உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி மாயம்

Published On 2023-06-18 09:46 GMT   |   Update On 2023-06-18 09:46 GMT
  • கடந்த 15-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேசென்றார்.
  • மாலையில் நீண்டநேரமாகியும் சிறுமி திரும்பி வீட்டிற்கு வரவில்லை.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சில்லாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். சிறுமியின் தந்ைத திருப்பூரில் உள்ள டாஸ்மாக்கில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இதன்காரணமாக சிறுமி கம்பைநல்லூர் அருகே போளையம்பள்ளியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேசென்றார். மாலையில் நீண்டநேரமாகியும் சிறுமி திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து சிறுமியின் தந்தை கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News