search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Business Impact"

    லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.4 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike
    திண்டுக்கல்:

    சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று 5-வது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் பெருமளவு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய வியாபார சந்தையான ஒட்டன்சத்திரத்தில் இருந்து பெரும்பாலான ஊர்களுக்கு காய்கறிகள் அனுப்பவில்லை.

    திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. இந்த மில்களுக்கு தேவையான பஞ்சு மற்றும் நூல் வரவில்லை.

    மேலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களையும் வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியவில்லை. இதனால் நூல்கள் தேக்கம் அடைந்துள்ளது. மூலப்பொருட்கள் வராததால் 3 சிப்டுகள் இயங்கி வந்த ஆலைகளில் தற்போது 2 சிப்டுகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். இதுதவிர வெளிமாநிலங்களில் இருந்து திண்டுக்கல் வரும் பருப்பு, மளிகை பொருட்கள், கட்டுமான பொருட்கள் ஆகியவை வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இத்தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கும் நிலையில் உள்ளனர்.

    கடந்த 4 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் சுமார் ரூ.4 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    காய்கறிகள், மலர்கள் ஆகியவை உரிய நேரத்தில் வெளியூர்களுக்கு அனுப்ப முடியாததால் அவை அழுகி விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் லாரிகள் போராட்டம் முடிவுக்கு வந்தால்தான் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என பல்வேறு தரப்பினரும் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். #LorryStrike
    2-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் மதுரையில் ரூ.100 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike
    மதுரை:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. இதனால் லாரிகள் சேவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் 4500 லாரிகள் உள்ளன. இதில் 4 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் சரக்கு புக்கிங் பணிகளும் நிறுத்தப்பட்டன.

    அனைத்து லாரிகளும் விரகனூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மதுரையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சென்ற லாரிகளும் ஆங்காங்கே சரக்குகளுடன் நிற்கின்றன.

    மதுரையில் இருந்து தினமும் பல்வேறு சரக்குகள் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இந்த பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.100 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை சந்தைகளுக்கு வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் 2 நாட்களுக்கு ஒருமுறை லாரிகளில் வரும். நேற்று முன்தினம் சரக்கு வந்துள்ளது. இதனால் சந்தைகளில் காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.

    லாரிகளின் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் காய்கறிகள் வரத்து பாதிக்கப்பட்டு அவற்றின் விலை உயரும் அபாயம் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    காய்கறிகள் மட்டுமின்றி பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளதால் லாரிகள் போராட்டத்தை விரைந்து முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என வர்த்தகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  #LorryStrike




    ×