என் மலர்tooltip icon

    செய்திகள்

    • பிப்ரவரி 12, 1965 அன்று கோயம்புத்தூருக்கு இந்திரா காந்தி வருகை புரியவில்லை.
    • முழுப் படமும் திரைப்படத் தயாரிப்பாளர்களின் சொந்த கற்பனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள 'பராசக்தி' படத்தை தடைசெய்ய வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அணி தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில துணைத் தலைவர் அருண் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "1965-ல், அனைத்து மாநிலங்களிலும் அஞ்சல் அலுவலகப் படிவங்கள் இந்தியில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்று காங்கிரஸ் அரசாங்கம் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது எங்கள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்குடன் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான புனைவு ஆகும்.

    திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சந்திப்பது போன்றும், அதில் இந்திரா காந்தி வில்லத்தனமாகப் பேசுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது முழுவதும் ஒரு கற்பனை சித்தரிப்பு காட்சி. மறைந்த தேசியத் தலைவர்களை அவர்கள் வரலாற்றில் இடம்பெறாத நிகழ்வுகளில் சம்பந்தப்படுத்திச் சித்தரிப்பது சட்டத்திற்குப் புறம்பானது. 

    இந்த சித்தரிப்பை மேலும் வலுப்படுத்தி திரைப்படத்தில் இந்திரா காந்தி பிப்ரவரி 12, 1965 அன்று கோயம்புத்தூருக்கு வருகை தந்ததாக காட்டப்பட்டுள்ளது. உண்மையில் அப்படி ஒரு வருகை நிகழவே இல்லை. பின்னர், அவர் முன்னிலையில் ஒரு ரயில் எரிக்கப்படுவது போன்ற காட்சிகளும், இந்தி திணிப்புக்கு எதிரான கையெழுத்துக்களை அவர் ஏற்றுக்கொண்டது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் எதுவும் வரலாற்றில் நடக்கவில்லை, இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    அதுபோல திரைப்படத்தின் இறுதியில்,  நமது தலைவர்களான கே. காமராஜர், இந்திரா காந்தி மற்றும் அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் உண்மையான புகைப்படங்கள் காட்டப்படுகின்றன. அதனுடன், பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி 200-க்கும் மேற்பட்ட தமிழ் மக்களைச் சுட்டுக் கொன்றது என்ற முற்றிலும் ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு எந்தவித ஆதாரமும் இல்லாமல் முன்வைக்கப்பட்டு, நமது கட்சியையும், நமது தலைவர்களையும் தவறான மற்றும் அவதூறான தகவல்களின் மூலம் வேண்டுமென்றே கலங்கப்படுத்தும் காட்சி. 

    இது தவிர, காங்கிரஸ் கொடி எரிக்கப்படும் காட்சிகள் கூட படத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, இந்த முழுப் படமும் திரைப்படத் தயாரிப்பாளர்களின் சொந்த கற்பனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

    வரலாற்றில் நிகழாத நிகழ்வுகளைச் சித்தரிக்கும் பராசக்தி திரைப்படத்தின் அனைத்துக் காட்சிகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். திரைப்படத் தயாரிப்புக் குழு பொது மன்னிப்புக் கோர வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அநீதிக்கு எதிராகத் தங்கள் குரல்களை எழுப்புமாறு அனைத்து காங்கிரஸ் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

    #பராசக்தி திரைப்படத்தைத் தடை செய்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது.
    • இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது, வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சி.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவுக்கு தான் சொந்தம் என அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் இன்று தெரிவித்துள்ளதும் தெரிவித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே ஏற்பட்ட எல்லை ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவிற்கு வழங்கப்பட்டது.

    சீனா இந்தப் பள்ளத்தாக்கில் நிரந்தர சாலைகள் மற்றும் ராணுவத் தளவாட கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சீனா பதிலளித்துள்ளது.

    சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங், "சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது. இதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

    1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படியே இப்பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டது. எனவே அது அது சட்டப்பூர்வமானது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது, வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சி" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் சீனாவின் கருத்துக்கு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திரா திவேதி, "1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே ஏற்பட்ட எல்லை ஒப்பந்தத்தை இந்தியா சட்டவிரோதமானது எனக் கருதுகிறது.

    எனவே, ஷக்சகம் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் கவலைக்குரிய விஷயமாகும். அதை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம்" என்று கூறினார்.

    மேலும், சீனா மற்றும் பாகிஸ்தான் இணைந்து செயல்படுத்தி வரும் 'சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்' (CPEC 2.0) தொடர்பான கூட்டறிக்கையை இந்தியா ஏற்கவில்லை என்றும், இந்திய நிலப்பரப்பு வழியாக இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துவது செல்லுபடியாகாது என்றும் அவர் கூறினார்.

    எல்லையில் யதார்த்தத்தை மாற்றச் சீனா முயல்வதைத் தொடர்ந்து எதிர்ப்போம் என்றும், இந்தியாவின் பாதுகாப்பைப் பேணத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தங்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறினார். 

    • கடந்தாண்டு பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது.
    • இந்தாண்டு பிரிக்ஸ் அமைப்பின் 18 ஆவது மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது.

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுகளை உள்ளடக்கியது BRICS அமைப்பு. இதில் புதிதாக எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா இணைந்துள்ளது.

    கடந்தாண்டு பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. இந்தாண்டு பிரிக்ஸ் அமைப்பின் 18 ஆவது மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், 2026ம் ஆண்டின் BRICS அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள இந்தியா, புதிய லோகோ மற்றும் பிரத்தியேக இணையதளத்தை அறிமுகம் செய்தது.

    தாமரை வடிவிலான இந்த லோகோ இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும், 2016ல் வெளியிடப்பட்ட பழைய லோகோவை போலவே புதிய லோகோ அச்சு பிசகாமல் உள்ளதாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    • ரிக்ஷா டிரைவர் சட்டை பைக்குள் இருந்து பாம்பை எடுத்ததால் பரபரப்பு.
    • போலீசார் வரவழைக்கப்பட்டு பாம்பு மீட்கப்பட்டது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் இ-ரிக்ஷா டிரைவர் ஒருவர், தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்ததால் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உத்தர பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்தவர் தீபக் (வயது 39). இவர் இ-ரிக்ஷா டிரைவர் ஆவார். இன்று காலை மதுராவில் உள்ள மருத்துவமனைக்கு வந்தார். திடீரென தனது பைக்குள் இருந்து சுமார் ஒன்றரை அடி நீளம் உள்ள பாம்பை வெளியில் எடுத்தார். அப்போது பாம்பு படம் எடுப்பதுபோல் தலையை சற்று தூக்கியது.

    இதனால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அதிர்ச்சி அளித்தனர். டாக்டர்கள் அவரிடம் பாம்பை வெளியில் விட்டுவிட்டு வரவும் எனக் கூறினர். இந்த பாம்பு தன்னை கடித்து விட்டதாகவும், விஷ முறிவு ஊசி போட வேண்டும் என்றும் டாக்டர்களிடம் அடம் பிடித்தார். இதனால் அங்கு பரபரப்பை ஏற்பட்டது.

    பின்னர் போலீசார் வரவழைக்கப்பட்டு பாம்பு மீட்கப்பட்டது. எனினும், அந்த பாம்பு தீபக்கிற்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படுவதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்தார்.

    • பாஜக மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது" என்று விஜய் சௌதாய்வாலே தெரிவித்தார்.
    • "சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது. இதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

    சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு டெல்லியில் உள்ள பாஜக தேசியத் தலைமையகத்திற்கு நேற்று வருகை தந்தனர்.

