செய்திகள் (Tamil News)
உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன் மனைவி ஆண்டாள்(வயது 75). சம்பவத்தன்று உளுந்தூர்பேட்டையில் இருந்து பாண்டூர் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த ஆண்டாள் கீரிமேடு என்னும் பகுதியில் சாலையை கடக்க முயன்ற அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆண்டாள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.