என் மலர்
டெல்லி
- நாடு முழுவதும் உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
- மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி 2வது இடம் பிடித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் சிறப்பாகச் செயலாற்றும் முதல் மந்திரி யார் என்று இந்தியா டுடே நாளிதழ் இந்த மாதம் [ஆகஸ்ட்] நடத்திய Mood of the Nation கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 2,06,826 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பானது நடத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 36 சதவீதம் பேர் உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை சிறப்பாகச் செயல்படும் முதல் மந்திரியாக கருதுகின்றனர். உ.பி. முதல்வர் கடந்த பிப்ரவரியில் 35 சதவீத ஆதரவு பெற்று இருந்தார். தற்போது ஒரு சதவீதம் அதிகரித்து 36 சதவீதம் பெற்றுள்ளார்.
2வது இடம் பிடித்துள்ள மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் செயல்பாடுகளை 13 சதவீதம் பேர் விரும்புகின்றனர்.
அவரைத் தொடர்ந்து 7 சதவீதம் பேர் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சிறந்த முறையில் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
- 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என ஆர்.பி.ஐ. கணித்திருந்தது.
- விவசாயத்துறை 3.7 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது 2024-25 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 1.5 சதவீதமாக இருந்தது.
2025-26ஆம் நிதியாண்டின் ஏப்ரல்- ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டின் இந்திய உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் என தரவுகள் தெரிவிக்கின்றன. இது ஆர்.பி.ஐ. கணித்ததைவிட அதிகமாகும். பண்ணைத்துறை (farm Sector), வர்த்தகம், ஓட்டல், நிதி மற்றம் ரியல் எஸ்டேட் சேவைகள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக 2024ஆம் ஆண்டு ஜனவரி-மார்ச் மாத காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) 8.4 சதவீதமாக இருந்தது. அதன்பின் ஐந்து காலண்டிற்குப் பிறகு தற்போது 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சீனாவின் ஜிடிபி 5.2 சதவீதமாக இருக்கும் நிலையில், இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக தொடர்ந்து இருந்து வருகிறது.
விவசாயத்துறை 3.7 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது 2024-25 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 1.5 சதவீதமாக இருந்தது.
கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் உற்பத்தித்துறையின் வளர்ச்சி 7.6 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த மாதம் தொடக்கத்தில் ஆர்.பி.ஐ., 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும், முதல் காலாண்டில் 6.5 சதவீதமாகவும், 2ஆவது காலாண்டில் 6.7 சதவீதமாகவும், 3ஆவது காலாண்டில் 6.6 சதவீதமாகவும், 4ஆவது காலாண்டில் 6.3 சதவீதமாகவும் இருக்கும் எனக் கணித்திருந்தது.
டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பு தற்போது அமலில் உள்ளது. இதன் தாக்கம் 2ஆவது காலாண்டில் பிரதிபலிக்க வாய்ப்பு உள்ளது.
- ஜி.எஸ்.டி வரி விதிப்பில் செய்யப்படும் மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம்.
- மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல் GST-ல் சீர்திருத்தம் செய்வது பயனளிக்காது என்று தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்தத் திட்டத்தால் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
இந்தியாவில் 2017 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி முறை அமலில் உள்ளது. தற்போது, 5 %, 12 %, 18 % மற்றும் 28% என நான்கு அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி தனது உரையில், "இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது; ஜிஎஸ்டி வரி விதிப்பில் அடுத்தகட்ட மாற்றங்களை இந்த தீபாவளிக்கு கொண்டு வர உள்ளோம்" என்று தெரிவித்தார்.
அக்டோபர் 20 தீபாவளி வருகிறது. முன்னதாக செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே ஜிஎஸ்டி முறையில் என்ன மாதிரியான மாற்றங்களை மத்திய அரசு செய்ய உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள 5 %, 12 %, 18 % , 28% என்ற 4 அடுக்கு வரி 2 அடுக்குகளாக குறைக்கப்பட உள்ளது.
அதாவது, 12, 28 சதவீத அடுக்குகள் நீக்கப்பட உள்ளன. 12 சதவீதத்தில் இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீத அடுக்குக்கும், 28 சதவீத அடுக்கில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத அடுக்குக்கு மாற்றப்பட உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆடம்பர மற்றும் புகையிலை, குட்கா, சிகரெட் போன்ற பொருட்கள் சிறப்பு வரி அடுக்கில் சேர்க்கப்பட்டு அவற்றுக்கு 40% வரி வசூலிக்கப்பட உள்ளது.
