என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் நடிப்பில் வருகிற 7ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

    'முதல் நீ முடிவும் நீ' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இப்படத்தை தொடர்ந்து சிங்க், தருணம் ஆகிய படங்களில் கிஷன் தாஸ் நடித்துள்ளார்.

    இதேபோல், பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் பெரிய திரையில் அறிமுகமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான 'டிராகன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இது தவிர விஜே சித்து இயக்கி நடிக்க உள்ள 'டயங்கரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார்.

    கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து 'ஆரோமலே' படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சாரங் தியாகு இயக்க சித்து குமார் இசையமைத்துள்ளார்.

    இப்படம் வருகிற 7-ந்தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தை முன்னணி நடிகரான சிவகார்த்திக்கேயன் பார்த்துள்ளார். படம் பார்த்தபின், படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார்.

    • பராசக்தி படம் பொங்கல் விடுமுறையையொட்டி அடுத்தாண்டு ஜனவரி 14 இல் திரைக்கு வருகிறது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவரது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.

    இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார்.

    இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

    படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.

    அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி அடுத்தாண்டு ஜனவரி 14 இல் இப்படம் திரைக்கு வருகிறது.

    இந்நிலையில், 'பராசக்தி' திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரொமோ இன்று வெளியானது.

    • துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள காந்தா வருகிற 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    அடுத்ததாக துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

    இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.

    இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 'காந்தா' படம் வருகிற 14-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இந்த நிலையில் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்பதற்கான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நாளைமறுநாள் டிரெய்லர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அரங்கேறும் நிகழ்வுகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம்.
    • நாளை முதல் தமிழ் ,ஆங்கிலம், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

    திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.

    பேட் கேர்ள்

    வர்ஷா இயக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் இணைந்து தயாரித்த படம் 'பேட் கேர்ள்'. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அரங்கேறும் நிகழ்வுகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் செப்டம்பர் மாதம் வெளியான நிலையில், ஜியோ ஹாட்ஸ்டாரில் இன்று முதல் காணலாம்.

    கிஸ்

    கவின், ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் வெளியான படம் 'கிஸ்'. சதீஷ் இயக்கதில் ரொமான்டிக் மற்றும் காமெடி கலந்து உருவான இப்படம் செப்டம்பர் மாதம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் ஜீ5 தளத்தில் வருகிற 7-ந்தேதி வெளியாக உள்ளது.

    தி பென்டாஸ்டிக் ஃபோர்

    மார்வெல் ஸ்டுடியோஸுக்கு 2025 ஒரு பெரிய ஆண்டாக அமைந்துள்ளது. கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட், தண்டர்போல்ட்ஸ் மற்றும் தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ் ஆகிய மூன்று படங்கள் திரைக்கு வந்தன. முதல் இரண்டும் பார்வையாளர்களை பிடிக்கத் தவறிய போதிலும், பென்டாஸ்டிக் போர் பாக்ஸ் ஆபீஸிலும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. உலகளவில் அரை பில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்த தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ் இப்போது ஓடிடியில் வெளியாக தயாராக உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்த படம் நாளை முதல் தமிழ் ,ஆங்கிலம், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

    பாரமுல்லா

    காஷ்மீரை மையமாகக் கொண்ட மர்ம த்ரில்லர் படம் 'பாரமுல்லா'. டிஎஸ்பி ரிட்வான் சயீது காணாமல் போன குழந்தைகளை தேடும் சுவாரஸ்யமான கதைக்களத்தில் உருவான இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வருகிற 7-ந்தேதி முதல் காணலாம்.

    இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும் ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது.

    • மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
    • எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்க்கும் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா பதிவிட்டிருந்தார்.

    தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    ஜாய் கிரிசில்டா குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்து முகத்தை மறைத்த குழந்தையின் புகைப்படத்துடன் மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படத்தையும் வைத்து பதிவு வெளியிட்டு வருகிறார்.

    இந்நிலையில், ஜாய் கிரிஸில்டாவை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார்.

    தான் குழந்தையின் தந்தை என ரங்கராஜ் ஒப்புக் கொண்டதால், DNA ஆதாரங்கள் தேவையில்லை எனவும், வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுக்க கூடாது எனவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

    • இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.
    • 'காந்தா' படம் வருகிற 14-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    அடுத்ததாக துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

    இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 'காந்தா' படம் வருகிற 14-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இதையொட்டி, 'காந்தா' படத்தின் டிரெய்லர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. போஸ்டரை இணையதளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 




    • 2024ஆம் ஆண்டுக்கான கேரள மாநிலத்தின் திரைப்பட விருது அறிவிக்கப்பட்டது
    • பிரம்மயுகம் படத்தில் நடித்ததற்காக மம்மூட்டி சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தேசிய திரைப்பட விருதுக் குழுவை விளாசிய நடிகரும் கேரள திரைப்பட விருதுக் குழுத் தலைவருமான பிரகாஷ்ராஜ்

    2024ஆம் ஆண்டுக்கான கேரள மாநிலத்தின் திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 55ஆவது திரைப்பட விருது பட்டியலை கலாச்சார விவகாரத்துறை அமைச்சர் சஜி செரியன் அறிவித்தார்.

