என் மலர்
டெல்லி
- 2025 உலக அமைதி குறியீடு (GPI) உலகின் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
- பாகிஸ்தான் 144வது இடத்தில் உள்ளது.
2025 உலக அமைதி குறியீடு (GPI) உலகின் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
சுமார் 163 நாடுகளில் இராணுவமயமாக்கல், வெளிப்புற மோதல்கள், கொலை மற்றும் பயங்கரவாதம் போன்ற 23 அம்சங்களை ஆராய்ந்து GPI இந்த பட்டியலைத் தயாரித்துள்ளது.
அதன்படி, பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு ஐஸ்லாந்து. 2008 முதல் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. ஒரு காலத்தில் உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்ட அயர்லாந்து தற்போது பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த மற்ற நாடுகளில் நியூசிலாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், போர்ச்சுகல், டென்மார்க், ஸ்லோவேனியா மற்றும் பின்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
முதல் 10 இடங்களில் இடம்பிடித்த ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர் என்பது கவனிக்கத்தக்கது.
இதற்கிடையில், இந்தியா இந்த பட்டியலில் 115வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 144வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தில் (163வது இடத்தில்) ரஷ்யா இடம்பெற்றுள்ளது.
- அடுத்தடுத்தது 6.0, 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
- இந்த கடினமான நேரத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு துணை நிற்கிறது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான குனார் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்தது 6.0, 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமானது. இரவில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமானவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதுவரை 800க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மீட்புப் பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் ஆப்கனிஸ்தானுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லவி அமீர் கான் முத்தகியுடன் பேசினேன். நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
காபூலில் இன்று 1000 குடும்ப கூடாரங்களை இந்தியா வழங்கியது. காபூலில் இருந்து குனாருக்கு இந்திய தூதரகம் 15 டன் உணவுப் பொருட்களை உடனடியாக அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவிலிருந்து மேலும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படும்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்த கடினமான நேரத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு துணை நிற்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பிரதமர் மோடியும் ஆப்கனிஸ்தானுக்கு ஆன உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார்.
- தனது அதிகாரபூர்வ இல்லத்திலேயே கடந்த 40 நாட்களாக இருந்து வந்தார்.
- மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியத்தை பெற ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலரிடம் அண்மையில் விண்ணப்பித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தனது அதிகாரப்பூர்வ அரசு மாளிகையை காலி செய்துள்ளார்.
தற்போது தெற்கு டெல்லியில் உள்ள சத்தர்பூரில் உள்ள ஒரு தனியார் பண்ணை வீட்டிற்கு அவர் குடிபெயர்ந்துள்ளார்.
கடந்த ஜூலை 21, பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது ஜெகதீப் தன்கர் தனது துணை ஜனாதிபதி பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
உடல்நலப் பிரச்னைகளை அவர் காரணம் காட்டி இருந்தாலும், அவரது ராஜினாமா அரசியலில் பேசுபொருளாக மாறியது.
ராஜினாமாவுக்கு பின் தன்கர் தகவல் ஏதுமின்றி காணாமல் போனதாகவும், பாஜகவின் அழுத்தத்தின் பேரில் அவர் ராஜினாமா செய்ததாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் அவர் தனது அதிகாரபூர்வ இல்லத்திலேயே கடந்த 40 நாட்களாக இருந்து வந்தார் என்றும் தற்போது அங்கிருந்து காலி செய்துள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியத்தை பெற ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலரிடம் அண்மையில் விண்ணப்பித்துள்ளார்.
1993 -1998 வரை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜகதீப் தன்கரின் ஓய்வூதியம் 2019-ல் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டபோது நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் என்டிஏ கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.
- 15வது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.
- சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
ஜப்பான் மற்றும் சீனாவுக்கு 4 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 28 அன்று டெல்லியில் இருந்து புறப்பட்டார்.
முதலில் ஜப்பான் சென்றடைந்த மோடி, தலைநகர் டோக்கியோவில் நடந்தேறிய 15வது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இரு நாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
2 நாள் ஜப்பான் பயணத்தை முடித்த மோடி தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க தனியார் விமானம் மூலம் அங்கிருந்து சீனா சென்றார். தியான்ஜின் விமான நிலையத்தில் நேற்று அவருக்கு சிவப்பு கம்பல வரவேற்பு வழங்ப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இதன்போது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாநாட்டை நிறைவடைந்த பின் மோடி தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து தனி விமானத்தில் மீண்டும் டெல்லி புறப்பட்டார். இன்று இரவு 7.45 மணியளவில் நாடு திரும்பிய அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
- அமெரிக்கா- இந்தியா இடையிலான கூட்டாண்மை தொடர்ந்து புதிய உயரங்களை எட்டுகிறது.