இந்த 40% வரி அடுக்கில் வெறும் 5-7 பொருள்கள் மட்டுமே இடம்பெறும் என்றும், இதில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் சேர்க்கப்படாது என்றும் கூறப்படுகிறது.
அதேநேரம் பெட்ரோலிய பொருட்கள் தொடர்ந்து ஜிஎஸ்டி வரம்புக்கு வெளியே வைத்து இருக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜிஎஸ்டி சீர்த்திருத்தம் தொடர்பாக, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதியமைச்சர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினர்.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் - எட்டு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் அமைச்சர்கள், வரி விகிதக் குறைப்புக்குப் பிறகு வணிகங்கள் லாபம் ஈட்டுவதைத் தடுக்க ஒரு வழிமுறையை கோரினர். இதன் மூலம் நன்மைகள் சாமானிய மக்களைச் சென்றடைவதை உறுதி செய்தனர்.
தற்போதைய வரி நிகழ்வைத் தக்கவைக்க முன்மொழியப்பட்ட 40 சதவீத விகிதத்துடன் கூடுதலாக புகையிலை, கார்பனேற்றப்பட்ட பானங்கள், ஆடம்பர பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட வேண்டும் என்று மாநிலங்கள் பரிந்துரைத்தன. மேலும், இந்த வரியிலிருந்து கிடைக்கும் வருமானம் மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தன.
வரும் செப்டம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் தலைமையிலான மற்றும் அனைத்து மாநில அமைச்சர்களையும் உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சில் முன் தங்கள் திட்டங்களை முன்வைக்க உள்ளனர்.
எட்டு மாநிலங்களின் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நிதியமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா கூறியதாவது:-
ஒவ்வொரு மாநிலமும் அதன் தற்போதைய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாயில் 15-20 சதவீதத்தை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
20 சதவீத ஜிஎஸ்டி வருவாய் இழப்பு நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகளின் நிதி அமைப்பை கடுமையாக சீர்குலைக்கும். மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இது வருவாய் நிலையாகும் வரை மேலும் நீட்டிக்கப்படலாம்.
இவ்வாறு கூறினார்.
- சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
- சுப்பிரமணிய சுவாமியின் மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்
புதுடெல்லி:
முன்னாள் மேல்-சபை எம்.பி.யான சுப்பிரமணிய சுவாமி, ராமர் பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்க தான் விடுவித்த கோரிக்கை குறித்து விரைவாக முடிவு செய்ய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சுப்பிரமணிய சுவாமியின் மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர். பின்னர் இந்த வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
- கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்தியதற்கு எதிராக ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
- தமிழக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்தியதற்கு எதிராக ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது,
கோவில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழ்நாட்டில் கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதில் தவறில்லை எனக்கூறி தமிழக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் விளையாட்டு துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்துள்ளது.
- இந்தியாவை விளையாட்டுத் திறனுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது.
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தேசிய விளையாட்டு தின வாழ்த்துக்கள்! இந்த சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில், மேஜர் தியான் சந்த் ஜிக்கு அஞ்சலி செலுத்துவோம். அவரது சிறப்பு பல தலைமுறைகளை கடந்தும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் விளையாட்டு துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்துள்ளது.
இளம் திறமையாளர்களை வளர்க்கும் அடிமட்டத் திட்டங்கள் முதல் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை உருவாக்குவது வரை, நமது நாட்டில் ஒரு துடிப்பான விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பைக் காண்கிறோம்.
விளையாட்டு வீரர்களை ஆதரிப்பதற்கும், உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், இந்தியாவை விளையாட்டுத் திறனுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 62 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் செயல் திறன் சிறப்பாக இருப்பதாக கூறியிருந்தனர்.
- பிரதமர் மோடியின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக 58 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் செயல் திறன் மற்றும் பிரதமராக நரேந்திர மோடியின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து இந்தியா டுடே-சி வோட்டர் நிறுவனம் இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தி வருகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 62 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் செயல் திறன் சிறப்பாக இருப்பதாக கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது ஆகஸ்டு மாத கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளது.
