என் மலர்
சினிமா செய்திகள்
- எனது குழந்தையின் தந்தை நான் தான் என ரங்கராஜ் ஒப்புக் கொண்டதாக ஜாய் கிரிசில்டா தெரிவித்தார்.
- என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது.
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
ஜாய் கிரிசில்டா குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்து முகத்தை மறைத்த குழந்தையின் புகைப்படத்துடன் மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படத்தையும் வைத்து பதிவு வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா நேற்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.
அவரது ஸ்டோரியில், எனது குழந்தையின் தந்தை நான் தான் என ரங்கராஜ் ஒப்புக் கொண்டதால், DNA ஆதாரங்கள் தேவையில்லை எனவும், வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுக்க கூடாது எனவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஜாய்யை தன்னிச்சையாக (under free will) திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன்.
ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது.
செப்டம்பர் 2025 இல், ஆயிரம் விளக்குகள், மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கனவே அளித்துள்ளேன்,
இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.
கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ. 1,50,000/- பராமரிப்புத் தொகையாகவும், தனது BMW காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI-யையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார். நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன்.
நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால்(DNA Test), அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
- வெவ்வேறு ஐடிகளை உருவாக்கி தொடர்ந்து ஆபாசமான செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார்.
- ஆனால் அங்கும் அவர் அநாகரிகமாக நடந்துகொண்டார்.
கர்நாடக மாநிலம் வெங்களூருவில் வசிக்கும் 41 வயதான ரஜினி என்ற கன்னட-தெலுங்கு தொலைக்காட்சி சீரியல் நடிகை, பேஸ்புக்கில் ஒருவர் ஆபாச வீடியோக்கள் மற்றும் செய்திகளை அனுப்பி தன்னை துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட நவீன் ஆரம்பத்தில் ஒரு ஐடியிலிருந்து நடிகைக்கு நண்பர் கோரிக்கையை அனுப்பிய நிலையில் நடிகை அதை நிராகரித்தார்.
அந்த நபரை நடிகை ‛பிளாக்' செய்தாலும் வெவ்வேறு ஐடிகளை உருவாக்கி தொடர்ந்து ஆபாசமான செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார்.
மூன்று மாதங்களாக தொடர்ந்த துன்புறுத்தல் தாங்க முடியாமல், நடிகை நவம்பர் 1ஆம் தேதி நாகரபாவி பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சந்திப்பதாகக் கூறி அவரை வரவழைத்து நேரடியாகக் கண்டித்தார்.
ஆனால் அங்கும் அவர் அநாகரிகமாக நடந்துகொண்டதைத் தொடர்ந்து, நடிகை உடனடியாக போலீஸாரை அழைத்துள்ளார். நடிகையின் புகாரை அடுத்து போலீசார் நவீனை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
- ராட்சசன், ஓ மை கடவுளே, மரகத நாணயம், பேச்சுலர் போன்ற படங்களை தயாரித்தனர்.
- முனீஸ்காந்த், விஜயலட்சுமி அகத்தியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் ராட்சசன், ஓ மை கடவுளே, மரகத நாணயம், பேச்சுலர் போன்ற படங்களைத் தயாரித்த ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி "மிடில் கிளாஸ்" என்ற புதிய படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தை அறிமுக இயக்குநரான கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார். படத்தில் முனீஷ்காந்த், விஜயலட்சுமி அகத்தியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ராதா ரவி, மாளவிகா அவிநாஷ், வடிவேல் முருகன், குரைஷி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
நடுத்தர குடும்பங்களின் இன்னல்களை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகிறது. படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.
அல்லு அர்ஜுனின் 22ஆவது படம் பான் வேர்ல்டு படமாக உருவாக இருக்கிறது. இப்படம் சுமார் 800 கோடி ரூபாய்க்கு அதிகமான பொருட்செலவில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட இருக்கிறது. இப்படத்தில் கோலிவுட், பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த அட்லீ இயக்குகிறார். அட்லீக்கு இது 6ஆவது படமாகும்.
சன் பிக்சர்ஸ் இப்படத்தை இயக்குகிறார். இந்த நிலையில் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். 21 வயதான சாய் அபயங்கர் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்திற்கு இசையமைக்க அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார்.
ஹாலிவுட்டில் அவதார் திரைப்படத்தை போல் இந்த படத்திற்காக ஒரு உலகத்தை கிராபிக்ஸ் தொழிநுட்ப உதவியுடன் உருவாக்கி வருகின்றனர். அல்லு அர்ஜுன் இப்படத்தில் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
- ராம் சரண்- ஜான்வி கபூர் அடிக்க புச்சி பாவு பெத்தி படத்தை இயக்கி வருகிறார்.
ராம் சரண்- இயக்குனர் சங்கர் கூட்டணியில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் 'பெத்தி' படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் எப்போது என்ற அறிவிப்பை நாளை காலை 11.07 மணிக்கு வெளியிட இருக்கிறது. இது தொடர்பாக சிகிரி என்றால் என்ன? என்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
- கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் நடிப்பில் வருகிற 7ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.
'முதல் நீ முடிவும் நீ' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இப்படத்தை தொடர்ந்து சிங்க், தருணம் ஆகிய படங்களில் கிஷன் தாஸ் நடித்துள்ளார்.
இதேபோல், பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் பெரிய திரையில் அறிமுகமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான 'டிராகன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இது தவிர விஜே சித்து இயக்கி நடிக்க உள்ள 'டயங்கரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார்.
கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து 'ஆரோமலே' படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சாரங் தியாகு இயக்க சித்து குமார் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற 7-ந்தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தை முன்னணி நடிகரான சிவகார்த்திக்கேயன் பார்த்துள்ளார். படம் பார்த்தபின், படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார்.
- பராசக்தி படம் பொங்கல் விடுமுறையையொட்டி அடுத்தாண்டு ஜனவரி 14 இல் திரைக்கு வருகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவரது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.
இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார்.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.
படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.
அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி அடுத்தாண்டு ஜனவரி 14 இல் இப்படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில், 'பராசக்தி' திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரொமோ இன்று வெளியானது.
- துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள காந்தா வருகிற 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.
இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 'காந்தா' படம் வருகிற 14-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்பதற்கான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நாளைமறுநாள் டிரெய்லர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அரங்கேறும் நிகழ்வுகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம்.
- நாளை முதல் தமிழ் ,ஆங்கிலம், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
பேட் கேர்ள்
வர்ஷா இயக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் இணைந்து தயாரித்த படம் 'பேட் கேர்ள்'. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அரங்கேறும் நிகழ்வுகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் செப்டம்பர் மாதம் வெளியான நிலையில், ஜியோ ஹாட்ஸ்டாரில் இன்று முதல் காணலாம்.
கிஸ்
கவின், ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் வெளியான படம் 'கிஸ்'. சதீஷ் இயக்கதில் ரொமான்டிக் மற்றும் காமெடி கலந்து உருவான இப்படம் செப்டம்பர் மாதம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் ஜீ5 தளத்தில் வருகிற 7-ந்தேதி வெளியாக உள்ளது.
தி பென்டாஸ்டிக் ஃபோர்
மார்வெல் ஸ்டுடியோஸுக்கு 2025 ஒரு பெரிய ஆண்டாக அமைந்துள்ளது. கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட், தண்டர்போல்ட்ஸ் மற்றும் தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ் ஆகிய மூன்று படங்கள் திரைக்கு வந்தன. முதல் இரண்டும் பார்வையாளர்களை பிடிக்கத் தவறிய போதிலும், பென்டாஸ்டிக் போர் பாக்ஸ் ஆபீஸிலும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. உலகளவில் அரை பில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்த தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ் இப்போது ஓடிடியில் வெளியாக தயாராக உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்த படம் நாளை முதல் தமிழ் ,ஆங்கிலம், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
பாரமுல்லா
காஷ்மீரை மையமாகக் கொண்ட மர்ம த்ரில்லர் படம் 'பாரமுல்லா'. டிஎஸ்பி ரிட்வான் சயீது காணாமல் போன குழந்தைகளை தேடும் சுவாரஸ்யமான கதைக்களத்தில் உருவான இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வருகிற 7-ந்தேதி முதல் காணலாம்.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும் ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது.
- மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
- எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்க்கும் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா பதிவிட்டிருந்தார்.
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
ஜாய் கிரிசில்டா குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்து முகத்தை மறைத்த குழந்தையின் புகைப்படத்துடன் மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படத்தையும் வைத்து பதிவு வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஜாய் கிரிஸில்டாவை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார்.
தான் குழந்தையின் தந்தை என ரங்கராஜ் ஒப்புக் கொண்டதால், DNA ஆதாரங்கள் தேவையில்லை எனவும், வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுக்க கூடாது எனவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
- இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.
- 'காந்தா' படம் வருகிற 14-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.
இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 'காந்தா' படம் வருகிற 14-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதையொட்டி, 'காந்தா' படத்தின் டிரெய்லர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. போஸ்டரை இணையதளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

- 2024ஆம் ஆண்டுக்கான கேரள மாநிலத்தின் திரைப்பட விருது அறிவிக்கப்பட்டது
- பிரம்மயுகம் படத்தில் நடித்ததற்காக மம்மூட்டி சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேசிய திரைப்பட விருதுக் குழுவை விளாசிய நடிகரும் கேரள திரைப்பட விருதுக் குழுத் தலைவருமான பிரகாஷ்ராஜ்
2024ஆம் ஆண்டுக்கான கேரள மாநிலத்தின் திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 55ஆவது திரைப்பட விருது பட்டியலை கலாச்சார விவகாரத்துறை அமைச்சர் சஜி செரியன் அறிவித்தார்.
பிரம்மயுகம் படத்தில் நடித்ததற்காக மம்மூட்டி சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மலையாள சினிமாவில் வசூலை வாரிக் குவித்த மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம், சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேரள திரைப்பட விருதுக் குழுத் தலைவர் பிரகாஷ்ராஜ், "பிரம்மயுகம் படத்தில் மம்முட்டி மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இளம் நடிகர்கள் அவரிடம் இருந்து இதை கற்றுக்கொள்ளவேண்டும்" என்று தெரிவித்தார்.
இதனிடையே, தேசிய விருதில் மம்மூட்டிக்கு ஏன் உரிய அங்கீகாரம் ஏன் தரப்படுவதில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த பிரகாஷ்ராஜ், "இது தொண்டு நிறுவனம் கிடையாது. நாம் திறமையான நடிப்பை வெளிப்படுத்துபவர்களுக்கு விருது அளிக்கிறோம். ஆனால் FILES, PILES போன்ற பெயர் உள்ள படங்களுக்கு தேசிய விருது கிடைப்பதை பார்க்கும்போதே நமக்குத் தெரிகிறது, அவை நடுநிலையுடன் அறிவிக்கப் படுவதில்லை. மம்முட்டிக்கு விருது கொடுக்கும் அளவிற்கு அவர்கள் தகுதியானவர்கள் இல்லை. இதைச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை" என்று தெரிவித்தார்.