    பாஜக தலைமையகத்தில் வைத்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறையின் துணை அமைச்சர் சுன் ஹையான் தலைமையிலான குழுவினரும், பாஜக சார்பில் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் வெளியுறவுத் துறை பொறுப்பாளர் விஜய் சௌதாய்வாலே ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    "பாஜக மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது" என்று விஜய் சௌதாய்வாலே தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

    2018-ல் ராகுல் காந்தி சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ரகசிய ஒப்பந்தம் செய்ததாக பாஜக குற்றம் சாட்டியிருந்தது. அதே நேரத்தில் எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்துப் பிரதமர் மௌனம் காப்பதாகக் காங்கிரஸ் விமர்சித்தது.

    இத்தகைய சூழலில், எல்லையில் 20 இந்திய வீரர்கள் சீன ராணுவத்தால் கொல்லப்பட்ட 2020 கல்வான் தாக்குதலுக்கு பிறகு பாஜக - சீன கம்யூனிஸ்ட் கட்சி இடையே நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இதனிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவுக்கு தான் சொந்தம் என அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் இன்று தெரிவித்துள்ளதும் தெரிவித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே ஏற்பட்ட எல்லை ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவிற்கு வழங்கப்பட்டது.

    சீனா இந்தப் பள்ளத்தாக்கில் நிரந்தர சாலைகள் மற்றும் ராணுவத் தளவாட கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது.

    இது காரகோரம் மலைத்தொடருக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. இதனால் இந்திய வெளியுறவுத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங், "சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது. இதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

    1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படியே இப்பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டது. எனவே அது அது சட்டப்பூர்வமானது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது, வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சி" என்று தெரிவித்தார். 

    நேற்று சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஜக தலைமையகம் வருகை, இன்று ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு தங்களுக்கு சொந்தம் என சீனா கூறியுள்ளது ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் தரப்பிலும், சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்கள் பரவி வருகின்றன. 

    மகாராஷ்டிராவின் சரத் பாவர் தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர் சுப்ரியா ஸ்ரீநாடே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜம்மு காஷ்மீரின் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கை சீனா தனது பிராந்தியமாக அறிவித்துள்ளது.

    கடந்த சில நாட்களாக சீனா இங்கு சிபிஇசி திட்டத்தின் பெயரில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. லடாக்கிற்குப் பிறகு, சீனா எப்படி இங்கு நுழைந்தது?

    சீனா இவ்வளவு அத்துமீறல்களில் ஈடுபடுகிறதா? பாஜக தலைவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் சந்திப்பு நடத்துகிறார்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.

    • இந்த செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கட்டணச் செயலியாக கிடைக்கிறது.
    • தனிமையில் வசிக்கும் சுமார் 200 மில்லியன் சீன மக்களின் தனிமை மற்றும் பாதுகாப்பு கவலையைப் போக்குவதால் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    'தனிமை' தற்போது பலரது வாழ்விலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. யாருமே இல்லை என்பதே தனிமை என்றநிலை மாறி, எல்லோரும் இருந்தும், யாருடன் இணையாமல் இருப்பது என்பது இப்போது பலருக்கும் இயல்பான ஒன்றாக உள்ளது. பல காரணங்களால் இந்த தனிமை ஒருவரை ஆட்கொண்டுள்ளது. பெற்றோரை பிரிந்து வெளியூர்களில் வேலை செய்பவர்கள், படிப்பவர்கள், காதல் தோல்வி, குடும்ப பிரச்சனை என பல்வேறு காரணங்களால் பலரும் அதிகம் தனிமையில் இருக்கின்றனர், தனிமையை விரும்புகின்றனர்.

    உண்மையை சொல்லப்போனால் இந்த தனிமை வேண்டிய ஒன்றாகவும் இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் எழுவது, வேலையை பார்ப்பது, சாப்பிடுவது, தூங்குவது என்பதே சுழற்சியாக உள்ளது. எந்த சிந்தனையும் மனதில் எழுவதும் இல்லை, ஓடுவதும் இல்லை. மேலும் குடும்பத்தினரிடமோ, நண்பர்களிடமோ, தெரிந்தவர்களிடமோ எந்த உரையாடல்களும் இல்லை. யாராவது அழைத்தால் பேசுவது, இல்லையேல் அப்படியே சுழற்சியை தொடர்வது. இதனால் பலரது பெற்றோர்களும், அன்புக்குரியவர்களும் அச்சம் கொள்கின்றனர்.

