உள்ளூர் செய்திகள் (District)
பொன்னேரியில் மத்திய பாதுகாப்பு படை வீரர் திடீர் மரணம்
பொன்னேரியில் மத்திய பாதுகாப்பு படை வீரர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி ஜீவா தெருவைச் சேர்ந்தவர் சுகதேவ். (வயது42). மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படை வீரர். இவர் மிசோரமில் பணியாற்றி வந்தார்.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சொந்த ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் சுகதேவ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுக்தேவ் இறந்து போனார்.