- இது 21-ஆம் நூற்றாண்டை வரையறுக்கும் மிகச்சிறந்த உறவு.
வரி விதிப்பு, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு ஆகியவற்றில் இந்தியா, நமது சொல்லை கேட்கும் என அமெரிக்கா நினைத்தது. ஆனால் வரி விதிப்பு நெருக்கடியை அதிகரிக்கும். ஆனால் நாம் அதை சமாளிப்போம் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். மேலும், ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா மறுத்துவிட்டது.
இந்த நிலையில்தான் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி சீனா சென்றார். அங்கு சீனா அதிபர் ஜி ஜின் பிங் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அமெரிக்கா வரி விதிப்பில் கடின நடவடிக்கை எடுப்பதால் இந்தியா சீனா மற்றும் ரஷியா உடனான உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமைந்தது.
புதின் சந்திப்புக்கு சற்று முன்னதாக, இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு குறித்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டது.
அதில் "அமெரிக்கா- இந்தியா இடையிலான கூட்டாண்மை தொடர்ந்து புதிய உயரங்களை எட்டுகிறது. இது 21-ஆம் நூற்றாண்டை வரையறுக்கும் மிகச்சிறந்த உறவு. நமது மக்கள் மற்றும் நமது முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் முன்னிலைப்படுத்துகிறோம்.
புதுமை, தொழில்முனைவு, பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் என அனைத்து துறைகளிலும் நமது இருநாட்டு மக்களுக்கு இடையிலான நீடித்த நட்புதான் இந்தப் பயணத்தின் எரிசக்தியாக விளங்குகிறது" என்று தெரிவித்து உள்ளது.
- கடந்த மே மாதம் ரூ.2 லட்சத்து 1 ஆயிரம் கோடி கிடைத்தது.
- கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத்தில் ரூ.1.74 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது.
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தன.
மாதந்திர ஜி.எஸ்.டி. வசூல், கடந்த ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் கோடி கிடைத்தது. மே மாதம் ரூ.2 லட்சத்து 1 ஆயிரம் கோடி கிடைத்தது.
இந்நிலையில், நடப்பு ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ரூ.1.86 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத்தில் ரூ.1.74 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது.
இது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆகஸ்டில் 6.5 சதவீதம் கூடுதல் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.
- ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது.
- இந்த கடினமான நேரத்தில் துயரமடைந்தவர்களின் குடும்பங்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.
ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான நிலையில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. கட்டிய இடிபாடுகளுக்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றன.
இந்திய நேரப்படி மதியம் 2.45 மணி வரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800-ஐ தாண்டியுள்ளது. இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணி நடைபெற்று வருவதால் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் ஆழ்ந்து வருத்த அளிக்கிறது என இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் துயரமடைந்தவர்களின் குடும்பங்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது.
- ஓய்வு பெற 5 ஆண்டுகளுக்கு அதிகமாக காலம் உள்ள ஆசிரியர்கள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும்.
- ஓய்வு பெறும்போது கிடைக்கும் இறுதி சலுகைகளை பெற்றுக் கொண்டு கட்டாய ஓய்வு பெறலாம்.
புதுடெல்லி:
அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா? என்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை செய்யப்பட்டது.
நீதிபதி தீபான்கர் தத்தா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
அந்த வழக்கு விசாரணையின்போது, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், அதை கட்டாயப்படுத்தக்கூடாது என்று வாதம் வைக்கப்பட்டது.
குறிப்பாக சிறுபான்மை கல்வி நிறுவனங்களை பொறுத்தவரைக்கும் அரசியல் சாசனம் அவர்களுக்கு வழங்கி இருக்கக்கூடிய உரிமையின் அடிப்படையில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
அதேபோல ஓய்வு பெறக்கூடிய நிலையில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் தகுதி தேர்வு கட்டாயப்படுத்துவதற்கு முன்பாக பணியில் சேர்ந்து பணியாற்றும் ஆசிரியர்களை பொறுத்தவரைக்கும் டெட் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்று ஆக்கப்படுவதால் பாதிப்படைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நீதிபதி தீபான்கர் தத்தா தலைமையிலான அமர்வு ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது
அந்த தீர்ப்பில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று தீர்ப்பளித்தது.
