என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார்.
    • இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள கோட் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    அடுத்ததாக தளபதி 69 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படமே விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். அதற்கடுத்து முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார்.

    தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

     இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். படத்தில் நடிக்கும் நடிகர்களை இன்று முதல் 3 நாட்களுக்கு அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

    அதேப்போல் முதலாவதாக அனிமல் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அது மட்டுமல்லாமல் பாபி த்யோல் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    என படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். பட பூஜை விழா வரும் அக்டோபர் 4 ஆம் தேதி நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சின்னதிரை மற்றும் வெள்ளிதிரையிலும் மிகவும் பரீட்சையமானவர் வனிதா விஜயகுமார்.
    • ராபர்ட் மாஸ்டரும் வனிதா விஜயகுமாரும் காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

    சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையிலும் மிகவும் பரீட்சையமானவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப் பெரிய அளவில் ரீச் கிடைத்தது. ராபர்ட் மாஸ்டரும் வனிதா விஜயகுமாரும் காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர். பின் மனகசப்பால் பிரிந்து விட்டனர்.

    தற்பொழுது அவர்கள் இருவரும் இணைந்து Mr&Mrs என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதில் வனிதா கடலோரத்தில் ராபர்ட் மாஸ்டருக்கு ப்ரொபோஸ் செய்வது போல் சேவ் தி டேட் என்ற தலைப்பில் காட்சி அமைந்துள்ளது.

     

    இதனால் நெட்டிசன்கள் மீண்டும் வனிதா திருமணம் செய்துக் கொள்ள போகிறாரா. என ப்லவாறு கமெண்டுகளை கொட்டித்தீர்த்து வருகின்றனர். ஆனால் இது அந்த படத்திற்கான ப்ரோமோஷன் என சிலர் கூறி வருகின்றனர். எது உண்மை என்று அக்டோபர் 5 ஆம் தேதி பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
    • திரைப்பிரபலங்கள் பலரும் மற்றும் அரசியல் பிரமுகர்களும் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி வருகின்றனர்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். திரைப்பிரபலங்கள் பலரும் மற்றும் அரசியல் பிரமுகர்களும் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி வருகின்றனர்.

    அந்த வகையில் இன்று காலை நடிகர் வடிவேலு நேரில் சந்தித்து வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலினை நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிவாஜி கணேசனின் 97-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று சிவாஜியின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு அடையாறு தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் சிவாஜி சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று சிவாஜியின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சிவாஜியின் மகன்கள் பிரபு, ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு, கவிஞர் வைரமுத்து அமைச்சர்கள் மு.பெரிய சாமிநாதன், மா.சுப்பிர மணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, மயிலை த.வேலு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    விழாவில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஜபுத்திரன் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் அப்படத்தின் பேனரை ஒருவர் பிடித்திருந்தார். அப்போது முன்னால் வர முண்டியடித்த ஒருவரை சிவாஜியின் மகன் ராம்குமார் சரமாரியாக தாக்கி உள்ளே தள்ளினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், சிவாஜி சிலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது வழி விடாததால் ஆத்திரத்தில் அருகில் இருந்தவர்களை சிவாஜியின் மகன் ராம் குமார் கோபத்துடன் தள்ளிவிட்டு சென்றதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.
    • ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.

    மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பெரும்பாலானோர் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் படக்குழுவை அழைத்து பாராட்டினார். படத்தை பார்த்த வெற்றிமாறன், பா. ரஞ்சித் , கிரிக்கெட் வீரரான அஸ்வின் மற்றும் ஹர்பஜன் சிங் பாராட்டி அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.

     

    திரைப்படம் கடந்த வாரம் மட்டும் 3 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தற்பொழுது படக்குழு இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்தை பெற்றனர். படத்தில் கெத்து தினேஷ் வரும் பொழுது எல்லாம் இளையராஜா இசையமைத்த "நீ பொட்டு வச்ச தங்க குடம் ஊருக்கு நீ மகுடம்" பாடல் ஒலிக்கும். இந்த பாடல் படத்திற்கு பெரியபலம் என சொல்லலாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • "மஞ்சள் வீரன்" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.
    • "மஞ்சள் வீரன்" படத்திலிருந்து டி.டி.எஃப்.வாசனை நீக்குவதாக அப்படத்தின் இயக்குநர் செல்அம் அறிவித்துள்ளார்.

    சாலைகளில் பைக் ஓட்டி சாகசம் செய்து அதை யூ டியூப்பில் வீடியோவாக பதிவேற்றி பிரபலமானவர் டிடிஎஃப் வாசன்.

    யூடியூப் மூலம் பிரபலமான இவரை கதாநாயகனாக வைத்து செல்அம் என்ற இயக்குனர் "மஞ்சள் வீரன்" என்ற படத்தை இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது.

    "மஞ்சள் வீரன்" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

    இந்நிலையில் அப்படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டுள்ளார்.

