செய்திகள் (Tamil News)
விரகனூரில் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பு எதிரொலி - மதுரை மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம்

Published On 2018-07-25 07:02 GMT   |   Update On 2018-07-25 07:02 GMT
லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பதால் மதுரை மார்க்கெட்டுகளில் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் விலை குறைந்துள்ளது. #LorryStrike
மதுரை:

நாடு முழுவதும் இன்று 6-வது நாளாக லாரிகள் ஸ்டிரைக் நீடித்து வருகிறது. இதனால் சரக்குகளை வெளிமாநிலத்துக்கு அனுப்புவதில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 2,500-க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படாததால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவாசிய பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது.

நாட்டு காய்கறிகள் வேன், சரக்கு ஆட்டோக்கள் முலம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், மல்லி, கறிவேப்பிலை உள்ளிட்ட காய்கறிகள் வெளி மாநிலத்துக்கு அனுப்ப முடியாத தால் மார்க்கெட்டுகளில் குவிந்து கிடக்கிறது. இதனால் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மதுரைக்கு எடுத்துவரப்படும் பச்சை மிளகாய் வரத்து இல்லாததால் கடந்த வாரம் கிலோ ரூ. 25-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் இன்று கிலோவுக்கு ரூ. 30 உயர்ந்து 55-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பதால் அத்தியவாசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  #LorryStrike



Tags:    

Similar News