search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரிகள் ஸ்டிரைக்"

    லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #LorryStrike #TNCM #Nitingadgari
    சென்னை:

    சுங்க கட்டணம், 3-ம் நபர் விபத்து காப்பீட்டு பிரிமியம் உயர்வு போன்றவற்றை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் நேற்று 7-வது நாளாக நீடித்தது. ஸ்டிரைக் காரணமாக அத்தியாவசியத் தேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    லாரி ஸ்டிரைக் தொடர்ந்து நீடித்தால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். 7-வது நாளாக லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் மதுரை மாவட்டத்தில் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களை பாதிக்கிற வகையில் உள்ள லாரிகள் வேலை நிறுத்தத்தை உடனே முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என தமிழக முதல்வர் பழனிச்சாமி மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடும். வேலை நிறுத்தத்தில் சுமார் 4.5 லட்சம் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த வேலை நிறுத்தத்தால் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். #LorryStrike #TNCM #Nitingadgari
    லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, வேலூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.140 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike
    வேலூர்:

    லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்து இன்று 7-வது நாளாக நீடிக்கிறது. வேலூர் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.

    இதனால் சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.20 கோடிக்கு மேல் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    7-வது நாளாக லாரிகள் இன்றும் ஓடவில்லை. வேலை நிறுத்தம் நீடிப்பதால், வேலூர் மாவட்டத்தில் 7 நாட்களில் மட்டும் ரூ.140 கோடிக்கு மேல் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    லாரி டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். #LorryStrike

    7-வது நாளாக லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் மதுரை மாவட்டத்தில் ரூ. 400 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike
    மதுரை:

    சுங்க கட்டணம், 3-ம் நபர் விபத்து காப்பீட்டு பிரிமியம் உயர்வு போன்றவற்றை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது. ஸ்டிரைக் காரணமாக அத்தியாவசியத் தேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    மதுரை மாவட்டத்தில் 4,500 லாரிகள் உள்ளன. இவற்றில் 90 சதவீத லாரிகள் ஓடவில்லை. இதனால் மதுரையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கத்தரிக்காய், வெண்டை, தக்காளி போன்ற நாட்டு காய்கறிகளை அனுப்ப முடியவில்லை.

    வேன் மற்றும் சரக்கு ஆட்டோக்களில் மதுரையில் உள்ள சென்ட்ரல் மார்க்கெட், விளக்குத்தூண் மார்க்கெட், தெற்குவாசல், சுப்பிர மணியபுரம் மார்க்கெட்டுகளுக்கு நாட்டு காய்கறிகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதனால் அவற்றின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இன்று கத்தரிக்காய் 1 கிலோ 15 ரூபாய்க்கு விற்பனையானது.

    கர்நாடகா, ஆந்திராவில் இருந்து மதுரையில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு மிளகாய் அதிகம் விற்பனைக்கு வரும். அவற்றின் வரத்து குறைந்து விட்டதால் மதுரை மார்க்கெட்டுகளில் இன்று மிளகாய் கிலோ 70 ரூபாய்க்கு விற்பனையானது.

    சேலம், நாமக்கல்லில் இருந்து முட்டை வரத்தும் குறைந்து விட்டதால் 4 ரூபாய் 80 காசுக்கு விற்கப்பட்ட முட்டை இன்று 30 காசு உயர்ந்து ரூ. 5.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    லாரி ஸ்டிரைக் தொடர்ந்து நீடித்தால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். 7-வது நாளாக லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் மதுரை மாவட்டத்தில் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களை பாதிக்கிற வகையில் உள்ள லாரிகள் வேலை நிறுத்தத்தை உடனே முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #LorryStrike


    லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பதால் மதுரை மார்க்கெட்டுகளில் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் விலை குறைந்துள்ளது. #LorryStrike
    மதுரை:

    நாடு முழுவதும் இன்று 6-வது நாளாக லாரிகள் ஸ்டிரைக் நீடித்து வருகிறது. இதனால் சரக்குகளை வெளிமாநிலத்துக்கு அனுப்புவதில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் 2,500-க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படாததால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவாசிய பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது.

