செய்திகள் (Tamil News)

மெக்சிகோவில் 3 மாணவர்களை கொன்று அமிலத்தில் பிணம் மூழ்கடிப்பு

Published On 2018-04-25 06:04 GMT   |   Update On 2018-04-25 06:04 GMT
மெக்சிகோவில் 3 மாணவர்களை கடத்தி கொலை செய்து உடல்களை அமில தொட்டியில் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகன்சிட்டி:

மெக்சிகோவில் மேற்கு ஜலிஸ்கோ மாகாணத்தில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடந்த மாதம் கடத்தப்பட்டனர்.

டெனாலா நகரில் கடத்தப்பட்ட அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அவர்களது உடல்கள் அங்குள்ள ஒரு பண்ணையில் கண்டெடுக்கப்பட்டது.

அவர்களை கடத்தி சென்றவர்கள் கொலை செய்து உடல்களை அங்குள்ள அமில தொட்டியில் மூழ்கடித்துள்ளனர். எனவே உடல்களை அடையாளம் காண முடியாததால் டி.என்ஏ. பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பல் மற்றும் கொடூர குற்றங்களை புரியும் கும்பல்கள் உள்ளன. அவர்கள் இவர்களை கடத்தி சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். #Tamilnews
Tags:    

Similar News