செய்திகள் (Tamil News)
கைது

சிவகாசி அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது

Published On 2020-09-22 10:18 GMT   |   Update On 2020-09-22 10:18 GMT
சிவகாசி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:

சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அண்ணாகாலனி அருகில் ஒருவர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். விசாரணையில் அவர் திருத்தங்கல் கண்ணகி காலனியை சேர்ந்த பாஸ்கரன் என்கிற மதுரை பாஸ்கரன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இவர் கடந்த 2012 முதல் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News