உலகம் (World)
பாதுகாப்பு படையினர்

பாகிஸ்தானில் பாதுகாப்பு படை முகாம்கள் மீதான தாக்குதல் முறியடிப்பு- 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2022-02-03 10:57 GMT   |   Update On 2022-02-03 12:00 GMT
பஞ்குர் மற்றும் நோஷ்கி ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, தடை செய்யப்பட்ட இயக்கமான பலுச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.
கராச்சி:

பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்கள் அதிகமாக நடைபெறும் பலுசிஸ்தான் மாகாணத்தில், பயங்கரவாத அமைப்பினர் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். பஞ்குர் மற்றும் நோஷ்கி ஆகிய மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு படையினரின் முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாதுகாப்பு படை தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

நீண்ட நேரம் நீடித்த இந்த சண்டையில் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்பு படை தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாகவும் உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்களுக்கு, தடை செய்யப்பட்ட இயக்கமான பலுச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.

பலுசிஸ்தானில் பாதுகாப்பு படை முகாம்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலை முறியடித்த பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் இம்ரான் கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News