    "மஞ்சள் வீரன்" படத்திலிருந்து டி.டி.எஃப்.வாசனை நீக்குவதாக அப்படத்தின் இயக்குநர் செல்அம் அறிவித்துள்ளார். மேலும், அவர் தான் சூப்பர் ஸ்டார்.. ஆனா படத்துல இருந்து தூக்குறோம் என இயக்குநர் தெரிவித்துள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தின் டிரைலர் நாளை [அக்டோபர் 2] வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
    • 2 மணி நேரம் 43 நிமிடம் 25 நொடிகள் ரன்னிங் டைம் கொண்டதாக உருவாகியுள்ள வேட்டையன் உருவாகியுள்ளது

    ஜெய்பீம் படத்தின்மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

     

     அனிருத் இசையமைத்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடத்தைப்பெற்ற நிலையில் படத்தின் டீசரும் வெளியாகி கவனம் பெற்றது. வரும் அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் டிரைலர் நாளை [அக்டோபர் 2] வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் வேட்டையன் படத்துக்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரம் 43 நிமிடம்  25 நொடிகள் ரன்னிங் டைம் கொண்டதாக உருவாகியுள்ள வேட்டையன் படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'காந்தாரா சேப்ட்டர் 1' மேக்கிங்கில் உள்ள நிலையில் இதுகுறித்து அப்டேட்கள் வெளியாகி வருகிறது.
    • கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவியுடன் ரிஷப் செட்டி மோகன்லாலை சந்தித்தார்.

    கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் காந்தாரா. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.

     

    இப்படத்தின் இரண்டாம் பாகமான 'காந்தாரா சேப்ட்டர் 1' மேக்கிங்கில் உள்ள நிலையில் இதுகுறித்து அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. முதல் படமான காந்தரா கதைக்கு முற்கதையாக ப்ரீகுவல் படமாக இரண்டாம் பாகம் தயாராகி வரும் நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி மலையாள ஹீரோ மோகன்லால் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

     

    அதிலும் குறிப்பாக கதைப்படி ரிஷப் செட்டியின் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து படக்குழு சார்பில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவியுடன் ரிஷப் செட்டி மோகன்லாலை சென்று சந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
    • தி கோட் படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்". இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. 

     

    ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தி கோட் படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. வசூல் ரீதியாகவும் படம் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் விஜய்யின் "தி கோட்" (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம் வரும் 3-ந்தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரசிகர்களிடம் அங்கீகாரம் மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கு தற்போது சர்வதேச திரைப்பட விழாவிலும் அங்கீகாரம் கிடந்துள்ளது,
    • கினோபிராவோ விழாவில் திரையிடப்படும் முதல் மலையாள படம் என்ற பெருமையையும் மஞ்சும்மெல் பாய்ஸ் பெற்றுள்ளது.

    மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் மஞ்சுமெல் பாய்ஸ்.. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கொடைக்கானலில் இருக்கும் குணா குகைக்கு சுற்றுலா வரும் 11 நண்பர்களில் ஒருவர் உள்ளே சிக்கிக் கொள்ள அவரை மீட்பதே கதை.

     

    கமல் நடிப்பில் வெளியான குணா படத்தின் நியாபகங்கங்களை இப்படம் தந்ததால் தமிழிலும் மஞ்சுமெல் பாய்ஸ் பெரிதும் கொண்டாடப்பட்டது. சர்வதேச அளவில் ரூ.240 கோடிகளுக்கும் அதிகமான வசூலைக் குவித்த படமாகவும் இது மாறியது. இந்நிலையில் ரசிகர்களிடம் அங்கீகாரம் மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கு தற்போது சர்வதேச திரைப்பட விழாவிலும் அங்கீகாரம் கிடந்துள்ளது.

     

    ரஷியாவில் கடந்த 28 ஆம் தேதி தொடங்கிய கினோபிராவோ திரைப்பட விழாவில் மஞ்சுமெல் பாய்ஸ் திரையிடப்படுகிறது. அக்டோபர் 4 வரை நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் நேற்று [செப்டம்பர் 30] திரையிடப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் இன்றும் [அக்டோபர்1] தொடர்ந்து இரண்டாவது நாளாக திரையிடப்படுகிறது. கினோபிராவோ விழாவில் திரையிடப்படும் முதல் மலையாள படம் என்ற பெருமையையும் மஞ்சும்மெல் பாய்ஸ் பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உதயநிதி ஸ்டாலினை மதுரையில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் வடிவேலு சந்தித்தார்.
    • நடிகர் வடிவேலுவும், உதயநிதியும் மாமன்னன் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

    துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினை மதுரையில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் வடிவேலு சந்தித்தார்.

    இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலுவும், உதயநிதியும் மாமன்னன் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

    உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு பூங்கொத்து கொடுத்து வடிவேலு வாழ்த்து தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மும்பை, ஜூஹூ [Juhu] பகுதியில் உள்ள தனது வீட்டில் கோவிந்தா தயாராகிக் இந்த விபத்து நடந்துள்ளது.
    • அவரது காலில் பாய்ந்த குண்டு டாக்டர்களால் நீக்கப்பட்டது

    பாலிவுட் நடிகர் கோவிந்தா தனது ரிவால்வர் துப்பாக்கியால் அவரது காலிலேயே தவறுத்தலாக சுட்டுக்கொண்டதால் குண்டடிபட்டு படுகாயம் அடைந்துள்ள்ளார். கொல்கத்தாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள 6 மணி விமானம் ஏறுவதற்கு இன்று அதிகாலை 4.45 மணியளவில் மும்பை, ஜூஹூ [Juhu] பகுதியில் உள்ள தனது வீட்டில் கோவிந்தா தயாராகிக் கொண்டிருந்தபோது   இந்த விபத்து நடந்துள்ளது.

    உடனே மருத்துமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் காலில் பாய்ந்த குண்டு டாக்டர்களால் நீக்கப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கோவிந்தாவின் மேனேஜர் சசி சின்ஹா தெரிவித்துள்ளார்.

    லைஸ்சன்ஸ் பெற்று கோவிந்தா வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக கீழே விழுந்து வெடித்ததில் அவரது காலில் குண்டு பாய்ந்ததாக மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார்.  1990 களில் பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக கோவிந்தா வலம்வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×