செய்திகள் (Tamil News)
பள்ளிபாளையத்தில் பெயிண்டர், ஓவியர்கள் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் பெயிண்டர்கள் சங்கம் மற்றும் ஓவியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பள்ளிபாளையம்:
டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் பெயிண்டர்கள் சங்கம் மற்றும் ஓவியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு பொறுப்பாளர் பாஸ்கர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகி அசோகன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் பலர் கலந்து கொண்டனர்.