    இந்நிலையில், நாம் யாரிடமும் தொடர்புகொள்ளாவிட்டாலும், நாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம் என்பதை நமக்கு வேண்டியவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் சீனாவில் ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Are You Dead? (சீன மொழியில்: Si Le Me) என்ற செயலி சீனாவில் இந்தாண்டின் தொடக்கத்தில் மிகவும் பிரபலமடைந்த ஒரு பாதுகாப்பு சார்ந்த மொபைல் செயலி ஆகும். தனிமையில் வசிப்பவர்கள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.

    என்ன செய்யவேண்டும்?

    பயனர்கள் ஒவ்வொரு நாளும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்தச் செயலியைத் திறந்து, தாங்கள் நலமாக இருப்பதை உறுதிப்படுத்த அதில் கொடுக்கப்பட்டிருக்கும் பொத்தானை அழுத்த வேண்டும். பயனர் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு (48 மணிநேரம்) எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றால், செயலி தானாகவே, அந்த பயனர் பதிவு செய்துள்ள அவசரத் தொடர்பு எண்ணுக்கு (Emergency Contact) மின்னஞ்சல் அல்லது செய்தி மூலம் எச்சரிக்கை அனுப்பும்.

    தனிமையில் வசிக்கும் சுமார் 200 மில்லியன் சீன மக்களின் தனிமை மற்றும் பாதுகாப்பு கவலையைப் போக்குவதால் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கட்டணச் செயலியாக (Paid App) கிடைக்கிறது. இதன் விலை சுமார் 8 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.100 முதல் ரூ.115 வரை). சர்வதேச சந்தையில் இது Demumu என்ற பெயரில் கிடைக்கிறது.

    சீனாவில் மக்கள் தனியாக வசிப்பது அதிகரித்துள்ள நிலையில் இந்த செயலி கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இந்த செயலியின் பெயர் பேசுபொருளாகியுள்ளது.'அட பாவி நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா' எனும் தமிழ்பட காமெடி போல "Are You Dead?" நீங்கள் இறந்துவிட்டீர்களா? என குறுஞ்செய்தி வருவது பலருக்கும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். 

    இதனையடுத்து பயனர்களின் வேண்டுகோளுக்கிணங்க, "Are You Dead?" என்ற செயலியின் பெயரை "Are You Okay?" அல்லது "Are You Alive?" என மாற்றவும், முதியவர்களுக்காகத் தனிப்பயனாக்கப்பட்ட புதிய வசதிகளைச் சேர்க்கவும் அதன் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    • அவ்வளவு அன்பு இருந்தால், ஏன் அவற்றை உங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லக்கூடாது?
    • 9 வயதுச் சிறுவனை நாய்கள் தாக்கும்போது யார் பொறுப்பேற்க வேண்டும்?

    கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தெரு நாய்க்கடி தொடர்பான விசயங்களில் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.

    நிறுவனங்கள், சாலைகளில் இருந்து தெரு நாய்களை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மாற்றக்கோரி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

    இன்று விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.பி. அஞ்சாரியா ஆகிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன் தெரு நாய் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி விக்ரம் நாத், "கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்களுக்கு எதிரான வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தாத மாநிலங்களிடம் ஒவ்வொரு நாய்க்கடி, நாய்க்கடியால் உயிரிழப்பு அல்லது காயம் போன்றவற்றிற்காக பெரும் இழப்பீடு கேட்கப்படும். மேலும், தெரு நாய்களுக்கு உணவளிப்பவர்கள் மீது பொறுப்பும் கடமையும் நிர்ணயிக்கப்படும்.

    இந்த விலங்குகள் மீது உங்களுக்கு அவ்வளவு அன்பு இருந்தால், ஏன் அவற்றை உங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லக்கூடாது? இந்த நாய்கள் ஏன் தெருக்களில் சுற்றித் திரிந்து, மக்களை கடித்து பயமுறுத்த வேண்டும்?.

