search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வினாத்தாள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • ஏ, பி, என இரண்டு வகையான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை 7.25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வை எவ்வித குழப்பம் இல்லாமல் நடத்த தேர்வுத் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளது.

    குறிப்பாக வினாத்தாள் கசியாமல் பாதுகாப்பாக வைக்கவும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பொதுத் தேர்வுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழி கையேடு வழங்கப்பட்டுள்ளது. அதில் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஏ, பி, என இரண்டு வகையான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டிலும் வினாக்கள் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் கேள்விகளின் வரிசை மாற்றப்பட்டு இருக்கும். ஒரு தேர்வு மையத்தில் உள்ள மாணவர்களுக்கு ஏ, பி, என 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும்.

    இந்த 2 வகையான வினாத்தாள் வரிசை எண் மாற்றப்பட்டு இருக்கும். இதனால் மாணவர்கள் அருகருகே இருந்தாலும் விடைத்தாளை பார்த்து எழுத முடியாது.

    இது குறித்து தேர்வுத்துறை அதிகாரியிடம் கேட்ட போது இந்த முறை 15 வருடத்திற்கு முன்பே இருந்து உள்ளது. ஏ, பி, சி, டி என 4 வகையான வினாத்தாள் தயாரிக்கப்படும். தற்போது 2 வகையில் வினாத் தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க முடியும் என்றார்.

    • திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடரும் குளறுபடி
    • கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    காட்பாடியை அடுத்த சேர்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டின் கீழ் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 74 கலை, அறிவியல் உறுப்பு கல்லூரிகள் உள்ளன.

    நவம்பர் முதல் வாரத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வரும் பல்கலைக்கழகப் பருவத் தேர்வின் போது முதுநிலை கணிதவியல் துறைக்கான 3-ம் ஆண்டு பருவத் தேர்வில் சிக்கலான பகுப்பாய்வு, கட்டமைப்பியல், வேறு பட்ட வடிவவியல் ஆகிய பாடங்களுக்கு 2021-ம் ஆண்டு வெளியான வினாத்தாள்கள் அப்படியே 2023 என ஆண்டை மட்டும் மாற்றி மறுபதிப்பு செய்து அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் குறித்து பல்கலைக் கழக நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், மேலும் ஒரு வினாத்தாள் குளறுபடி சம்பவம் வெளியாகி உள்ளது.

    அதன்படி, தற்போது நடை பெற்று வரும் பருவத் தேர்வில் முதுநிலை கணிதவியல் 2-ம் ஆண்டில் ரியல் அனலைசிஸ் பாடத்தில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான மறு தேர்வில் அளிக்கப்பட்ட வினாத்தாள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பருவத் தேர்வின்போது அளிக்கப்பட்ட வினாத்தாளை அப்படியே மாதத்தை மட்டும் மாற்றி அச்சிட்டு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் பல்கலைக்கழகம், அதன் கட்டுப்பாட்டிலுள்ள உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தொடர்ந்து வினாத்தாள் குளறுபடி விவகாரம் வெளியாகி வருவதை யடுத்து திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வு நடைமுறைகள், அவற்றில் காணப்படும் நிர்வாக முறைகேடுகள் குறித்து அரசு விரிவான விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வினாத்தாள்களை அரசு பள்ளிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு ஒவ்வொரு பள்ளிகளிலும் தேவைக்கேற்ப பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
    • தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களின் வினாத்தாள்களுமே வாட்ஸ்அப்பில் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி 27-ந்தேதிவரை நடக்கின்றன.

    இந்த தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த வினாத்தாள்களை அரசு பள்ளிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு ஒவ்வொரு பள்ளிகளிலும் தேவைக்கேற்ப பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் 4, 5ம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியாகி உள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களின் வினாத்தாள்களுமே வாட்ஸ்அப்பில் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வினாத்தாள் வாட்ஸ்அப்பில் வெளியானதால் பள்ளி ஆசிரியர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நாளை தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • 28-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது.

    சென்னை:

    தமிழக அரசு பாடத் திட்டத்தில் படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்குகிறது.

    6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நாளை தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    முன்னதாக கடந்த 15-ந்தேதி 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 28-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது.

    மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான ஒரே வினாத்தாள் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வந்த வினாத்தாள் முறையால் மாணவர்களை மதிப்பீடு செய்வதில் வேறுபாடு ஏற்படுகிறது.

