உள்ளூர் செய்திகள்

வேலூர் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க வந்தவர்களை படத்தில் காணலாம்.

வேலூர் மார்க்கெட்டில் மீன் வரத்து குறைவு

Published On 2023-11-26 07:43 GMT   |   Update On 2023-11-26 07:43 GMT
  • கேரளாவில் பலத்த மழை எதிரொலி
  • கூட்டமின்றி வெறிச்சோடியது

வேலூர்:

வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து மீன் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் விற்பனை அதிகரித்து காணப்படும். அசைவ பிரியர்கள் அதிக அளவில் குவிந்து, ஆர்வத்துடன் மீன், ஆடு மற்றும் கோழி உள்ளிட்ட இறைச்சிகளை வாங்கி செல்வார்கள்.

கேரளாவில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதன் எதிரொலியாக வேலூர் மார்க்கெட்டுக்கு கடந்த வாரத்தை விட, இந்த வாரம் மீன்கள் குறைவாக கொண்டு வரப்பட்டது.

வரத்து குறைந்ததால் மீன்களின் விலையும் உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது.

இதில் வஞ்சரம் மீன் ரூ.600 முதல் 900 வரையும், சங்கரா ரூ. 250 முதல் 300 வரையும், நண்டு ரூ.400 முதல் 500 வரையும், ஏரா ரூ.400 முதல் 500 வரையும், கடல் வவ்வா ரூ. 500, அணை வவ்வா ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் இன்று கார்த்திகை தீபம் என்பதால் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க வரும் அசைவ பிரியர்களின் எண்ணிக்கையும் குறைந்து, மார்க்கெட் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

Similar News