செய்திகள் (Tamil News)
தற்கொலை

ராஜபாளையத்தில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

Published On 2019-12-09 09:58 GMT   |   Update On 2019-12-09 09:58 GMT
மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்தார்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோபால் (வயது 48). மத்திய ரிசர்வ் படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தற்போது தனியார் நூற்பாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்த கோபால், மது பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

மது பழக்கத்தை கைவிடும் படி மனைவி தனலட்சுமி பலமுறை கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த கோபால், மது பழக்கத்தை கைவிட முடியாமல் தவித்தார்.

வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்தார். சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கோபால், அங்கு பரிதாபமாக இறந்தார்.

தனலட்சுமி புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News