    அதனால் அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரே மாதிரியான வினாத்தாள்களை பின்பற்றி தேர்வு எழுதினால் ஏற்றத்தாழ்வு ஏற்படாது என்று கருதி மீண்டும் பொதுவான வினாத்தாள் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு உள்ளது.

    அரசு தேர்வுத்துறையால் தயாரிக்கப்படும் இந்த வினாத்தாள்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்து தேர்வு நாளில் வினியோகிக்க வேண்டும். தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள், தொடர்புடைய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்ச ரிக்கை செய்யப்பட்டுள்ளது.

    அந்த அடிப்படையில் நாளை நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு பொதுவான வினாத்தாள் முறையில் தேர்வு நடைபெறுகிறது.

    ஏற்கனவே இருந்த இந்த தேர்வு முறையால் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. தற்போது அதுபோன்ற தவறுகள் எதுவும் எங்கும் நடைபெறாமல் மிகுந்த கவனத்துடன் வினாத்தாள்களை கையாள வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

    • 12 ஆயிரத்து 492 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 312 பேரும் அடங்குவர்.
    • 225 அலுவலக பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இன்று பிளஸ்-2 பொது தேர்வு தொடங்கியது.

    அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை தேர்வு நடக்கிறது.

    இந்த நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 225 பள்ளிகளை சேர்ந்த 26 ஆயிரத்து 804 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

    இதில் மாணவர்கள் 12 ஆயிரத்து 492 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 312 பேரும் அடங்குவர்.

    தேர்வு பணியில் 112 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், 112 துறை அலுவலர்கள், 7 வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், 27 வழித்தட அலுவலர்கள், 139 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் 1961 அறை கண்காணிப்பாளர்கள், 194 சொல்வதை எழுது பவர்கள் மற்றும் 225 அலுவலகப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடக்கிறது.
    • 23-ந்தேதி தேர்வுகள் அனைத்தும் முடிகின்றன. அதை தொடர்ந்து பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும், 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

    சென்னை:

    தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு இன்று தொடங்கியது.

    தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் இன்று 9, 10, 11, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடங்கி நடந்து வருகிறது.

    முதலில் மொழிப் பாடத்துக்கும் பின், அறிவியல், கணிதம், பொருளியல் உள்ளிட்ட மற்ற பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது. மாவட்ட அளவில், பொதுவான வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன.

    அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடக்கிறது.

    6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 19-ந் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    வினாத்தாள்களை ஆசிரியர்கள், பணியாளர்கள் மொபைல் போனில் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. வருகிற 23-ந்தேதி தேர்வுகள் அனைத்தும் முடிகின்றன. அதை தொடர்ந்து பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

    • நாள்தோறும் தலைமை ஆசிரியா்கள் அங்கு சென்று அந்நாளுக்குரிய வினாத்தாளைப் பெற்றுச் சென்று தோ்வை நடத்த வேண்டும்.
    • நடப்பு கல்வியாண்டின் முதல் பருவத்தோ்வு தொடங்கி உள்ளது.

     திருப்பூர்:

    தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம் வருமாறு:- நடப்பு கல்வியாண்டின் முதல் பருவத்தோ்வு தொடங்கி உள்ளது. இந்நிலையில் 4, 5 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாளைப் பின்பற்றி தோ்வு நடத்துமாறு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநா் அலுவலகம் ஆணை வெளியிட்டுள்ளது.

    இந்த வினாத்தாள்கள் வட்டாரக் கல்வி அலுவலகம் மூலம் குறுவள மையத்தை சென்றடைந்து, நாள்தோறும் தலைமை ஆசிரியா்கள் அங்கு சென்று அந்நாளுக்குரிய வினாத்தாளைப் பெற்றுச் சென்று தோ்வை நடத்த வேண்டும்.

    தொடக்க நிலையில் உள்ள மாணவா்களுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியா்களே அவா்களை மதிப்பீடு செய்யும் நடைமுறையே அறிவியல் பூா்வமாகவும், உளவியல் அடிப்படையிலும் சரியானது என மாவட்ட செயற்குழு தெரிவித்துள்ளது.எனவே மாணவா் நலனைக் கருத்தில் கொண்டு 4, 5 ம் வகுப்புகளுக்கான ஒரே வினாத்தாளைப் பின்பற்றி தோ்வு நடத்தும் பொதுத்தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×