    இவ்வாறு நீதிபதி விக்ரம் நாத் தெரிவித்தார்.

    மற்றொரு நீதிபதி மேத்தா "9 வயதுச் சிறுவனை நாய்கள் தாக்கும்போது யார் பொறுப்பேற்க வேண்டும்? அந்த நாய்களுக்கு உணவளிக்கும் அமைப்பா? இந்தப் பிரச்சனையை நாங்கள் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?" என கேள்வி எழுப்பினார்.

    • கதிர் அறுவடை செய்து சூரியனுக்கு நன்றி செலுத்த கொண்டாடப்பட்டதே பொங்கல்.
    • இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகின்றது.

    உலக இந்துக்களால் வருட தொடக்கத்தில் கொண்டாடப்படும் பண்டிகையே தைப்பொங்கல் ஆகும். உழவர்களும், உழவுக் காளைகளுமே இந்தத் திருநாளின் நாயகர்கள்.

    கதிர் அறுவடை செய்து சூரியனுக்கு நன்றி செலுத்த கொண்டாடப்பட்டதே பொங்கல். சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க தொடங்குவதையே தை மாதப் பிறப்பு என்கிறோம். இதையே மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தி என்ற பெயரில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுகிறார்கள்.

    அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகின்றது. இதன்படி இந்த ஆண்டு தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பது தொடர்பான விளக்கத்தை அறிந்துக்கொள்ளலாம்.

    நாளை மறுநாள் தைப்பொங்கல். சூரிய பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் காலை 6 மணிக்கு சூரியன் உதயமாவதற்கு முன்பு பொங்கல் வைத்து, சூரியபகவானுக்கு படைத்து வழிபடவேண்டும். இதுவே சூரிய பொங்கல் ஆகும். இதற்கு நல்ல நேரம் பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

    காலை 6 மணிக்கு மேல் பொங்கல் வைத்து வழிபட நினைப்பவர்கள் பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரத்தை கவனிக்க வேண்டும்.

    அதன்படி, காலை 6 மணிக்கு மேல் பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 7. 45 மணி முதல் 8. 45 மணி வரை, 10.35 முதல் பகல் 1 மணிவரை.

    நல்ல நேரம் - காலை 10.30 முதல் 11 வரை, பிற்பகல் 1 மணி முதல் 01.30 வரை

    கெளரி நல்ல நேரம் - மாலை 06.30 முதல் 07.30 வரை

    எமகண்டம் - காலை 6 மணி முதல் 7.30 வரை

    ராகு காலம் - பிற்பகல் 01.30 முதல் மாலை 3 வரை

    • ஜெர்மனி வீராங்கனையிடம் நேர்செட் கணக்கில் தோல்வி.
    • கடந்த வாரம் நடைபெற்ற தொடரிலும் தொடக்க சுற்றிலேயே தோல்வியடைந்தார்.

    ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருக்கும் நிலையில், முதல் சுற்று போட்டி இன்று தொடங்கியது. ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாட வைல்டு கார்டு அனுமதி பெற்ற 45 வயதான வீனஸ் வில்லியம்ஸ், ஹோபார்ட் ஓபனில் விளையாடவும் வைல்டு கார்டு அனுமதி பெற்றார்.

    இன்று வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் ஜெர்மனியைச் சேர்ந்த தட்ஜனா மரியாவை எதிர்கொண்டார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 3-6 என நேர்செட்டில் கணக்கில் தோல்வியை சந்தித்தார்.

    கடந்த வாரம் நியூசிலாந்தில் நடைபெற்ற ஆக்லாந்து போட்டியிடும் வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார்.

    ஆஸ்திரேலியா ஓபனில் இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இரண்டு முறையும் தனது சகோதரி செரீனா வில்லியம்ஸிடம் தோல்வியடைந்துள்ளார்.

