search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WORLD PEACE"

    • நாக்பூரில் 1925ல் விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டது
    • ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் 6 லட்சத்திற்கும் மேல் தன்னார்வல தொண்டர்கள் சேவை செய்கின்றனர்

    இந்திய தேசியவாதத்திலும் கலாச்சாரத்திலும் நம்பிக்கையுடைய தன்னார்வலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட பொது சேவை சங்கம், ஆர்.எஸ்.எஸ். (RSS) எனப்படும் 'ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் ஸங்'. இந்த அமைப்பின் கிளைகள் உலகின் முக்கிய நகரங்களில் உள்ளது.

    சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களை தன்னார்வலர்களாக இதில் இணைத்து கொண்டுள்ளனர். இயற்கை பேரழிவு, இயற்கை சீற்றம், போர், பெருந்தொற்று உட்பட பல அவசரகாலங்கள் மற்றும் நெருக்கடி காலங்களில் இதன் தன்னார்வலர்கள் நாடு முழுவதும் சென்று தேச சேவையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    நாக்பூரில் 1925-ஆம் வருடம் விஜயதசமி பண்டிகையன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டது. எனவே வருடாவருடம் அதன் கூட்டம் விஜயதசமியன்று நடைபெற்று வருகிறது.

    இவ்வருட விஜயதசமி சந்திப்பு கூட்டம், மகாராஷ்டிரா மாநில நாக்பூர் நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இதன் தலைவர் மோகன் பகவத் தொண்டர்களிடையே உரையாற்றினார்.

    அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

    மதவெறியால் ஏற்படும் துன்பங்களை உலகம் தற்போது கண்டு வருகிறது. காசாவில் நடைபெறும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷிய-உக்ரைன் போர்களை முடிவுக்கு கொண்டு வர தீர்வு காண்பது உலக நாடுகளுக்கு மிக கடினமாக உள்ளது. இதனால் உலக நாடுகள் சந்தித்து வரும் சமகால சவால்களுக்கும், சிக்கல்களுக்கும் நிரந்தர தீர்வை தேடி பாரதத்தை நோக்கி தங்கள் பார்வையை திருப்பியுள்ளன. பாரதத்தின் தொன்மையான சனாதன வழிமுறைகளின் மூலம் ஒரு புதிய பாதையை தேடுகின்றன. இதனை வழங்க பாரதம் முன் வர வேண்டும்.

    இவ்வாறு மோகன் பகவத் கூறினார்.

    • திருவிழாவில் 8-ம் நாளான கடந்த 28-ந் தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு திருவிழா நடந்தது.
    • மாலை 5 மணிக்கு உலக மக்கள் அமைதிக்காக காணியாளன்பதியிலிருந்து திருச்செந்தூர் அய்யாவின் அவதார பதிக்கு ஊர்வலம் சென்றது.

    குரும்பூர்:

    குரும்பூரை அடுத்த சோனகன்விளை திருமலைப்பபுரத்தில் உள்ள அய்யா வைகுண்டரின் காணியாளன்பதி கோவிலில் 191-வது அவதார தினவிழா மற்றும் 13-ம் ஆண்டு அகலத்திரட்டு அம்மானை திரு ஏடு வாசிப்பு திருவிழா இன்று நடக்கும்.

    இந்த திருவிழாவில் 8-ம் நாளான கடந்த 28-ந் தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு திருவிழா நடந்தது. இதனையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    இதனைத்தொடர்ந்து 11-ம் நாளான நேற்று காலை 5 மணிக்கு அய்யாவின்பணிவிடை, உகப்படிப்பு அன்னபால், பகல் 12 மணிக்கு உச்சப்படிப்பு, அன்னதர்மம் நடந்தது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு உலக மக்கள் அமைதிக்காக காணியாளன்பதியிலிருந்து திருச்செந்தூர் அய்யாவின் அவதார பதிக்கு ஊர்வலம் சென்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதில் காணியாளன்பதி நிறுவனர் நரசிம்மன், விழா கமிட்டியினர் தாமோதரன், ராஜா, இளங்கோ, பாலசுந்தர், ஜெயபாரத், ஜெயசிங், பிரகாஷ், சம்பத்குமார், பிரபு, ஜெகதீஷ், சல்லேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 12-ம் நாளான இன்று அய்யா அவதாரதினவிழா நடைபெற்றது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, அன்னதர்மம் நடந்தது.

    மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, அன்னதர்மம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருமலையப்பபுரம், சோனகன்விளை, காணியாளன்புதூர் பகுதி மக்கள் செய்திருந்தனர்.

    • கமுதி முத்துமாரியம்மன் கோவிலில் உலக அமைதிக்காக மஹா சண்டி யாகம் நடந்தது.
    • இந்த மஹா சண்டி யாகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 9-ந் தேதி மஹா சண்டி ஹோமம் விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாக சாலையில் வைக்கப்பட்ட அம்மன் சிலை முன்பு பல்வேறு புனித நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீரை யாகசாலையில் வைத்து வழிபாடு செய்தனர்.

    பின்னர் நேற்று காலை யாகம் வளர்க்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா சண்டி யாக பூஜை நடைபெற்றது.

    இந்த யாகத்தில் 16 பட்டுப்புடவைகள், தங்க தாலி, வெள்ளி கொலுசு மற்றும் 237 வகையான மூலிகைகள், ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, வாழைப்பழம், வில்வபழம், மாதுளை உள்பட பலவகை பழங்கள் மற்றும் தாமரைப்பூ, மல்லிகைப்பூ உள்பட அனைத்து வகையான பூக்கள், பாதாம், முந்திரி உள்பட அனைத்து வகையான தானியங்கள் போன்றவற்றை அக்னியில் போடப்பட்டு இந்த யாகம் நடத்தப்பட்டது.

    இந்த யாகத்தில் கலந்து கொண்டால் நினைத்தது நிறைவேறும் என்பதால் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீரால் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அலங்காரம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. கமுதி சுற்று கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

    இந்த மஹா சண்டி யாகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    • உலக அமைதிக்கான வேள்வி நடைபெற்றது.
    • மனவளக்கலை மன்றம் சார்பில் நடைபெற்றது

    பெரம்பலூர்:

    உலக மக்கள் அனைவரும் அமைதியாக வாழ வழி செய்திட வேண்டும் என்ற நோக்கத்துடன், தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி கடந்த 1958-ம் ஆண்டு உலக சேவா சமுதாய சங்கத்தை உருவாக்கிய வேதாத்திரி மகரிஷி பிறந்த தினத்தை மனவளக்கலை மன்றத்தினர் உலக அமைதி தினமாக கடைபிடித்து வருகின்றனர். இதனை முன்னிட்டு பெரம்பலூர் மனவளக்கலை மன்றம் சார்பில் அறிவு திருக்கோவிலில் உலக அமைதிக்கான வேள்வி நடந்தது. நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மன்ற செயலாளர் சாந்தகுமார் வரவேற்றார். உலகம் அமைதி பெற வேண்டி பேராசிரியர் பத்மாவதி தவவேள்வி நடத்தினார். பேராசிரியர் சுந்தர், ஞான ஆசிரியரின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார். இதில் துணை தலைவர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்."

    ×