    நாட்டு காய்கறிகள் வேன், சரக்கு ஆட்டோக்கள் முலம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், மல்லி, கறிவேப்பிலை உள்ளிட்ட காய்கறிகள் வெளி மாநிலத்துக்கு அனுப்ப முடியாத தால் மார்க்கெட்டுகளில் குவிந்து கிடக்கிறது. இதனால் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

    ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மதுரைக்கு எடுத்துவரப்படும் பச்சை மிளகாய் வரத்து இல்லாததால் கடந்த வாரம் கிலோ ரூ. 25-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் இன்று கிலோவுக்கு ரூ. 30 உயர்ந்து 55-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பதால் அத்தியவாசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  #LorryStrike



    லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.4 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike
    திண்டுக்கல்:

    சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று 5-வது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் பெருமளவு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய வியாபார சந்தையான ஒட்டன்சத்திரத்தில் இருந்து பெரும்பாலான ஊர்களுக்கு காய்கறிகள் அனுப்பவில்லை.

    திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. இந்த மில்களுக்கு தேவையான பஞ்சு மற்றும் நூல் வரவில்லை.

    மேலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களையும் வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியவில்லை. இதனால் நூல்கள் தேக்கம் அடைந்துள்ளது. மூலப்பொருட்கள் வராததால் 3 சிப்டுகள் இயங்கி வந்த ஆலைகளில் தற்போது 2 சிப்டுகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். இதுதவிர வெளிமாநிலங்களில் இருந்து திண்டுக்கல் வரும் பருப்பு, மளிகை பொருட்கள், கட்டுமான பொருட்கள் ஆகியவை வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இத்தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கும் நிலையில் உள்ளனர்.

    கடந்த 4 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் சுமார் ரூ.4 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    காய்கறிகள், மலர்கள் ஆகியவை உரிய நேரத்தில் வெளியூர்களுக்கு அனுப்ப முடியாததால் அவை அழுகி விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் லாரிகள் போராட்டம் முடிவுக்கு வந்தால்தான் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என பல்வேறு தரப்பினரும் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். #LorryStrike
    தொடரும் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைகிழங்கு வர்த்தகம் ரூ.10 கோடிக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக மண்டி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். #LorryStrike
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளுக்கு ஊட்டி, குஜராத், கோலார் , கர்நாடகா, ஆக்ரா, நைனிடால், ஆசன், இந்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் 100 லோடு வரை உருளைக்கிழங்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து உருளைக்கிழங்குகள் கேரளா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது கடந்த 5 நாட்களாக தொடர்ந்து நடைபெறும் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக உருளைகிழங்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி வீதம் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக உருளைக்கிழங்கு மண்டி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதே போல் நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் அறுவடை செய்து லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் லாரி உரிமையளர்கள் சங்கத்தினர் மண்டி உரிமையாளர்களிடம் லாரி வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கேட்டுள்ளனர். இதனால் லாரிகள் பொது வேலை நிறுத்தும் இன்னும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

    இதே நிலை நீடித்தால் நிலைமை மோசமாக பாதிக்கப்படும் என்பதால் மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வியாபாரிகளும், விவசாயிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  #LorryStrike

    லாரிகள் ஸ்டிரைக் தீவிரமாக நடந்து வருவதால் ஈரோட்டில் மட்டும் சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள மஞ்சள்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கி கிடக்கிறது. #LorryStrike
    ஈரோடு:

    நாடு முழுவதும் இன்று 4-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.

    ஈரோடு என்றதும் மஞ்சளும், ஜவுளிகளும் தான் நினைவுக்கு வரும். ஈரோடு மாவட்டம் முழுவதும் மஞ்சள் சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. அறுவடை செய்யப்படும். மஞ்சள் பதப்படுத்தப்பட்டு மூட்டைகளில் அடைத்து இந்தியா முழுவதும் தினமும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது லாரிகள் ஸ்டிரைக் தீவிரமாக நடந்து வருவதால் ஈரோட்டில் மட்டும் சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள மஞ்சள்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கி கிடக்கிறது. மஞ்சள் மூட்டைகள் குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதே போல் ஈரோட்டில் மட்டும் இன்று வரை ரூ.50 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம் அடைந்து உள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் ஜளிகள் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டு இங்கு இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் பல மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    லாரிகள் ஸ்டிரைக்கால் ஜவுளி பண்டல்கள் குவியல் குவியலாக தேங்கி கிடக்கிறது.

