உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

Published On 2023-06-18 08:21 GMT   |   Update On 2023-06-18 08:21 GMT
  • இளம் அறிவியல் பாடப் பிரிவுகளான கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் (சுயநிதி) போன்ற பிரிவுகளில் சில இடங்கள் உள்ளன.
  • சுயநிதி பிரிவுக்கு தனி விண்ணப்பமும், அரசு உதவி பெறும் பிரிவுக்கு தனி விண்ணப்பமும் சமர்பிக்க வேண்டும்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.aditanarcollege.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு கலந்தாய்வு கடந்த மாதம் 20, 22-ந்தேதிகளில் நடத்தப்பட்டது.மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்தனர்.

இளம் அறிவியல் பாடப் பிரிவுகளான கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் (சுயநிதி) போன்ற பிரிவுகளில் சில இடங்கள் உள்ளன.

தனித்தனி விண்ணப்பம்

எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் கல்லூரி இணைய தளத்தில் விண்ணப்பித்து, கல்லூரி முதல்வரை நேரில் அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

சுயநிதி பிரிவுக்கு தனி விண்ணப்பமும், அரசு உதவி பெறும் பிரிவுக்கு தனி விண்ணப்பமும் சமர்பிக்க வேண்டும்.

இந்த தகவலை ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News