தமிழ்நாடு

திருவண்ணாமலைக்கு இன்று 585 சிறப்பு பஸ்கள்

Published On 2024-05-22 04:45 GMT   |   Update On 2024-05-22 04:45 GMT
  • அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் இருக்கை மற்றும் படுக்கை, குளிர் சாதன வசதி கொண்ட 30 பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று இயக்கப்படும்.
  • கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

சென்னை:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பவுர்ணமி தினமான (புதன்கிழமை) சென்னையில் இருந்தும், பிற பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள். இதனால் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் 330 பஸ்களும், பிற இடங்களில் இருந்து தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் 225 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.

இதுமட்டுமின்றி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் இருக்கை மற்றும் படுக்கை, குளிர் சாதன வசதி கொண்ட 30 பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று இயக்கப்படும்.

மேலும், சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு அரசுப் பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

Tags:    

Similar News