என் மலர்tooltip icon

    இந்தியா

    எஞ்சினில் தீப்பிடிக்கும் அபாயம்..  பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்
    X

    எஞ்சினில் தீப்பிடிக்கும் அபாயம்.. பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

    • விமானத்தின் ஒரு எஞ்சினில் தீப்பற்றி எரியும் அறிகுறிகள் இருப்பதை விமானி கண்டறிந்துள்ளார்.
    • அந்த எஞ்சின் மட்டும் சட் டவுன் செய்யப்பட்டது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லியில் இருந்து மத்திய பிரதேச தலைநகர் இந்தூருக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று 90 பயணிகளுடன் புறப்பட்டது.

    அப்போது விமானத்தின் ஒரு எஞ்சினில் தீப்பற்றி எரியும் அறிகுறிகள் இருப்பதை விமானி கண்டறிந்துள்ளார்.

    இதனால் அந்த எஞ்சின் மட்டும் சட் டவுன் செய்யப்பட்டு விமானம் மீண்டும் டெல்லியில் அவசரமாக திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    பாதுகாப்பு விதிமுறைகளின்படி விமானம் தரையிறக்கப்பட்டதாகவும், பணியாளர்கள், பயணிகள் பாத்திரமாக இருப்பதாகவும் ஏர் இந்தியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

    Next Story
    ×