விக்கிரவாண்டி அருகே விபத்து - வியாபாரி பலி
விக்கிரவாண்டி:
சென்னை புதுப்பேட்டை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 52) வியாபாரி. இவர் நேற்று மாலை ஒரு மினிலாரியில் பழைய பொருட்களை ஏற்றிக்கொண்டு மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.
மினிலாரியை தர்மபுரி மாவட்டம் பச்செனம் பட்டியை சேர்ந்த கந்தன்(25) என்பவர் ஓட்டிசென்றார். அந்த மினிலாரி இன்று அதிகாலை விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் உள்ள திருச்சி-சென்னை சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலை யோரம் ஏற்கனவே ஒரு லாரி விபத்துக்குள்ளாகி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியின் பின்புறம் திடீரென மினிலாரி மோதியது. விபத்தில் மினிலாரி அப்பளம்போல் நொறுங்கியியது.
இதில் மினிலாரியில் இருந்த சம்சுதின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
டிரைவர் கந்தன் பலத்தகாயம் அடைந்தார். விபத்துகுறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
படுகாயம் அடைந்த கந்தனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்துகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருச்சி சென்னை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.