என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Fund"

    • கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்தியதற்கு எதிராக ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
    • தமிழக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்தியதற்கு எதிராக ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது,

    கோவில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழ்நாட்டில் கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதில் தவறில்லை எனக்கூறி தமிழக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    • தேவஸ்தான பட்ஜெட்டில் ஒரு சதவீதம் என்பது ரூ.100 கோடிக்கும் மேலாகும்.
    • காண்டிராக்டர்களுக்கு தேவஸ்தான நிதியை வழங்ககூடாது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பானுபிரகாஷ் ரெட்டி என்பவர் ஆந்திர ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்தார்.

    அதில், ஏழுமலையான் கோவில் நிதியில் ஒரு சதவீதம் திருப்பதி மாநகர வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    தேவஸ்தான பட்ஜெட்டில் ஒரு சதவீதம் என்பது ரூ.100 கோடிக்கும் மேலாகும். அதன்படி சாலைகள் அமைப்பது, மருத்துவ மனைகள் கட்டுவது, சுத்தம் செய்யும் பணிகளை நிர்வகிப்பது போன்றவற்றுக்கு இதுவரை ரூ.100 கோடி வரை திருப்பதி மாநகராட்சிக்கு, திருப்பதி கோவில் சார்பில் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    இது இந்து சமய அறங்காவல் சட்டம் 111-ன் படி குற்றமாகும். இதனை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

    வழக்கு விசாரணையின் போது தேவஸ்தானம் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இனி தூய்மை பணிகளுக்கு தேவஸ்தான நிதியை உபயோகிக்க கூடாது. அது மாநகராட்சியின் பணியாகும்.

    இதே போன்று, மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கும் தேவஸ்தானத்தின் நிதியை உபயோகிக்க கூடாது.

    காண்டிராக்டர்களுக்கு தேவஸ்தான நிதியை வழங்ககூடாது.

    ஆனால், காண்டிராக்ட் பணி தொடரலாம். இது குறித்து 2 வாரங்களுக்குள் தேவஸ்தானம் விளக்க நோட்டீஸ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    ×