்பி வரும் குரல் இதுதான். இதே போன்ற புள்ளிவிவரங்கள் மற்ற மாநிலங்களில் இருந்தும் சேகரிக்கப்பட வேண்டும்" என்று கேரள காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
- திருச்சூர் மாவட்டத்தில் இன்று காலை 8.15 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது.
- பாலக்காடு மாவட்டத்தில் உள்ள குமரநெல்லூர், திரிதாலா பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் இன்று காலை 8.15 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. குன்னம்குளம், எருமப்பட்டி, பழஞ்சி, குருவாயூர், சோவனூர் பகுதிகளில் இதனை மக்கள் உணர்ந்துள்ளனர்.
பாலக்காடு மாவட்டத்தில் உள்ள குமரநெல்லூர், திரிதாலா பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. காலை 8.30 மணிக்கு சுமார் 10 முதல் 20 விநாடிகள் நீடித்த இந்த நில நடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
- எனது குடும்பத்தில் ஒருவருக்கு திடீரென சளி, சோர்வு மற்றும் மூட்டு வலி ஏற்பட்டது. கூடவே சொறி பாதிப்பும் இருந்ததோடு காய்ச்சலும் விட்டு விட்டு வந்தது.
- கொரோனா, டெங்கு வரை பல சோதனைகள் செய்த பிறகும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கேரளாவை சேர்ந்தவர் டாக்டர் சைரியாக் அப்பி பிலிப்ஸ். இவரது உறவினர் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவருக்கு என்ன பாதிப்பு என்பதை கண்டுபிடிப்பதற்காக ஏராளமான மருத்துவ பரிசோதனைகள் செய்துள்ளார். ஆனாலும் டாக்டர் பிலிப்சால் அவரது உறவினருக்கு என்ன நோய் பாதிப்பு என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் திணறிய நிலையில் நோயை கண்டுபிடிக்க அவரது வீட்டு வேலைக்கார பெண்ணின் அனுபவ பாடம் உதவி செய்துள்ளது.
இதுகுறித்து டாக்டர் பிலிப்ஸ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
எனது குடும்பத்தில் ஒருவருக்கு திடீரென சளி, சோர்வு மற்றும் மூட்டு வலி ஏற்பட்டது. கூடவே சொறி பாதிப்பும் இருந்ததோடு காய்ச்சலும் விட்டு விட்டு வந்தது. அவருக்கு எந்த பாதிப்பு என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. வைரஸ் ஹெபடைடிஸ் முதல் கொரோனா, டெங்கு வரை பல சோதனைகள் செய்த பிறகும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மிகவும் குழம்பி போனோன். அப்போது வீட்டில் வேலை செய்யும் மூதாட்டி ஒருவர் வந்தார். அவர் தனது பேரக்குழந்தைகளுக்கும் இது போன்று சொறி இருப்பதாகவும், இதனை அவர்கள் ஒரு அஞ்சம்பாணி என்று அழைப்பார்கள் எனவும் கூறினார்.
அவர் சொன்னது போலவே அதற்கான பரிசோதனை செய்த போது எனது உறவினருக்கு அஞ்சம்பாணி பாதிப்புதான் உறுதியானது. 17 ஆண்டு மருத்துவ துறையில் அனுபவம் கொண்ட என்னால் கண்டுபிடிக்க முடியாததை எனது வீட்டில் வேலை செய்யும் பெண் 10 நொடியில் கண்டுபிடித்து விட்டார் என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 31 பேரின் உடல்கள் இந்திய விமான படை விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது.
- கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி சுரேஷ் கோபி, தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்பட உயர் அதிகாரிகள் 31 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
குவைத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 49 பேர் பலியாகிய நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் உயிர் இழந்தவர்களில் 45 பேர் இந்தியர்கள் ஆவர். அதில் கேரளாவை சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டை சார்ந்த 7 பேர் மற்றும் டெல்லி உள்பட மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் 14 பேர் ஆவர்.
இந்த தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 31 பேரின் உடல்கள் இந்திய விமான படை விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது.
விமான நிலையத்திற்கு வந்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி சுரேஷ் கோபி, தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்பட உயர் அதிகாரிகள் 31 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதையடுத்து, தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.