ஜூலை 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 14-ந்தேதி வரை நாட்டில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளிலும் 54 ஆயிரத்து 788 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடியின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக 58 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
இது மோடியின் செல்வாக்கில் சிறிய சரிவு இருப்பதை காட்டினாலும், 11 ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகும் பிரதமர் மோடிக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து செல்வாக்கு இருப்பதையும், அவருக்கு மக்கள் மத்தியில் நீடித்த அங்கீகாரத்தை காட்டுவதாகவும் அமைந்துள்ளது.
இதை போல கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 34.2 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் 3-வது பதவி காலத்தில் அவரது செயல் திறன் இதுவரை சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர்.
அதே நேரம் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடியின் செயல் திறன் சிறப்பாக இருப்பதாக 36.1 சதவீதம் பேர் கூறியிருந்தனர். இது இந்த முறை மோடியின் செயல் திறன் சற்று சரிவை காட்டுகிறது.
கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் பிரதமர் மோடியின் செயல் திறன் சராசரி என்று 12.7 சதவீதம் பேரும், மோசம் என்று 12.6 சதவீதம் பேரும், மிகவும் மோசம் என்று 13.8 சதவீதம் பேரும் குறிப்பிட்டுள்ளனர்.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் 62.1 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் தற்போது ஆகஸ்டு மாத கருத்துக்கணிப்பில் இது 54.2 சதவீதமாக குறைந்துள்ளது.
- தரவரிசையில் பீகாரின் பாட்னா, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரங்கள் கடைசி இடங்களில் உள்ளன.
- கல்வி நிறுவனங்கள் பகலில் பாதுகாப்பாக இருப்பதாக 86 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர்.
புதுடெல்லி:
'பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்கள்-2025'ன் பட்டியலை நேற்று தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 31 நகரங்களில் 12 ஆயிரத்து 770 பெண்களிடம் கருத்துக் கேட்டு விவரங்கள் பதிவு செய்யப்பட்டு நகரங்களின் தரவரிசை பட்டியலிடப்பட்டது. பல்கலைக்கழக மற்றும் சட்டக்கல்லூரி நிபுணர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழு இந்த கருத்துக்கணிப்பில் ஈடுபட்டது. அந்த கருத்துக்கணிப்பில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-
நாகாலாந்தின் தலைநகரமான கோஹிமா, பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ள நகரமாக பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. அங்கு பெண்களுக்கு நல்ல மரியாதையும், நிகழ்வுகளில் சரிசமமான பங்களிப்பும் கிடைப்பதாக பெண்கள் கூறி உள்ளனர். பெண்களுக்கான கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தரவரிசையில் பீகாரின் பாட்னா, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரங்கள் கடைசி இடங்களில் உள்ளன, அங்கு பெண்களுக்கு நிறுவன ரீதியான மதிப்புகள், கட்டமைப்பு வசதிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், ஆணாதிக்க முறைகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.
கோஹிமா, விசாகப்பட்டினம், புவனேஸ்வரம், ஐஸாவல், காங்டாக், இடாநகர், மும்பை ஆகியவை சிறந்த பாதுகாப்பான நகரங்களாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. ராஞ்சி, ஸ்ரீநகர், கொல்கத்தா, டெல்லி, பரிதாபாத், பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் அந்த வரிசையில் பின்தங்கிய நிலையில் உள்ளன.
ஒட்டுமொத்தமாக கணக்கெடுக்கப்பட்டதில் 60 சதவீதம் பெண்கள், தங்கள் நகரத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும், 40 சதவீத பெண்கள் பாதுகாப்பை உணரவில்லை என்றும் அல்லது பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.
கல்வி நிறுவனங்கள் பகலில் பாதுகாப்பாக இருப்பதாக 86 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால் இரவிலும், கல்வி வளாகத்திற்கு வெளியிலும் பாதுகாப்பு அப்படி உணர்வதில்லை என்று கூறி உள்ளனர்.
இரவில் பொது போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் அதிகம் இருப்பதாக பலரும் தெரிவித்து உள்ளனர்.
பணியிடங்களில் பாதுகாப்பாக இருப்பதாக 91 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர். 50 சதவீதம் பேர் பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு எதிரான விதிகள் இருக்கிறதா என தெரியவில்லை என்று கூறி உள்ளனர்.