    மேலும் ஈரோட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும். எண்ணெய் வித்துகள் ரூ.15 கோடி அளவிலும் மாட்டு தீவனம் ரூ.2 கோடி அளவிலும், காய்கறிகள் ரூ.5 கோடி அளவிலும் தேங்கி உள்ளது.

    மொத்தம் ஈரோடு மாவட் டத்தில் மட்டும் இதுவரை ரூ.200 கோடி மதிப்பிலான பல்வேறு பொருட்கள் தேக்கம் அடைந்திருப்பதாக மஞ்சள் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜமாணிக்கம், தமிழ்நாடு வணிக சங்க பேரவை மாநில இணை செயலாளர் சிவநேசன் ஆகியோர் தெரிவித்தனர். #LorryStrike


    மதுரையில் இன்று 3-வது நாளாக லாரிகள் ஸ்டிரைக் நீடிக்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. #LorryStrike

    மதுரை:

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று 3-வது நாளாக லாரிகள் ஓடவில்லை.

    மதுரை மாவட்டத்தில் இன்று 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. லாரிகள் ஓடாதததால், வெளி மாநிலங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்களான பருப்பு உள்பட பல பொருட்கள் மதுரைக்கு வரவில்லை.

    இதேபோல் மதுரையில் இருந்தும் வெளி மாநிலங்களுக்கு பொருட்கள் அனுப்பப்படவில்லை. தொடர்ந்து லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் காய்கறிகள் தற்போது மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகின்றன. முட்டைகோஸ், கேரட், பீட்ரூட் போன்ற மலை காய்கறிகள் வரத்து கனிசமாக குறைந்து விட்டது. எனவே லாரி ஸ்டிரைக்கை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #LorryStrike

    லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாக ரூ.600 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. #LorryStrike
    சென்னை:

    டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு ஆகியவற்றை கண்டித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் நேற்று நாடு முழுவதும் லாரி ‘ஸ்டிரைக்’ தொடங்கியது.

    லாரி ‘ஸ்டிரைக்’இன்று (சனிக்கிழமை) 2-வது நாளாக நீடிக்கிறது. இந்தியா முழுவதும் 68 லட்சம் லாரிகள் ஓடவில்லை.

    தமிழகத்தில் 4½ லட்சம் லாரிகள் ஓடாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஸ்டிரைக் காரணமாக நாடு முழுவதும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளது. தமிழகத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேங்கி கிடக்கிறது.



    நாமக்கல் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 2.5 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு முதல் 2 நாட்கள் நாங்கள் ஆதரவு அளித்து உள்ளோம். இதனால் நாமக்கல் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 2.5 கோடி முட்டைகள் தேங்கியுள்ளன. இந்த எண்ணிக்கை இன்று காலை 5 கோடியாக உயர்ந்துள்ளது.

    நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2.5 கோடி முட்டைகளை சேமிக்கும் அளவுக்கு குளிர்பதன கிடங்குகள் உள்ளன. எனவே முட்டைகளை இன்று இரவு முதல் வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

    முட்டை விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர தொடங்கி உள்ளது. இன்று முட்டை விலை 5 காசு அதிகரித்துள்ளது.