    பிரம்மயுகம் படத்தில் நடித்ததற்காக மம்மூட்டி சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மலையாள சினிமாவில் வசூலை வாரிக் குவித்த மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம், சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேரள திரைப்பட விருதுக் குழுத் தலைவர் பிரகாஷ்ராஜ், "பிரம்மயுகம் படத்தில் மம்முட்டி மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இளம் நடிகர்கள் அவரிடம் இருந்து இதை கற்றுக்கொள்ளவேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதனிடையே, தேசிய விருதில் மம்மூட்டிக்கு ஏன் உரிய அங்கீகாரம் ஏன் தரப்படுவதில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த பிரகாஷ்ராஜ், "இது தொண்டு நிறுவனம் கிடையாது. நாம் திறமையான நடிப்பை வெளிப்படுத்துபவர்களுக்கு விருது அளிக்கிறோம். ஆனால் FILES, PILES போன்ற பெயர் உள்ள படங்களுக்கு தேசிய விருது கிடைப்பதை பார்க்கும்போதே நமக்குத் தெரிகிறது, அவை நடுநிலையுடன் அறிவிக்கப் படுவதில்லை. மம்முட்டிக்கு விருது கொடுக்கும் அளவிற்கு அவர்கள் தகுதியானவர்கள் இல்லை. இதைச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை" என்று தெரிவித்தார். 

    • 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது
    • மலாய் மொழியில் கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

    மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியானது. தற்போது மலாய் மொழியில் கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

    மலாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள BANDUAN படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், 'கைதி' படத்தின் மலாய் ரீமேக் 'BANDUAN' படத்தை பார்க்க நடிகர் கார்த்தி மலேசியா சென்றுள்ளார்.

    திரையரங்குகளில் நவ.6 ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் சிறப்புத் திரையிடல் நிகழ்வு இன்று நடைபெறுகிறது. BANDUAN படத்தின் கதாநாயகனுடன் நடிகர் கார்த்தி சந்தித்து பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    • பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
    • இப்படம் 2 பாகங்களாக வெளியாக இருக்கிறது.

    இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி தற்போது மகேஷ்பாபுவை புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 2.5 ஆண்டுகள் மகேஷ்பாபு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

    பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். காசியின் வரலாற்றை பேசும் கதைக்களமாக உருவாகி வரும் இப்படம் 2 பாகங்களாக வெளியாக இருக்கிறது. ரூ.450 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. 2027-ம் ஆண்டு இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்படம் தற்போது SSMB29 என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நவம்பர் 15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த போஸ்ட் வெளியீட்டுக்காக ஐதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நிகழ்வை நடத்தவும் அதன் நேரடி ஒளிபரப்பை ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியிடவும் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த போஸ்டர் மூலம் படத்தின் பெயர் ரிவீல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.  முன்னதாக மகேஷ் பாபுவின் ப்ரீ லுக் புகைப்படத்தை ராஜமௌலி பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கியர் ஆனந்த் எல் ராய்.
    • இப்படத்தில் இவருக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார்.

    தனுஷ் இயக்கி நடித்த 'இட்லி கடை' படம் அண்மையில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், பாலிவுட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார்.

    கலர் எல்லோ புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

    இந்நிலையில் தேரே இஷ்க் மெய்னின் முதல் பாடலான 'உசே கெனா' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இர்ஷாத் கமில் வரிகளில் நிதேஷ் மற்றும் ஜோனிடா ஆகியோர் குரலில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இப்பாடல் கவனம் ஈர்த்து வருகிறது

    இப்படம் வரும் நவம்பர் மாதம் 28ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    12 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ் ஆனாலும், நகைச்சுவையால் மதகஜராஜா படம் ஹிட்டானது.

    சுந்தர் சி இயக்கத்தில் மத கஜ ராஜா திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நித்தின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி என பலரும் நடித்திருந்தனர்.

    படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. திரைப்படம் 55 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

    சுத்தர் சி- விஷால் கூட்டணியில் உருவான இத்திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ் ஆனாலும், நகைச்சுவையால் படம் ஹிட்டானது.

    இந்நிலையில், இந்த வெற்றி கூட்டணி விரைவில் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கூடிய விரைவில், சுத்தர் சி- விவால் கூட்டணியில் படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    சிம்பு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார்.

    இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

    சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன்மூலம் சிம்பு மற்றும் வெற்றிமாறன் உடன் முதல்முறையாக அனிருத் கூட்டணி சேர்ந்துள்ளார்.

    இந்நிலையில், சிம்புவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வெளிநாட்டில் ஷாப்பிங் சென்ற சிம்பு அட்வைசும் வழங்கியுள்ளார்.

    அதில்," வெளிநாட்டிற்கு போனீங்கனா ஷாப்பிங் செய்யுங்க.. பொருட்களை வாங்குங்க.. ஆனா, விலை மட்டும் கேட்டுடாதீங்க.. தலை சுத்திடும்.. நேரா போய் பணத்த கட்டிட்டு அப்புறம் அந்த பொருள் எவ்வளவு காசு என பாத்து மனச தேத்திக்கோங்க.." என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×