search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uddhav"

    • தேவஸ்தான பட்ஜெட்டில் ஒரு சதவீதம் என்பது ரூ.100 கோடிக்கும் மேலாகும்.
    • காண்டிராக்டர்களுக்கு தேவஸ்தான நிதியை வழங்ககூடாது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பானுபிரகாஷ் ரெட்டி என்பவர் ஆந்திர ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்தார்.

    அதில், ஏழுமலையான் கோவில் நிதியில் ஒரு சதவீதம் திருப்பதி மாநகர வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    தேவஸ்தான பட்ஜெட்டில் ஒரு சதவீதம் என்பது ரூ.100 கோடிக்கும் மேலாகும். அதன்படி சாலைகள் அமைப்பது, மருத்துவ மனைகள் கட்டுவது, சுத்தம் செய்யும் பணிகளை நிர்வகிப்பது போன்றவற்றுக்கு இதுவரை ரூ.100 கோடி வரை திருப்பதி மாநகராட்சிக்கு, திருப்பதி கோவில் சார்பில் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    இது இந்து சமய அறங்காவல் சட்டம் 111-ன் படி குற்றமாகும். இதனை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

    வழக்கு விசாரணையின் போது தேவஸ்தானம் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இனி தூய்மை பணிகளுக்கு தேவஸ்தான நிதியை உபயோகிக்க கூடாது. அது மாநகராட்சியின் பணியாகும்.

    இதே போன்று, மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கும் தேவஸ்தானத்தின் நிதியை உபயோகிக்க கூடாது.

    காண்டிராக்டர்களுக்கு தேவஸ்தான நிதியை வழங்ககூடாது.

    ஆனால், காண்டிராக்ட் பணி தொடரலாம். இது குறித்து 2 வாரங்களுக்குள் தேவஸ்தானம் விளக்க நோட்டீஸ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    பாராளுன்ற தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக மும்பையில் இன்று பாஜக தலைவர் அமித் ஷா உத்தவ் தாக்கரேவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். #AmitShah #AmitShahmeetsUddhav #SenaBJPpact
    மும்பை:

    மத்தியிலும், மகாராஷ்டிரா மாநிலத்திலும் பா.ஜனதா கூட்டணி அரசில் உள்ள சிவசேனா, பா.ஜனதாவை விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. 2019- பாராளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் தனியாக போட்டியிடுவோம் என அவ்வப்போது கூறிவந்தன.

    ஆனால், அப்படி தனித்து போட்டியிட்டால் விபரீதமான விளைவு ஏற்படும் என இரு கட்சிகளின் தலைவர்களும் உணர்ந்து இருந்தனர். இதனால், கூட்டணி அவசியம் என்ற நிலைக்கு இரு கட்சிகளும் தள்ளப்பட்டன,

    இதனால் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், கடந்த வாரம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும் கூட்டணி தொடர்பாக பேசியதாக தகவல் வெளியாகியது.
      
    இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று மாலை மும்பை வந்தார். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய பாஜக தலைவர்களை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    பின்னர், பன்ட்ரா பகுதியில் உள்ள உத்தவ் தாக்கரே இல்லத்துக்கு சென்ற அமித் ஷா, அவருடன் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இன்னும் சிலமணி நேரத்தில் இரு தலைவர்களும் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் பா.ஜனதா 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. 

    கடந்த 2014-பாராளுமன்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இதில் பாஜக 23 தொகுதிகளையும், சிவசேனா 18 தொகுதிகளையும் பிடித்திருந்தது நினைவிருக்கலாம்.

    அதே ஆண்டில் நடந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் இருகட்சிகளும் தனித்து போட்டியிட்டன. தேர்தல் முடிவுக்கு பின்னர் அங்கு பாஜக ஆட்சி அமையை சிவசேனா ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது. #AmitShah #AmitShahmeetsUddhav #SenaBJPpact 
    ×