என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமை: ஆசைவார்த்தை கூறிய பையன்- வீட்டில் இருந்து மாயமான சிறுமிகள்..!
    X

    ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமை: ஆசைவார்த்தை கூறிய பையன்- வீட்டில் இருந்து மாயமான சிறுமிகள்..!

    • ஆன்லைன் விளையாட்டு மூலம் பையன் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளான்.
    • இரண்டு சிறுமிகளிடம் ஆசைவார்த்தை கூறி டெல்லியில் இருந்து பானிபட்டுக்க வரவழைத்துள்ளான்.

    ஆன்லைன் விளையாட்டு வாலிபர்கள், சிறுவர்களை அடிமையாக்கியுள்ளது. அவர்களைத் தவிர இளம் பெண்களும், சிறுமிகளும் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர். சிலர் பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டில் தீவிரமாக மூழ்கி விபரீத முடிவுகளை எடுக்கும் அபாய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இதனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடைசெய்யும் வகையில், மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதனால் பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

    டெல்லியை சேர்ந்த இரண்டு நடுத்தர சிறுமிகள் "We Play" என்ற ஆன்லைன் விளையாட்டை தொடர்ந்து விளையாடி வந்துள்ளனர். அப்போது அரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த கிஷிஷ் என்ற பையனுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

    தற்போது தடைவிதிக்கப்பட்ட நிலையில், அந்த பையன் இருவரையும் தொடர்பு கொண்டு நாம் தொடர்ந்து ஆன்லைனில் விளையாடலாம். அதற்கான வழிகள் எனக்குத் தெரியும் என ஆசைவார்த்தை கூறியுள்ளான். இதை நம்பி உறவினர்களான அந்த இரண்டு சிறுமிகளும் விடியற்காலையில் யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்து வெளியேறி பானிபட் சென்றடைந்துள்ளனர். காலையில் விவேக் குமார் என்பவர் தன்னுடைய மகள், உறவினர் மகளுடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர்களை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார்.

    உடனடியாக போலீசார் அவர்களை தேடும்பணியில் ஈடுபட்டு, இருவரும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, அவர்கள் பாதுக்காப்ப மீட்டு, பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×