உள்ளூர் செய்திகள்

வாலிபரிடம் பணம் பறித்த திருநங்கை கைது

Published On 2022-08-28 08:49 GMT   |   Update On 2022-08-28 08:49 GMT
  • பாலாஜி (வயது 23). இவர் நேற்று புதிய பஸ் நிலையம் பெங்களூர் பஸ் நிறுத்தம் இடம் அருகே வந்து கொண்டிருந்தார்.
  • பாலாஜியிடம் இருந்து இருந்து ரூபாய் 650 பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

சேலம்

சேலம் பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 23). இவர் நேற்று புதிய பஸ் நிலையம் பெங்களூர் பஸ் நிறுத்தம் இடம் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த ஒரு திருநங்கை கத்தி முனையில் பாலாஜியிடம் இருந்து இருந்து ரூபாய் 650 பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலாஜி பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அம்மாபேட்டை காலனி தாதம்பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்த திருநங்கை கொடி என்கிற சித்தலிங்கம் (24) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து பணம், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.

Tags:    

Similar News