இருப்பினும் பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு, ஓய்வு பெறும் வயதை எட்ட 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் பணியில் தொடரலாம் என்றும், ஓய்வு பெற 5 ஆண்டுகளுக்கு அதிகமாக காலம் உள்ள ஆசிரியர்கள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும். இல்லையெனில் அவர்கள் தங்களது வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது ஓய்வு பெறும்போது கிடைக்கும் இறுதி சலுகைகளை பெற்றுக் கொண்டு கட்டாய ஓய்வு பெறலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
அதேவேளையில், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா?, அது அவர்களின் உரிமைகளை பாதிக்குமா? என்ற அம்சங்கள் குறித்து விசாரிப்பதற்காக இந்த வழக்கை உயர் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாகவும் தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.
- அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக புஜாரா சமீபத்தில் அறிவித்தார்.
- முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பை பாராட்டி வருகின்றனர்.
புதுடெல்லி:
இந்திய அணியின் நட்சத்திர வீரரான செதேஷ்வர் புஜாரா சமீபத்தில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி புஜாராவுக்கு கடிதம் எழுதி பாராட்டினார். அதில் கூறியுள்ளதாவது:
நீங்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு செய்ததை அறிந்தேன். உங்கள் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறுகிய வடிவிலான கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலத்தில் நீங்கள் நீண்ட வடிவிலான ஆட்டத்தின் அழகை நினைவூட்டினீர்கள்.
களத்தில் நீண்ட நேரம் பேட் செய்யும் திறன் பெற்ற நீங்கள், இந்திய பேட்டிங் வரிசையின் அச்சாணியாக திகழ்ந்தீர்கள். நீங்கள் களத்தில் இருக்கும் போது அணி பாதுகாப்பான நபரின் கையில் உள்ளது என ரசிகர்கள் உணர்ந்தனர்.
உங்கள் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை, குறிப்பாக வெளிநாட்டு சவாலான சூழ்நிலைகளில், அசாதாரண திறமையும் உறுதியும் கொண்ட தருணங்களால் நிறைந்துள்ளது.
உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் வெற்றியைப் பெறுவதற்கு அடித்தளமாக இருந்த உங்கள் ஆட்டத்தை ரசிகர்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.
மிகவும் வலிமையான பந்துவீச்சு தாக்குதல்களுக்கு எதிராக நீங்கள் உறுதியாக நின்று, அணிக்காக பொறுப்பை ஏற்பது என்றால் என்ன என்பதை காட்டினீர்கள்.
ராஜ்கோட்டை கிரிக்கெட் வரைபடத்தில் இடம்பெறச் செய்த உங்கள் பங்களிப்பு, ஒவ்வொரு இளைஞருக்கும் பெருமையின் ஆதாரமாக இருக்கும்.
நீங்கள் கிரிக்கெட்டுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, எழுச்சியடையும் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.உங்கள் எதிர்கால பயணத்திற்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியிடம் இருந்து பாராட்டு கடிதம் கிடைத்தமைக்கு பெருமை அடைகிறேன் என புஜாரா குறிப்பிட்டுள்ளார்.
- விமானத்தின் ஒரு எஞ்சினில் தீப்பற்றி எரியும் அறிகுறிகள் இருப்பதை விமானி கண்டறிந்துள்ளார்.
- அந்த எஞ்சின் மட்டும் சட் டவுன் செய்யப்பட்டது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லியில் இருந்து மத்திய பிரதேச தலைநகர் இந்தூருக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று 90 பயணிகளுடன் புறப்பட்டது.
அப்போது விமானத்தின் ஒரு எஞ்சினில் தீப்பற்றி எரியும் அறிகுறிகள் இருப்பதை விமானி கண்டறிந்துள்ளார்.
இதனால் அந்த எஞ்சின் மட்டும் சட் டவுன் செய்யப்பட்டு விமானம் மீண்டும் டெல்லியில் அவசரமாக திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பாதுகாப்பு விதிமுறைகளின்படி விமானம் தரையிறக்கப்பட்டதாகவும், பணியாளர்கள், பயணிகள் பாத்திரமாக இருப்பதாகவும் ஏர் இந்தியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
- அங்கு பூட்டிக்கிடந்த வீட்டின் வெளியே ரத்தகரை இருந்துள்ளது.