    மெல்போர்ன் பார்க்கில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபனில் 5 வருடங்கள் கழித்து விளையாட இருக்கிறார்.

    • முன்னணி நிறுவனங்களின் Water Heater-களும் ஒரே இடத்தில் கிடைக்கும்.
    • பொங்கல் சிறப்பு சலுகைகளில் விற்பனை நடைபெற்று வருகிறது.

    பெரும்பாலானவர்களுக்கு சொந்த வீடு என்பது கனவு... அப்படிப்பட்ட வீட்டில் தரமான பொருட்களை வாங்கி உபயோகப்படுத்தணும் என்று நினைப்பர். அதிலும் குறிப்பாக ஃபேன், வாட்டர் ஹீட்டர் போன்ற மின் சாதனங்களை தரமானதாக வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

     

    அப்படிப்பட்டவர்களுக்கு 52 வருடங்களாக நம்பிக்கையுடன் SK Electricals நிறுவனம் செயல்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் இந்தியாவின் No.1 Fan Dealer-ஆக விளங்குகிறது.

     

    SK Electricals கடைகளில் கிராம்ப்டன் (Crompton), உஷா (Usha), வி-கார்ட் (V Guard), ஓரியண்ட்(Orient), ஹேவல்ஸ் (Havells), அல்மோனார்ட் (Almonard), ஆட்டம்பெர்க் (Atomberg), சூப்பர் ஃபேன் (Super Fan), ரெமி (Remi), போலர் (Polar), சின்னி ஃபேன் (Cinni), போல் ஸ்டார் (Polstar) உள்ளிட்ட அனைத்து முன்னணி நிறுவனங்களின் Fan-களும் மற்றும் வீனஸ் (Venus), வி-கார்ட் (V Guard), எலாக் (Elac), ராகோல்ட் (Racold), ஏஓ ஸ்மித் (AO Smith), ஹேவல்ஸ் (Havells) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் Water Heater-களும் ஒரே இடத்தில் கிடைக்கும். இங்கு பொங்கல் சிறப்பு சலுகைகளில் விற்பனை நடைபெற்று வருகிறது.

     

    தரம், நம்பிக்கை, சிறந்த விலையில் SK Electricals-ல் நிறுவன கிளைகளில் வாங்கலாம். எங்களது கிளைகள்,

     

    1. என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்பா தெரு, பிராட்வே, அண்ணாசாலை ஸ்பென்சர் அருகில், அடையாளர் டெலிபோன் விரிவாக்கம் அருகில் மற்றும் தி.நகரில் அமைந்துள்ள கிளைகளுக்கு வாடிக்கையாளர்கள் வருகை தந்து பொங்கல் சிறப்பு சலுகை விலைகளில் தரமான மின்சாதன பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். 

    • பா.ம.க. தந்தை டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், மகன் டாக்டர் அன்புமணி தலைமையிலும் 2 பிரிவாக செயல்படுகிறது.
    • அ.தி.மு.க. கூட்டணியில் சேருவது என்றால் 20-ந்தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்.

    சென்னை:

    தேர்தலை சந்திக்க ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகள் மற்ற கட்சிகளை இணைத்து கூட்டணியை வலுப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

    அதேநேரம் சிறிய கட்சிகள் எந்த கூட்டணியில் இணைவது? எந்த கூட்டணியில் இணைந்தால் என்னென்ன லாபம்? என்று கணக்கு போட்டு கூட்டணிகளில் இடம்பிடித்து வருகின்றன.

    இப்போதைய நிலையில் எந்த கணக்கு போட்டாலும் தீர்வு கிடைக்காமல் தடுமாறுவது டாக்டர் ராமதாஸ்தான்.

    பா.ம.க. தந்தை டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், மகன் டாக்டர் அன்புமணி தலைமையிலும் 2 பிரிவாக செயல்படுகிறது. நான்தான் அதிகாரப்பூர்வமான பா.ம.க. யாராக இருந்தாலும் என்னிடம்தான் கூட்டணி பேச வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறி வந்தார்.

