உள்ளூர் செய்திகள் (District)

மறைமலைநகர் அருகே காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-11-24 11:19 GMT   |   Update On 2022-11-24 11:19 GMT
  • தலைவலி காரணமாக தேவேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • தற்கொலை குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மறைமலைநகர்:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பேரமனூர் விவேகானந்தர் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 50), காவலாளியாக வேலை செய்து வந்தார். தலைவலி காரணமாக நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News