- ரத்தம் தோய்ந்த ஆடைகளையும், கத்திரிகோலயும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மகனுக்கு பிறந்தநாள் பரிசு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவர் தனது மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெல்லி ரோஹணி பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். இவரின் மனைவி பிரியா (34) . நேற்று (ஆகஸ்ட் 30) இவர்களின் மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.
கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள பிரியாவின் தாய் குசும் சின்ஹா (63) ஆகஸ்ட் 28 அன்று அங்கு சென்றுள்ளார்.
நேற்று பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பெறப்பட்ட பரிசுப்பொருட்கள் பற்றி காணவர் யோகேஷ் மனைவி பிரியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவரிடையேயும் வாக்குவாதத்தை தீர்க்க குசும் முயன்றுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற தாய் வீடு திரும்பாததால் குசும் உடைய மகனும் பிரியாவின் சகோதரனுமான மேக் சின்ஹா போன் செய்துள்ளார்.
அப்போது இந்த வாக்குவதம் குறித்து மகனுக்கு குசும் தெரிவித்துள்ளார். இருப்பினும் அதன் பின் வெகு நேரம் ஆகியும் தாய் வீடுதிரும்பாததாலும், போன் செய்தும் எடுக்காததாலும் மேக் சின்ஹா அங்கு சென்றுள்ளார்.
அங்கு பூட்டிக்கிடந்த வீட்டின் வெளியே ரத்தகரை இருந்துள்ளது. இதை தொடர்ந்து மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது குசும் மற்றும் பிரியா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.
இதுதொடர்பாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து ரத்தம் தோய்ந்த ஆடைகளையும், கத்திரிகோலயும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்து குழந்தைகளுடன் தப்பிச் சென்ற யோகேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- பேரழிவுகள் வேதனையை அளித்தது.
- இந்த கடினமான காலங்களில் மனிதகுலத்திற்கு முன்னுரிமை அளித்த ஒவ்வொரு குடிமகனுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். 125-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்த மழைக்காலத்தில் இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன. கடந்த சில வாரங்களாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பேரழிவுகளை நாம் பார்த்தோம். வீடுகள் இடிந்து விழுந்தன, வயல்கள் நீரில் மூழ்கின, குடும்பங்களும் அழிந்தன.
இடைவிடாத வெள்ளத்தால் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள் துண்டிக்கப்பட்டன, மக்களின் உயிர்கள் ஆபத்தில் இருந்தன. இந்த சம்பவங்கள் ஒவ்வொரு இந்தியரையும் வருத்தத்தில் ஆழ்த்தின. பேரழிவுகள் வேதனையை அளித்தது.
மீட்பு நடவடிக்கையின் போது தேசிய பேரிடர் பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, பாதுகாப்புப் படையினரின் முயற்சிகள் பாராட்டத்தக்கது.
எங்கெல்லாம் நெருக்கடி ஏற்பட்டதோ, அங்கெல்லாம் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் மக்களைக் காப்பாற்ற இரவும், பகலும் உழைத்தனர். வீரர்கள் தொழில்நுட்பத்தின் உதவியைப் பெற்றனர் . நேரடி கண்டுபிடிப்பாளர்கள், மோப்ப நாய்கள், டிரோன் கண்காணிப்பு ஆகியவற்றின் உதவியுடன் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. பேரிடர் காலங்களில் ஆயுதப் படைகள் உதவின. உள்ளூர் மக்கள், சமூக சேவையாளர்கள், டாக்டர்கள், நிர்வாகம் இந்த நெருக்கடியான நேரத்தில் அனைவரும் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். இந்த கடினமான காலங்களில் மனிதகுலத்திற்கு முன்னுரிமை அளித்த ஒவ்வொரு குடிமகனுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
புல்வாமாவில் ஒரு மைதானத்தில் சாதனை எண்ணிக்கையிலான மக்கள் கூடினர். முதல் பகல்-இரவு கிரிக்கெட் போட்டி அங்கு நடைபெற்றது. இது முன்பு அங்கு சாத்தியமற்றது. ஆனால் இப்போது நாடு மாறிக்கொண்டு இருக்கிறது என்று பேசினார்.