பாதுகாப்பு புகார்களில் அதிகாரிகள் திறம்பட செயல்படுவார்கள் என்று நான்கில் ஒரு பங்கு பெண்கள் மட்டுமே நம்புவதாக தெரிவித்து உள்ளனர். தற்போதைய பாதுகாப்பு முயற்சிகள் ஓரளவு போதுமானவை என்று 69 சதவீதம் பேர் கூறி உள்ளனர். 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு முயற்சிகளில் குறைபாடு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
பொது இடங்களில் துன்புறுத்தலை அனுபவித்து உள்ளதாக 7 சதவீதம் பெண்கள் கூறி உள்ளனர். அதே வேளையில் 24 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 14 சதவீதம் பேர் பாலியல் தொல்லையை அனுபவித்து உள்ளதாக கூறி உள்ளனர். அதாவது இளம்பெண்கள் 2 மடங்கு துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்களாம்.
துன்புறுத்தலுக்கு வாய்ப்புள்ள இடமாக சுற்றுப்புறங்கள் இருப்பதாக 39 சதவீதம் பேரும், போக்குவரத்து இடங்கள் துன்புறுத்தலுக்கு வாய்ப்புள்ள இடமாக 29 சதவீதம் பேரும் தெரிவித்து உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பெண் மட்டுமே புகார் அளிப்பதாகவும், 2 பங்கு துன்புறுத்தல்கள் பலவித காரணங்களால் கண்டுகொள்ளாமல் விடப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது.
- இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வந்தது.
- வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்றார்,
புதுடெல்லி:
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஏற்கனவே விதித்த 25 சதவீதம் வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்துள்ள நிலையில், 50 சதவீதம் வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா வரி விதிப்பால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மாற்று வழியை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லி முன்னாள் முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இதுதொடர்பாக கூறியதாவது:
வரி விதிப்பு விவகாரத்தில் மத்திய அரசிடம் இருந்து உடனடி பதில் எதுவும் இல்லை. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி பொருட்களுக்கான 11 சதவீதம் வரியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது உள்ளூர் வணிகத்தை கடுமையாக பாதிக்கும். பிற நாடுகள் அமெரிக்காவிற்கு அடிபணியவில்லை; அவர்கள் கூடுதல் வரியை விதித்துள்ளனர். எனவே நாமும் கூடுதல் வரியை விதிக்க வேண்டும்.
அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தால், இந்தியா 100 சதவீத வரியை அமெரிக்காவிற்கு விதிக்க வேண்டும். மொத்த நாடும் இந்த முடிவுக்கு ஆதரவாக இருக்கும். எந்தவொரு நாடும் இந்தியாவை புண்படுத்த முடியாது. 140 கோடி மக்களைக் கொண்ட நாடு இந்தியா என தெரிவித்தார்.
- வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது.
- இந்த வரி விலக்கு நூல், துணி, ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி செலவுகளைக் குறைக்கும்.
புதுடெல்லி:
இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50 சதவீத வரி நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஜவுளி பொருட்கள், ஆயத்த ஆடைகள், இறால், மின்சார எந்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
குறிப்பாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் அத்துறை கடுமையாக பாதிக்கும்.
இந்த நிலையில் பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்து உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பருத்தியை சுங்க வரி இல்லாமல் இறக்குமதி செய்வதற்கான காலஅவகாசத்தை டிசம்பர் 31-ந்தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், பாதிப்பை எதிர்கொள்ளும் ஜவுளி ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய ஜவுளித்துறைக்கு பருத்தி கிடைப்பதை அதிகரிக்க, கடந்த 19-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை பருத்திக்கான இறக்குமதி வரிக்கு தற்காலிகமாக மத்திய அரசு விலக்கு அளித்திருந்தது.
ஏற்றுமதியாளர்களை மேலும் ஆதரிக்கும் வகையில், பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கை செப்டம்பர் 30-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது. மேலும் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வரியும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே சுங்க வரி இல்லாமல் பருத்தியை இறக்குமதி செய்வதற்கான அறிவிப்பை கடந்த 18-ந்தேதி மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது. இந்த நிலையில் இந்த வரி விலக்கை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உள்ளது.
இந்த வரி விலக்கு நூல், துணி, ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி செலவுகளைக் குறைக்கும். உற்பத்தியாளர்கள், நுகர்வோருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
உள்நாட்டு சந்தையில் கச்சா பருத்தி கிடைப்பதை அதிகரித்து பருத்தி விலையை உறுதிப்படுத்தும். இதன் மூலம் ஜவுளிப் பொருட்கள் மீதான பணவீக்க அழுத்தம் குறையும். இது உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதன் மூலமும், ஜவுளித் துறையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பாதுகாப்பதன் மூலமும் இந்திய ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதி போட்டித்தன்மையை ஆதரிக்கும் என்று அரசு தெரிவித்து உள்ளது.