    எனவே பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனமாக கருதி முட்டை லாரிகளுக்கு போராட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    போராட்டம் காரணமாக கடந்த 3 நாட்களாக வட மாநிலங்களில் இருந்து 70 சதவீத லாரிகள் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை. இன்று முதல் லாரிகள் இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் கோழித்தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

    போராட்டம் குறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-

    ஸ்டிரைக் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கூலி தொழிலாளர்கள், டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என பல லட்சம் பேருக்கு வேலை இல்லை. இதன் மூலம் லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    பால் வண்டி, தண்ணீர் வண்டி, காய்கறி உள்ளிட்ட முக்கியமான அத்தியாவசிய வண்டிகள் மட்டும் தான் இயங்கி கொண்டிருக்கிறது.பெட்ரோலியம் ஏற்றி வரும் டேங்கர் லாரிகள் இன்றைக்கும் ஓடுகிறது. இந்த சங்கத்தின் நிர்வாகிகள் வருகிற திங்கட்கிழமைக்கு மேலே ஸ்டிரைக் ஆதரவு குறித்த முடிவை சொல்கிறோம் என்றனர்.

    வேலை இழப்பினால் நாடு முழுவதும் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 கோடி பேர் நேரிடையாக பாதிக்கப்படுவார்கள்.

    தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு ரூ. 300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பதால் ரூ. 600 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நாளும் 50 ஆயிரம் லாரிகள் தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு போகும். வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய சரக்குகள் எல்லாம் முழுவதுமாக தமிழகத்திற்கு வரவில்லை. பருப்பு வகைகள், சீரகம், பூண்டு, ஆப்பிள் பழ வகைகள் எதுவும் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் 4500 லாரிகள் நேற்று முதல் ஓட வில்லை. மாதவரம் லாரி நிறுத்துமிடத்தில் அனைத்து லாரிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு தினமும் 500 லாரிகளில் காய்கறிகள் கொண்டு வரப்படும்.

    2-வது நாளாக இன்று லாரி ‘ஸ்டிரைக்’ நீடித்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரிகளில் காய்கறிகள் கொண்டு வரப்படவில்லை. மினி லாரிகள் மூலமாக மட்டுமே இன்று காய்கறிகள் கோயம்பேடுக்கு வந்தன. இதனால் காய்கறி வரத்து பெருமளவு குறைந்துள்ளது.

    வரத்து குறைவு காரண மாக காய்கறி, பழங்கள் விலை உயரும் அபாயத்தில் உள்ளது. தொடர்ந்து ஸ்டிரைக் நீடிக்குமானால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயரும் என்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சங்க நிர்வாகி சந்திரன் கூறினார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் தேவையான காய்கறிகள் தற்போது ஓரளவு கை இருப்பு உள்ளது. இன்னும் ஓரிரு நாட்கள் லாரி ஸ்டிரைக் தொடர்ந்தால் காய்கறி விலை கடுமையாக உயரும்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறி விலை விபரம் வருமாறு:-

    கத்தரிக்காய் - ரூ.10
    தக்காளி - ரூ.10
    முருங்கைக்காய் - ரூ.20
    பீன்ஸ் - ரூ.40
    பாகற்காய் - ரூ.20
    கேரட் - ரூ.35
    பல்லாரி வெங்காயம் -ரு.20
    அவரைக்காய் - ரூ.30
    மிளகாய் - ரூ.40  #LorryStrike
    லாரிகள் ஸ்டிரைக் எதிரொலியால் பிரேசில் நகரத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் பிறப்பித்துள்ளார். #MichelTemer #Lorrystrike

    சாவ்பாங்லோ:

    பிரேசில் நாட்டின் தொழில் நகரம் சாவ்பாவ்லோ. இங்கு லாரி மற்றும் வாகனங்களின் வேலைநிறுத்த போராட்டம் 5 நாட்கள் நடக்கிறது.

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து இப்போராட்டம் நடத்தப்படுகிறது.

    லாரிகள் இயக்காமல் நடுரோடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சரக்குகள் ஏற்றிச் செல்லப்படாததால் பொருட்களுக்கு கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    எனவே நிலைமையை சமாளிக்க சாவ்பாவ்லோ நகரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் பிறப்பித்துள்ளார்.

    அதைத் தொடர்ந்து ரோடுகளில் நிறுத்தப்பட் டுள்ள லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசரநிலை பிரகடனம் குறித்து அதிபர் டெமர் டி.வி.யில் உரை நிகழ்த்தினார். #MichelTemer #Lorrystrike

    ×