ஆன்மிகம்
சங்கடகர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
சங்கடகர சதுர்த்தியையொட்டி சித்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு 608 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலஙகாரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சங்கடகர சதுர்த்தியையொட்டி கிருஷ்ணகிரி பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் நேற்று மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விநாயகருக்கு 608 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலஙகாரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். மகா தீபாராதனையுடன் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் கிருஷ்ணகிரி காந்தி சாலை வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீர்த்த விநாயகர் கோவில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில், காந்தி நகரில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில், சேலம் சாலையில் ஆதிசக்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதேபோல் கிருஷ்ணகிரி காந்தி சாலை வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீர்த்த விநாயகர் கோவில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில், காந்தி நகரில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில், சேலம் சாலையில் ஆதிசக்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.