- ஆன்லைன் விளையாட்டு மூலம் பையன் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளான்.
- இரண்டு சிறுமிகளிடம் ஆசைவார்த்தை கூறி டெல்லியில் இருந்து பானிபட்டுக்க வரவழைத்துள்ளான்.
ஆன்லைன் விளையாட்டு வாலிபர்கள், சிறுவர்களை அடிமையாக்கியுள்ளது. அவர்களைத் தவிர இளம் பெண்களும், சிறுமிகளும் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர். சிலர் பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டில் தீவிரமாக மூழ்கி விபரீத முடிவுகளை எடுக்கும் அபாய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடைசெய்யும் வகையில், மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதனால் பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
டெல்லியை சேர்ந்த இரண்டு நடுத்தர சிறுமிகள் "We Play" என்ற ஆன்லைன் விளையாட்டை தொடர்ந்து விளையாடி வந்துள்ளனர். அப்போது அரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த கிஷிஷ் என்ற பையனுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது தடைவிதிக்கப்பட்ட நிலையில், அந்த பையன் இருவரையும் தொடர்பு கொண்டு நாம் தொடர்ந்து ஆன்லைனில் விளையாடலாம். அதற்கான வழிகள் எனக்குத் தெரியும் என ஆசைவார்த்தை கூறியுள்ளான். இதை நம்பி உறவினர்களான அந்த இரண்டு சிறுமிகளும் விடியற்காலையில் யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்து வெளியேறி பானிபட் சென்றடைந்துள்ளனர். காலையில் விவேக் குமார் என்பவர் தன்னுடைய மகள், உறவினர் மகளுடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர்களை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார்.
உடனடியாக போலீசார் அவர்களை தேடும்பணியில் ஈடுபட்டு, இருவரும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, அவர்கள் பாதுக்காப்ப மீட்டு, பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
- மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரவை பரிந்து செய்திருந்தது.
- அகமதாபாத் போட்டியை நடத்த சிறந்த இடமாக இருக்கும் என அமைச்சரவை தெரிவித்துள்ளது.
மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறையின் பரிந்துரையை ஏற்று, 2030 காமன்வெல்த் போட்டியை நடத்த விண்ணப்பம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிதுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை குழு, குஜராத் மாநிலம் அகமதாபாத் காமன்வெல்த் போட்டியை நடத்த சிறந்த இடமாக இருக்கும். அங்கு உலகத் தரம் வாய்ந்த மைதானங்கள், பயிற்சி வசதிகள், விளையாட்டு கலாசார பேரார்வம் உள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.
ஒருவேளை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, போட்டியை நடத்தும் உரிமையை பெற்றால், குஜராத் அரசுக்கு உதவக்குடிய ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆகஸ்ட் 31ஆம் தேதி விண்ணப்பம் செய்ய கடைசி நாளாகும். இந்திய ஒலிம்பிக் சங்கம் இன்னும் 48 மணி நேரத்திற்குள் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து நடைமுறைகளை நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கடைசியாக 2010ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை நடத்தியது.
கிளாஸ்கோவில் நவம்பர் மாதம் கடைசி வாரம் நடைபெற இருக்கும் காமன்வெலத் போட்டிக்கான பொதுக்கூட்டத்தில் போட்டியை நடத்தும் நாடு தேர்வு செய்யப்படும். பட்ஜெட் விவகாரம் தொடர்பாக கனடா போட்டியை நடத்துவதில் இருந்து பின்வாங்கியுள்ளது. இதனால் இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது எனக் கூறப்படுகிறது.
2036 ஒலிம்பிக் போட்டியையும் நடத்த இந்தியா தீவிராக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அகமதாபத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன. உள்அரங்கம் போட்டி நடத்துவதற்கான இரண்டு இடங்கள் உள்ளன. கால்பந்து போட்டி நடத்துவதற்கான இடமும் உள்ளது.
மேலும், தற்போது கட்டப்பட்டு வரும் சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்போர்ட்ஸ் என்கிளேவ் முக்கிய மைதானமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காமன்வெல்த் போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்வார்கள்.