    அதே நேரம் கட்சியும் என்னிடம்தான் உள்ளது. கட்சியின் மாம்பழம் சின்னமும் என்னிடமும்தான் உள்ளது என்று கூறி வரும் டாக்டர் அன்புமணி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முறைப்பட அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துவிட்டார். கூட்டணியில் பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பதும் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    இந்த நிலையில் தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?, த.வெ.க.வா? எங்கு செல்வது என்று முடிவெடுக்க முடியாமல் டாக்டர் ராமதாஸ் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தால் அங்கு அன்புமணி இருக்கிறாரே என்று யோசிக்கிறார். தி.மு.க. பக்கம் சென்றால் எதிர்பார்த்த அளவுக்கு தொகுதிகள் கிடைக்காது என்ற சூழல். புதிய கட்சியான த.வெ.க.வுடன் இணைந்தால் கூடுதல் தொகுதிகள் கிடைக்கலாம். ஆனால் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்று யோசிக்கிறார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் சேருவது என்றால் 20-ந்தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும். 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பொதுக்கூட்ட மேடையில் அனைத்து தலைவர்களுடனும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். எந்த முடிவாக இருந்தாலும் வருகிற 22-ந்தேதிக்குள் ராமதாஸ் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

    • புதிதாக வெளியிடப்பட்ட டீசர் படம், கடை முகப்பு பலகை அல்லது ஒரு முக்கிய உட்புற டிசைனை பற்றிய முதல் தோற்றத்தை வழங்குகிறது.
    • இந்த நிறுவனம் ஏற்கனவே அதன் சாதனங்களை உள்ளூரில் உற்பத்தி செய்கிறது.

    லண்டனை தளமாகக் கொண்ட நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங், அதன் முதல் உலகளாவிய கடை இந்தியாவில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியது. இந்த அறிவிப்புடன், கடையின் தொழில்துறை வடிவமைப்பை குறிக்கும் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    இந்தப் புதிய இடம், வாடிக்கையாளர்கள் நத்திங் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் வடிவமைப்புத் தத்துவத்தை நெருக்கமாக அனுபவிப்பதற்கு பிரத்யேக இடமாக செயல்படும் என்று நத்திங் நிறுவனம் கூறியது. இது பிராந்தியத்தில் ஆன்லைனில் இயக்கப்படும் விற்பனை மாதிரியிலிருந்து ஒரு மாற்றத்தை குறிக்கிறது.

    டீசர் சிக்னேச்சர் அழகியலை வெளிப்படுத்துகிறது. புதிதாக வெளியிடப்பட்ட டீசர் படம், கடை முகப்பு பலகை அல்லது ஒரு முக்கிய உட்புற டிசைனை பற்றிய முதல் தோற்றத்தை வழங்குகிறது. 1:10 அளவில் "எலிவேஷன்" மற்றும் "பிளான்" காட்சிகளுடன் முழுமையான தொழில்நுட்ப கட்டிடக்கலை வரைபடமாக வழங்கப்படுகிறது - வடிவமைப்பு நிறுவனத்தின் வெளிப்படையான மற்றும் தொழில்துறை அடையாளத்துடன் ஒத்துப்போகிறது.

    இந்திய சந்தையின் முக்கியத்துவம் இந்தியாவில் முதல் உலகளாவிய முதன்மை நிறுவனத்தை நிறுவுவதற்கான முடிவு, நத்திங்கின் வளர்ச்சி மூலோபாயத்தில் நாட்டின் மையப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

    இந்த நிறுவனம் ஏற்கனவே அதன் சாதனங்களை உள்ளூரில் உற்பத்தி செய்கிறது. இந்த சில்லறை விற்பனை விரிவாக்கம், உலகளாவிய மின்னணு நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக நுகர்வோருக்கு அனுபத்தை கடத்தி செல்வதன் பரந்த போக்கை பிரதிபலிக்கிறது. இது வலுவான சமூக ஈடுபாட்டை உருவாக்குகிறது.



    ×