செய்திகள் (Tamil News)
மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வருகை
விமானப்படைக்கு வலுசேர்க்கும் வகையில், பிரான்சில் இருந்து மேலும் மூன்று ரபேல் ஜெட் போர் விமானங்கள் இன்று மாலை இந்தியா வந்தடைகின்றன.
புதுடெல்லி:
நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாயில் 36 விமானங்கள் வாங்க இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நிறுவனம் முதல் தவணையாக ஐந்து விமானங்களை வழங்கியது. இந்த விமானங்கள் ஜூலை மாதம் இந்தியா வந்தடைந்த பின்னர், இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில், விமானப்படைக்கு வலுசேர்க்கும் வகையில், பிரான்சில் இருந்து மேலும் மூன்று ரபேல் ஜெட் போர் விமானங்கள் இன்று மாலை இந்தியா வந்தடைகின்றன.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று விமானங்களும், மார்ச் மாதம் 3 விமானங்களும், ஏப்ரலில் 6 விமானங்களும் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.