செய்திகள்

இந்திய விமானப்படையின் புதிய துணை தளபதி அனில் கோஷ்லா - அக்.1-ம் தேதி பதவி ஏற்கிறார்

Published On 2018-09-29 11:52 GMT   |   Update On 2018-09-29 11:52 GMT
இந்திய விமானப்படை துணை தளபதி எஸ்.பி.டியோ-வின் பதவிக்காலம் முடிவதையொட்டி புதிய துணை தளபதியாக ஏர் மார்ஷல் அனில் கோஷ்லா வரும் முதல் தேதி பதவி ஏற்றுகொள்கிறார். #AirMarshal #AnilKhosla
புதுடெல்லி:

இந்திய விமானப்படை துணை தளபதி எஸ்.பி.டியோ என்றழைக்கப்படும் ஷிரிஷ் பாபன் டியோ-வின் பதவிக்காலம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. நாளை ஓய்வுபெறவுள்ள எஸ்.பி.டியோ, கடந்த 26-ம் தேதி தவறுதலாக தனது துப்பாக்கியால் தொடைப்பகுதியில் சுட்டுக்கொண்டார்.

இதனால், காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், எஸ்.பி.டியோ-வின் பதவிக்காலம் முடிவதையொட்டி இந்திய விமானப்படையின் புதிய துணை தளபதியாக ஏர் மார்ஷல் அனில் கோஷ்லா நேற்று நியமிக்கப்பட்டார்.

அக்டோபர் முதல் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த பதவியை அனில் கோஷ்லா ஏற்றுகொள்கிறார். #AirMarshal #AnilKhosla  
Tags:    

Similar News