என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்: உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தல்- ஜவாஹிருல்லா கண்டனம்
    X

    அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்: உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தல்- ஜவாஹிருல்லா கண்டனம்

    • போர் என்பது தீர்வாகாது.
    • போர் மனித உயிரிழப்புகளையும் அழிவையும் மட்டுமே அதிகரிக்கும்.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஈரான் இஸ்லாமிய குடியரசின் உயரிய தலைவர் அலி கமேனி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை யும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டதாக கூறப்படும் வான்வழித் பயங்கரவாத தாக்குதல், ஒரு சுயாட்சி நாட்டின் இறையாண்மையை வெளிப்படையாக மீறும் செயல் ஆகும்.

    ஒரு நாட்டின் அரசியல் மற்றும் மதத் தலைமை அமைப்பை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல், பிராந்திய அமைதியை சீர்குலைக்கும் செயல் மட்டுமல்ல. அது உலக அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தலாகும்.

    பல தசாப்தங்களாக பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முயற்சிக்கப்பட்ட விவகாரங்கள், ராணுவ தாக்குதலால் ஒருபோதும் தீர்க்கப்படமாட்டாது. போர் என்பது தீர்வாகாது. அது மனித உயிரிழப்புகளையும் அழிவையும் மட்டுமே அதிகரிக்கும்.

    எனவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனடியாக அனைத்து தாக்குதல் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். சர்வதேச சமூகம் அவசரமாக தலையிட்டு, மோதலை கட்டுப படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரச்சினைகள் அனைத்தும் தூதரக வழி மற்றும் அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×