செய்திகள்
அமித் ஷா தலைமையில் தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது
தமிழகம் சார்பில் அமைச்சர் பொன்முடி, உள்துறை செயலாளர் பிரபாகர், கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
திருப்பதி:
திருப்பதியில் உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்கள், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் ஆகிய யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகம் சார்பில் அமைச்சர் பொன்முடி, உள்துறை செயலாளர் பிரபாகர், கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆந்திரா சார்பில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானா சார்பில் உள்துறை அமைச்சர் முகமது அலி, கர்நாடகா சார்பில் முதல்வர் பசவராஜ் பொம்மை, புதுச்சேரி சார்பில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் தென்னிந்தியாவின் வளர்ச்சி, பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு தலைவர்கள் வந்திருப்பதால் திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியை மேகாலயாவுக்கு மாற்றக்கூடாது- மூத்த வழக்கறிஞர்கள் கோரிக்கை